செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சிஐஜே கண்டனம்

பத்திரிகைச்  சுதந்திரத்துக்காக  போராடும்  அமைப்பான சுதந்திர  இதழியல்  மையம் (சிஐஜே), த  மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) மீது போலீசார்  நடத்திய  அதிரடிச்  சோதனையை  வெட்கக்கேடானது  என்று  வருணித்ததுடன்  கைது  செய்யப்பட்ட  செய்தியாசிரியர்கள்  மூவரையும்  உடனே  விடுவிக்க  வேண்டும்  என்றும்  கோரிக்கை  விடுத்துள்ளது. ஆட்சியாளர்  மாநாடு பற்றித்  தப்பான செய்தியை …

த மலேசியன் இன்சைடர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

  கிளந்தான் மாநில ஹுடுட் சட்ட மசோதா ஆட்சியாளர்கள் மன்றம் நிராகரித்து விட்டது பற்றிய செய்தி அறிக்கைக்காக த மலேசியன் இன்சைடர் நிருவாக ஆசிரியர் லையோனல் மொராஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆசிரியர்களான அமின் ஷா இஸ்கந்தர் மற்றும் ஸுல்கிப்பிலி சுபாங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அம்மூவரும்…

சாபா பிகேஆரும் டிஏபியும் பாஸுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டன

பக்கத்தான்  ரக்யாட்  கூட்டணி  கட்டங்கட்டமாக  உடைந்து  வருவதுபோல்  தெரிகிறது. இப்போது  சாபாவில்  பிகேஆரும் டிஏபி-யுடன்  சேர்ந்து  கொண்டு பாஸுடனான  உறவுகளை முறித்துக் கொண்டிருக்கிறது. சரவாக்கில்  மாநில  பக்கத்தான்  ரக்யாட் கூட்டணியிலிருந்து  டிஏபி  விலகிக்  கொண்ட  ஒரு  வாரத்தில்  இது  நிகழ்ந்துள்ளது. சாபா  பிகேஆர்,  டிஏபி  தலைவர்கள்  இன்று  பிற்பகல் …

டிஎம்ஐ அலுவலகத்தில் ஓர் அதிரடிச் சோதனை

சுமார் ஒரு  டஜன்  போலீசாரும்  மலேசிய தொடர்பு, பல்லூடக  ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் த  மலேசியன்  இன்சைடர்(டிஎம்ஐ)  அலுவலகத்தில்  இன்று  மாலை  அதிரடிச்  சோதனை ஒன்றை நடத்தினார்கள். டிஎம்ஐ  நிர்வாக இயக்குனர் லையோனல்  மொராய்ஸ்,  சுல்கிப்ளி  சூலோங்  ஆகியோர்  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்கப்படுவார்கள்  எனத்  தெரிகிறது. ஹுடுட் …

ஐஜிபி-யைக் கண்டிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

போலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி) காலிட்  அபு  பக்காரைக்  கண்டிப்பதற்காக  பக்கத்தான்  ரக்யாட்  கொண்டு  வந்த  தீர்மானத்தை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  தள்ளுபடி  செய்தார். ஐஜிபி  அவரின்  அதிகாரத்துக்கு  ஏற்பவே  செயல்பட்டு  வந்திருக்கிறார்  என்பதால்  அத்தீர்மானத்தை  ஏற்க  வேண்டிய  அவசியமில்லை  என  மக்களவைத்  தலைவர்  பதில்  அளித்திருப்பதாக …

ஹாடி: பக்கத்தானின் எதிர்காலம் பற்றி நான் அறியேன்

இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கிடம்  செய்தியாளர்கள் பக்கத்தான்  ரக்யாட்டின்  எதிர்காலம்  பற்றி  வினவினர். “எதிர்காலம்? எனக்குத்  தெரியாது”, என்றவர்  ஹாடி  சுருக்கமாக  பதிலளித்தார். ஹுடுட்  சட்டவரைவைக்  கொண்டுவருவதில்  பாஸ்  கட்சி  முனைப்பாக இருப்பதால்  பக்கத்தான் ரக்யாட்  கூட்டணியில் டிஏபி மற்றும்  பிகேஆருடனான  அதன் …

