ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
வான் அசிசா: பக்கத்தான் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்
பக்காத்தான் ரக்யாட் கட்சிகளுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களில் பக்கத்தான் தலைவர்கள் சந்திக்கவே இல்லை என்பதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்கூட்டணி நிலைத்திருப்பதே சந்தேகம் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டிருப்பது பற்றிக்…
அறிவிப்புப் பலகையில் ஜாவி இருப்பது ‘கட்டாயமல்ல’
மலாக்கா சீனப் பள்ளிகள் அவற்றின் அறிவிப்புப் பலகையில் ஜாவி எழுத்துகளைச் சேர்த்துக்கொள்வது கட்டாயமல்ல என மலாக்கா மலேசிய கலைக்கழகம்(இஸ்மா) விளக்கமளித்துள்ளது. . “ஊக்கமளிக்கிறோம். அது ஒன்றும் கட்டாயமல்ல”, என இஸ்மா மேலாளர் முகம்மட் நஸ்ருடின் அப்ட் ரஹ்மான் மலேசியாகினி தொடர்புகொண்டு கேட்டதற்குத் தெரிவித்தார்.
ஃபாஹ்மி: யுஎம்-மிடம் இரக்க உணர்வே இல்லை
இன்னும் மூன்று வாரங்களில் தேர்வுகள் என்ற நிலையில் தம்மையும் ஸவ்ஆன் ஷம்சுடினையும் உடனடியாக நீக்குவதற்கு மலாயாப் பல்கலைக்கழகம் செய்துள்ள முடிவு அதனிடம் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என முன்னாள் மாணவர் தலைவர் ஃபாஹ்மி சைனல் கூறினார். ஃபாஹ்மிக்கு இது இறுதி ஆண்டு. இந்தத் தண்டனை எதிர்பார்க்கப்பட்டதுதான் …
அமெரிக்க அறிஞர்: முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்வது ஏன்?
முஸ்லிம்கள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என நினைப்பது ஏன் என்பது அமெரிக்க இஸ்லாமிய கல்விமான் இப்ராகிம் மூசாவுக்குப் புரியவில்லை. “உலக மக்கள்தொகையில் 1.2 பில்லியன் பேர் முஸ்லிம்கள். அவர்களில் பலர் பெரும் பணக்காரர்கள், உலகின் எண்ணெய் தொழிலே அவர்களின் கைகளில்தான். “பிறகு ஏன் பாதுகாப்பில்லை என்று நினைக்க வேண்டும்?”, என்றவர்…
கடந்த ஆண்டில் ஊழல் அதிகரித்தது என்பதே மலேசியர்களின் கருத்து
மலேசியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர், அதாவது 49 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் ஊழல் அதிகரித்திருந்தது என நம்புகின்றனர். மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்று இதைக் காண்பிக்கிறது. அதே வேளை ஊழல் நாட்டின் கடுமையான பிரச்னைதான் என்ற எண்ணம் 77 விழுக்காட்டினரிடம் இன்னமும் இருக்கவே செய்கிறது என்பதும் அந்தக்…
ஜாவி-க்கு இடமளிக்க சீனப் பள்ளிகள் மறுப்பு
மலாக்கா சீனர் கல்வி முற்போக்குச் சங்கம், சீன மொழிப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் ஜாவி எழுத்துகளிலும் எழுதப்பட வேண்டும் என மாநில கல்வித் துறை கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது. அத்துறையின் இஸ்லாமியக் கல்விப் பிரிவுத் தலைவர் அஹமட் ஹமிஸி அபு ஹசான், மலாக்கா தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவிக்கை ஒன்று …
ரபிஸி: மன்னிப்பு கேட்க முடியாது, வாருங்கள் நீதிமன்றம் செல்வோம்
பிகேஆர் உதவித் தலைவரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி ரமலி தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று பிரதமர் நஜிப்பிடமும் அவரது துணைவியார் ரோஸ்மாவிடமும் கூறியுள்ளார். தாம் தமது அறிக்கையை நீதிமன்றத்தில் தற்காத்துக்கொள்ளப் போவதாக ரபிஸி தெரிவித்தார். கடந்த வாரம், பிரதமர் நஜிப்பின் வழக்குரைஞர்கள் 14 நாட்களுக்குள்…
அன்வார்- கிட் சியாங் கூட்டம் ஆட்சிக்கு வந்தால் யாரையும் விட்டு…
அன்வார் இப்ராகிமும் கிட் சியாங்கும் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தினால் மனம்போன போக்கில் கைது செய்வார்கள் என எச்சரிக்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். இந்த அச்சம்தான் பிஎன்னை ஆட்சியில் வைத்துள்ளது. மற்றபடி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு எல்லாம் காரணமில்லை என முன்னாள் பிரதமர் கூறினார்.…