சமூக ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்க சுங்கத் துறை தயார்

பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)  பற்றி  நேரடி  விளக்கம்  பெற  ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்  விரும்பினால்  அவர்களுக்கு  இலவசமாகவே  விளக்கமளிக்க  சுங்கத்  துறை  முன்வந்துள்ளது. சுங்கத்  துறை,  ஜிஎஸ்டி-எதிர்ப்பு  சமூக  ஆர்வலர்கள்,  கடந்த  வாரம்  கூட்டரசு  சுங்கத்  துறையை   முற்றுகையிட்டபோது  கொண்டுவந்த  106  கேள்விகளுக்கும்  அதன்  இணையத்தளத்தில் பதிலளித்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. “அவர்களுக்கு …

ஜிஎஸ்டியால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்: சீன வணிகர்களின் கருத்து

சீன  வணிகர்களிடையே  நடத்தப்பட்ட ஓர்  ஆய்வு,  இவ்வாண்டும்  அடுத்த ஆண்டும்  நாட்டின்  பொருளாதாரத்துக்குச் சாதகமாக இரா  என்பதைக்  காண்பிக்கிறது. மலேசிய  சீன  வர்த்தக, தொழிலியல்  சங்கங்களின்  கூட்டமைப்பு (ஏசிசிசிஐஎம்) நடத்திய  அந்த  ஆய்வு  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)தான்  அதற்குக்  காரணம்  என்கிறது. ஆனால், 2017-இல்  நிலைமை  மேம்படுமாம். புதிய …

ரபிஸி, ஃபாரிஸ், ஹிஷாமுடின் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

பிகேஆர் தலைமைச்  செயலாளர்  ரபிஸி ரம்லி, கித்தா லவான்  ஒருங்கிணைப்பாளர்  ஃபாரிஸ்  மூசா, சமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்  ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி  அறிவித்துள்ளது. அன்வார்  இப்ராகிமின்  விடுதலைக்காக  நடத்தப்படும் பேரணி தொடர்பில் ரபிஸி வார  இறுதியில்  கைது செய்யப்பட்டு  மூன்று  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டார். ஃபாரிஸும்  ஹிஷாமுடினும் …

புதிய பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் ஐஎஸ்ஏ போல் தடுப்புக் காவலில் வைக்க…

2015 பயங்கரவாத-எதிர்ப்புச்  சட்டவரைவு(பொடா), ஒருவரை  விசாரணையில்லாமல் காலவரையின்றிக்   காவலில் வைக்க  இடமளிக்கிறது. அதை  எதிர்த்து  நீதிமன்றத்தும்  செல்லவும்  இயலாது. சந்தேகப்  பேர்வழிகள், தொடக்கக்  கட்டமாக  59  நாள்களுக்குத் தடுத்து வைக்கப்படலாம். அதன்  பின்னரே  பயங்கரவாதத்  தடுப்பு  வாரியத்தில் முன்னிலை  படுத்தப்படுவார்கள். அவ்வாரியம்  கூடின பட்சம்  ஈராண்டுவரை  அவர்களைத்  தடுத்து …

லீ குவான் நாடாளுமன்றத்தில் இறந்தார்: இதுதான் உலகத் தர ஆங்கிலாமா?

மலேசியாவின் ஆங்கில மொழி திறன் சிங்கப்பூரை விட உயர்ந்தது என்று இந்த நாட்டின் துணை கல்வி அமைச்சராக இருக்கும் பி. கமலநாதன் கூறிக்கொண்டார். அந்த துணை கல்வி அமைச்சரின் கூற்று எந்த அளவுக்கு உண்மையானது என்று எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு இந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் சான்று வழங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு…

கட்சித் தலைமையகத்தில் அதிரடிச் சோதனை ஒரு ‘மட்டுமீறிய நடவடிக்கை’