ஜாஹிட்: ஓடிப்போனவர்கள் திரும்பி வருவார்கள்
இப்போது வெளிநாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் அல்வின் டானும் சமூக ஆர்வலர் அலி அப்துல் ஜலிலும் இறுதியில் மலேசியாவுக்குத் திரும்பி வருவார்கள் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நம்புகிறார். “எனக்குத் தெரிந்த நண்பர். 1974-இல் மாணவர் தலைவராக இருந்தவர். வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். 20 ஆண்டுகள்…
‘ஆங்கிலத்தில் ஏதோ ஒன்று சரியில்லை’
பட்டதாரிகள் பல ஆண்டுகள் ஆங்கிலம் கற்ற பின்னரும் அம்மொழியில் சரளமாக உரையாட முடியாமலிருப்பது ஏன் என்பது கல்வி அமைச்சர் முகைதின் யாசினுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. துணைப் பிரதமருமான முகைதின், மலேசிய உயர்க் கலவி செயல்திட்டம் மீதான கலந்துரையாடலைத் தொடக்கிவைத்துப் பேசினார். “ஒரு மொழியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் …
சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியில் பிஎன்னுக்கு ஆர்வமில்லை
மாநில எதிரணித் தலைவர் பதவிக்கு இன்னொருவரை நியமிப்பதில் பிஎன் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் அப்துல் ஷுக்கூர் இட்ருஸ் கூறினார். ஏற்கனவே எதிரணித் தலைவராக இருந்த சுங்கை பூரோங் சட்டமன்ற உறுப்பினர் ஷம்சுடின் லியாஸ் நேற்று அப்பதவியிலிருந்து விலகினார். எதிரணித் தலைவர் பதவி ஏற்பவர் …
பங்: குற்றமற்றவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை
எவரும், எதிரணியினர் உள்பட, தேச நிந்தனைச் சட்டத்தை வைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் முடிவினால் கலக்கமடைய வேண்டிய அவசியமே இல்லை என்கிறார் பங் மொக்தார் ரடின். அச்சட்டம் எதிர்ப்பை ஒடுக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பிறகும் சிலர் அதைக் கண்டு அஞ்சுவது ஏன் என்று …
‘கொலைகார’ வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் விரைந்து வெளியேறுகிறார்கள்
மியான்மார் நாட்டவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஒரு வீடு அங்கிருப்பதால் புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் கம்போங் பிசாங் இப்போது உலகளவில் பிரபலமாகி விட்டது. ஆனால், அங்குள்ளவர்கள் முடிந்த விரைவில் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடத்தான் விரும்புகிறார்கள். “ஆனால், மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுவதும் எளிதல்ல. நிறைய செலவாகும். அதே நேரத்தில் இங்கு …
கீர் தோயோவின் இறுதி முறையீடு: இன்று விசாரணை
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் கீர் தோயோ, ஊழல் குற்றச்சாட்டையும் ஓராண்டுச் சிறைத் தண்டனையையும் தள்ளுபடி செய்யக் கோரி செய்துகொண்ட இறுதி முறையீடு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழு அதை விசாரிக்கிறது. 2000-இலிருந்து 2008-வரை சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்த கீர், தம் …
அன்வாரின் பட்டம் பறிக்கப்பட்டதற்கு அஸ்மின் ஆதரவு அளித்தார்
அன்வார் இப்ராகிமின் டத்தோ ஸ்ரீ பட்டம் பறிக்கப்படுவதற்கு அரண்மனை மேற்கொண்ட நடவடிக்கையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி ஆதரித்தார் என்று பிகேஆரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாட்ருல் ஹிசாம் ஷாஹரின் இன்று கூறிக்கொண்டார். அஸ்மின் சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர். அம்மன்றம் பட்டத்தை பறிக்கும் முடிவை…
குர்ஆன் எரிக்கப்பட்டதாகக் கூறிய மஷிடாவிடம் போலீஸ் விசாரணை
கெடாவில் சீனர் சமூகத்தினர் குர்ஆனை எரித்தார்கள் என்று குற்றம்சாட்டிப் பேசிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிமிடம் போலீஸ் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தது. டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 90 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஏஜெண்டா டெய்லி கூறியிருந்தது. வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது பற்றி …