நேற்று  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  பிகேஆர் தலைமையகத்தில்  போலீஸ்  நடத்திய  அதிரடிச்  சோதனையும்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி ரம்லி  தொடர்ந்து  தடுக்கப்பட்டு  வைத்திருப்பதும் ‘மட்டுமீறிய  நடவடிக்கை’ என  பிகேஆர்  இளைஞர்  பிரிவு சாடியுள்ளது. “தடுப்புக்  காவலில்  உள்ள ரபிஸியை  (அலுவலகத்துக்கு) அழைத்து  வந்து கித்தா  லவான்  பேரணிகள்…

ரபிஸியின் சுற்றறிக்கைக்காக பிகேஆர் தலைமையகத்தில் போலீஸ் திடீர்சோதனை

  இன்று பின்னேரத்தில் போலீசார் பிகேஆரின் தலைமையகத்தில் அதன் தலைமைச் செயலாலர் ரபிஸி ரம்லியின் அறைக் கதவை உடைத்து திடீர்சோதனை மேற்கொண்டனர். ரபிஸி கடந்த வெள்ளிக்கிழமை பிகேஆரின் உறுப்பினர்களை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வெலியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டார். ரபிஸியின்…

மாணவி இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ததை அமைச்சர் மறுக்கிறார்

. பதிமூன்று வயது பள்ளி மாணவியை இஸ்லாமிய சமயத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதை சரவாக் மாநில அமைச்சர் பாத்திமா அப்துல்லா இன்று மறுத்தார். சப்ரினா எங்கும்பாங் என்றழைக்கப்படும் அந்த முதல் படிவ இபான் மாணவி இஸ்லாத்திற்கு மாற விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அப்பெண் அதிகாரப்பூர்வமாக மாநில இஸ்லாமிய இலாகாவால்…

கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன

பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  பிகேஆர்  உதவித்  தலைவர்கள்  தியான்  சுவா,  ரபிஸி  ரம்லி  ஆகியோர்  கைது  செய்யப்பட்டதன்  விளைவாக  மக்களுக்கு  பிஎன்  மீதுள்ள  வெறுப்புத்தான்  அதிகரிக்கும். பக்கத்தான்  தலைவர்களையும்  மற்ற  சமூக  ஆர்வலர்களையும்  கைது  செய்த  போலீசாரின்  கடும்  நடவடிக்கையைக்  கண்டித்த  பாஸ்  உதவித்  தலைவர் …

பாஸ் உதவித் தலைவர்: ஹாடியின் ஹுடுட்டில் பிரம்படி மட்டுமே இருக்கும்

பாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  தாக்கல்  செய்யவுள்ள தனி  உறுப்பினர்  சட்டவரைவில்  ஹுடுட் தண்டனைகள்  பிரம்படிகள்  என்ற  அளவில்தான் இருக்கும்  என்கிறார்   பாஸ்  உதவித்  தலைவர்  ஹுஸாம். ‘ஸினா’ (திருமணத்துக்கு முந்திய பாலுறவு), மது  அருந்துதல், ‘கசாவ்’(ஒருவர் ஸினா குற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டுதல்)  ஆகிய  குற்றங்களுக்கு மட்டுமே…

பேச்சுரிமை இருக்கிறது: ரோஸ்மாவையே குறை சொல்ல முடிகிறது, இல்லையா?

நாட்டில்  பேச்சுரிமை  இல்லையென்று  சொல்வது யார், இருக்கிறது  என்று  அடித்துச்  சொல்கிறார்  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டாஹ்லான். “அரசாங்கத்தின்  திறமைக்குறைவு  பற்றிப்  பேச  வேண்டுமா, ஊழலை  பற்றிப் பேச  வேண்டுமா? இந்நாட்டில்  எதைப்  பற்றியும்  பேசலாம். “ரோஸ்மாவைப்  பற்றிக்கூட பேசுகிறார்கள். ரோஸ்மா  அதற்கெதிராக  நடவடிக்கை  எடுக்கவில்லையே”,…

தடையை மீறி பேரணி நடக்கும்; கித்தா லவான் திட்டவட்டம்

கித்தா  லவான்  பேரணியைத்  தடுத்து  நிறுத்த  அரசாங்கம்  முயன்றாலும் பேரணி  திட்டப்படி  நடக்கும்  என்று ஏற்பாட்டாளர்கள்  கூறுகின்றனர். பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  மக்கள்  நலனைக் கவனிக்கத்  தவறிவிட்டார்  அதனால்தான்  மக்கள்  ஒன்றுகூடி  பேரணி  நடத்துவது அவசியமாகி  விட்டது  என  கித்தா  லவான்  செயலகம்  கூறிற்று. “மலேசியர்களாகிய  நாம்தான் …

மாட் சாபு முகமூடி அணிந்திருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார்

பாஸ் கட்சியின் துனைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவினரால் நள்ளிரவில் செபராங் ஜெயா, பினாங்கில் கைது செய்யப்பட்டார். இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்வாரை விடுவிக்கக் கோரும் கித்தா லவான் நிகழ்ச்சியில் மாட் சாபு பங்கேற்பதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று…

ஹிசாம் ரயிஸ் பல நபர்களால் “கடத்தப்பட்டார்”

  சமுதாய ஆர்வலர் ஹிசாம் ரயில் கித்தா லவான் குந்தியிருப்பு போராட்ட இடத்திற்கு அருகில் பல நபர்களால் "கடத்தப்பட்டார்". ஜாலான் துன் பேராக் வழியாக டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கையில் இச்சம்பவம் நடந்தது. நடைபாதையிலிருந்து அவரை பிடித்து இழுத்து ஒரு வெள்ளி நிற காரினுல் திணிக்கப்பட்டார். அக்காருக்கு…

போலீசும் சமூக ஆர்வலர்களும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள்

போலீஸ்,  நேற்றிரவு நடைபெற்ற  உள்ளமர்வுப் போராட்டத்தில்  கோலாலும்பூர்  மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) அதிகாரி  ஒருவர்  தாக்கப்பட்டதை  அடுத்துத்தான்  சமூக  ஆர்வலர்களைக்  கைது  செய்ததாகக்  கூறுகிறது. அச்சம்பவத்தைக்  கண்ட  பின்னரே  இரண்டு  சட்டமன்ற  உறுப்பினர்கள்  உள்பட  அறுவரைப்  போலீஸ்  கைது  செய்ததாக  டாங் வாங்கி  போலீஸ்  தலைவர்  சைனோல்  சமா …

பிகேஆர்: கட்சி உறுப்பினர்கள் கித்தா லவான் பேரணியில் பெருமளவில் கலந்துகொள்ள…

பிகேஆர்,  சனிக்கிழமை  கோலாலும்பூரில்  நடைபெறும்  கித்தா  லவான்  பேரணியில்  கட்சி  உறுப்பினர்கள்  பெருமளவில்  கலந்துகொள்வதை  ஊக்குவிக்க  வேண்டும்  எனக்  கட்சித்  தலைவர்களுக்கு  உத்தரவிட்டிருக்கிறது. என்ஜிஓ-களால்  ஏற்பாடு  செய்யப்படும்  அப்பேரணியை  வெற்றிபெறச் செய்ய பிகேஆர்  முழுக்  கடப்பாடு  கொண்டிருப்பதாக  அதன்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  இன்று  ஓர்  அறிக்கையில் …

மீரியில் மாணவி ஒருவரை ‘மதமாற்றம்’ செய்யும் முயற்சி

14-வயது தியாக்குருடினை  மதமாற்றம்  செய்ய  முயன்று  அம்மாணவன்  பராகுவாட்  அருந்திய  வழக்கு  இன்னும்  தீர்க்கப்படாத  நிலையில்  சரவாக்கிலும்  இதேபோன்றதொரு  சம்பவம்  நிகழ்ந்துள்ளது. இதில்  13-வயது  இபான்  பெண்ணான  சப்ரினா  அனாக்  ங்கும்பாங்- கை  ஓர்  ஆசிரியரும்  மற்றவர்களும்  வலுக்கட்டாயமாக  மதமாற்றம்  செய்ய  முயன்றார்களாம். அது  பற்றி  அப்பெண் மார்ச் …