பிரதமர்: ‘பரஸ்பர மரியாதை’ குறைந்துவிட்டது, அதனால் தேச நிந்தனைச் சட்டம்…
மலேசியாவில் ஜனநாயகம் “செழிப்பாக” உள்ளதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இனங்களிடையே “பரஸ்பர மரியாதை” குறைந்துபோனதால் 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்றார். “இனங்களுக்கிடையே துருவங்கள்போல் பிரிந்துவாழும் போக்கு அதிகரித்து வரும்போது நாட்டின் பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவது எப்படி?”. நஜிப் இன்று மாதாந்திர…
பக்கத்தான் எதிர்காலம் குறித்து கிட் சியாங் கவலை
பக்கத்தான் 14-வது பொதுத் தேர்தல்வரை நிலைத்திருக்குமா என்ற சந்தேகம் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குக்கே வந்துவிட்டது. அக்கூட்டணியில் நிலமை சரியில்லை என்பதை ஒப்புக்கொண்ட கிட் சியாங், ஆறு மாதங்களாக அது கூடிப் பேசவே இல்லை என்றார். “14வது பொதுத் தேர்தலில் போட்டியிட இந்த முத்தரப்புக் கூட்டணி…
80 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்தைக் காலி செய்ய உத்தரவு
பல தலைமுறைகளாக லாடாங் செகாம்புட் கிராமத்தில் வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்கள் இப்போது அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் இடத்தைக் காலி செய்யும்படி இரண்டு மேம்பாட்டு நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவைக் கொடுத்துள்ளன. கிராமத் தலைவர் எம்.எல்லையா,64, அக்குடும்பங்கள் 1940-களிலிருந்து அங்கிருந்து வருவதாகக் …
ஷம்சுடின் சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்
பல தடவை பொதுக்கணக்குக் குழு(பிஏசி)த் தலைவர் பதவி கொடுக்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த முகம்மட் ஷம்சுடின் லியாஸ் சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியை விட்டும் விலகினார். பதவி விலகல் கடிதத்தைச் சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோவிடம் ஒப்படைத்த அவர், தமக்குக் கொடுக்கப்பட்டிருந்த டோயோடா கேம்ரி காரையும் மாநில அரசிடம் …
அல்வின் டானின் கடப்பிதழ் இரத்துச் செய்யப்படுகிறது
பாலியல் செய்திகளையும் படங்களையும் வலைத்தளத்தில் பதிவிடும் அல்வின் டான், சமூக ஆர்வலரான அலி அப்ட் ஜலில் ஆகியோரின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படுவதைக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபா இப்ராகிம் உறுதிப்படுத்தினார். “டான் பெயரைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டோம். அலியும் விரைவில் அப்பட்டியலில் இடம்பெறுவார். விரைவில் அவர்களுக்குக் …
பெர்மாத்தா விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்கிறார் பிகேஆர் பிரதிநிதி
பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற தாமான் மேடான் சட்டமன்ற உறுபினர் ஹனிசா தல்ஹா, நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று கூறிவிட்டுத் திரும்பினார். பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் பெர்மாத்தா திட்டத்துக்கு பட்ஜெட்டில் பெருந் தொகை ஒதுக்கப்பட்டதைக் குறைகூறியிருந்தது பற்றி விசாரிப்பதற்காக போலீசார் அவரை அழைத்திருந்தனர். தம் …
மகாதிர்: ஒரு வெள்ளையரைப் பிரதமராக்கினால்கூட நல்லாத்தான் இருக்கும்
மலேசிய விமான நிறுவனத் தலைவராக ஜெர்மானியர் ஒருவரை அமர்த்தும் அரசாங்க முடிவை விடாமல் குறைசொல்லிவரும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட், மலேசியாவுக்கு வெள்ளையர் ஒருவரைப் பிரதமராக நியமித்தால்கூட நன்றாகத்தான் இருக்கும் எனக் கிண்டலடித்துள்ளார். “நினைப்பதற்கே வருத்தமாக இருக்கிறது. நம்மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்கிறபோது ஒரு நாள் பிரதமர் …


