மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினர் தற்காலிகமாக 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) முறையைச் செயல்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். "பொதுத்துறை மட்டுமின்றி, சில நிறுவனங்கள்…
சிருலின் தாயார் மகாதிரை சந்திக்க விரும்புகிறார்
பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார், போலீஸ் அதிரடிப் படை முன்னாள் உறுப்பினரான சிருல் அஷார் உமரின் தாயார் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். அல்டான்துன்யாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தம் மகனைப் பற்றி பியா சமட் முன்னாள் பிரதமரிடம் “ஏதோ சொல்ல” விரும்புகிறார் என …
பிணையில் வெளிவந்த ஸூனார் மீண்டும் கைது
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 9 தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனார் பிணைப்பணம் கட்டிவிட்டு வெளியில் வந்த 30-வது நிமிடம் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஸுனார்- அவரது இயற்பெயர் சுல்கிப்ளி அன்வார் அல்ஹாக்- டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் …
டெல்கோவுடன் அரசாங்கம் சமரசம் செய்துகொண்டதால் என்ஜிஓ-கள் ஆத்திரம்
முன்கூட்டி கட்டணம் செலுத்தி பெறும் சேவைக்கான கட்டணத்தை அதிகரித்த தொலைதொடர்ப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் அவை பேசும்நேரத்தைக் கூட்டுவதாக சொன்னதை ஏற்றுக்கொண்ட அரசாங்கத்தின்மீது சமூக அமைப்புகள் “வெறுப்படைந்துள்ளன”. “முன்கூட்டி பணம் செலுத்திப் பெறப்படும் சேவைக்கு 6% ஜிஎஸ்டி விதித்த டெல்கோ நிறுவனங்களுடன் அரசாங்கம் சமரசம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு…
மசீச இளைஞர்கள்: மகாதிரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எங்கே?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைசொல்வதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எல்லைமீறிச் சென்று விட்டதாக மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் கூறினார். நஜிப் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காததால் அவருக்கு மக்களின் ஆதரவு குறைந்து விட்டதாக மகாதிர் கூறுவது பற்றிக் கருத்துரைத்த சோங்,…
விடை தேடுகிறார் மகாதிர்; உண்மை வெளிவரவேண்டிய நேரம் வந்து விட்டது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பல விவகாரங்களுக்கு விடை தேடுகிறார் என்கிறார் அம்னோ மூத்த உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா. குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான அவரை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது உண்மை வெளிவர வேண்டும் என்றார். “உண்மையான பதில்களும் இவ்விவகாரங்களின் பின்னணியில் …
பாஸ்: “ஹலால் ஜிஎஸ்டி” என்பது தவறு
ஜிஎஸ்டி வரியை "ஹலால்" என்று கூறுவது தவறு என்று தேசிய ஃபாட்வா மன்றம் பிரதமர் நஜிப்புக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பாஸ் அம்மன்றத்தை இன்று கேட்டுக்கொண்டது. புதன்கிழமை அமலாக்கம் கண்ட ஜிஎஸ்டி மலேசிய சூழ்நிலையில் "ஹலால் அல்ல" என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் துவான்…
டிஎம்ஐ கைதில் அரசியல் நோக்கம் கொண்ட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை
த மலேசியன் இன்சைடர் செய்தியாசிரியர்களைக் கைது செய்யுமாறு “அரசியல் நோக்கம்கொண்ட கட்டளை” எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார். அவர்களை விசாரணை செய்யும் பொறுப்பை போலீசிடமே விட்டுவிட்டதாக ஜாஹிட் குறிப்பிட்டார். “அவர்களைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டுமென்று அரசியல் நோக்கில் கட்டளை …
அமைச்சர்: நேற்று ஜிஎஸ்டிமீது 23,000 புகார்கள்
நேற்று அமலாக்கம் கண்ட பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)மீதான புகார்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கத்துக்கு முரண்பாடான அறிக்கைகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. நேற்று மைகேரா ஜிஎஸ்டி பயன்பாட்டுச்செயலியில் 23,000 புகார்கள் பதிவானதாக உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசான் மாலேக் கூறினார். இது, ஜிஎஸ்டி புகார்கள் பற்றி …
ஜிஎஸ்டி: 800 புகார்கள்தானா? ஆச்சரியப்படுகிறார் அமைச்சர்
நேற்று அமலாக்கத்துக்கு வந்த பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) தொடர்பில் 800 புகார்களே வந்துள்ளதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான். இது, அப்புதிய வரிக்கு ஒரு நல்ல தொடக்கம் என்பதைக் காண்பிப்பதாக அவர் கூறினார். “30 மில்லியன் மலேசியர்கள் இருப்பதால் 8,000 அல்லது 18,000 …
மகாதிர்: அல்டான்துன்யாவைக் கொலை செய்யச் சொன்னது யார்?
அல்டான்துன்யாவைக் கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பது மக்களுக்கு விளங்காத மர்மமாக உள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட். போலீஸ் அதிரடிப் படையின் முன்னாள் வீரரான சிருல் அஸ்ஹாரின் கூற்றை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் கோரமான அக்கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரியவரும் என்பதை அவர் …
மகாதிர்: யாரும் நஜிப்பை நம்பவில்லை; பிஎன் தோல்வி உறுதி
பிரதமர் நஜிப் பதவி இறங்கினாலொழிய அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன்னும் தோல்வியுறும் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் பதவியேற்று ஆறு ஆண்டுகள் ஆகும் வேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு நஜிப்மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர். நஜிப் இதுவரை அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு …
ஜிஎஸ்டி “ஹலால்” என்கிறார் நஜிப்
பிரதமர் நஜிப் இன்று பொருள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) தற்காத்து பேசியதோடு அந்த வரியை "ஹலால்" என்று பிரகடனம் செய்தார். அந்த வரி இன்று முதல் அமலாக்கம் காண்கிறது. இன்று உலக ஹலால் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் நஜிப், "தேசிய ஃபாட்வா மன்றம் ஜிஎஸ்டி…
தொழிலாளர் தினத்தில் ஜிஎஸ்டி-க்கு எதிராக கித்தா லவான் பேரணி
கித்தா லவான், தொழிலாளர் தினமான மே முதல் நாளில் பொருள், சேவை வரிக்கு எதிரான பேரணி ஒன்றை ஏற்பாடு செய்கிறது. இது, அவ்வமைப்பு, பிப்ரவரி 10-இல் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதிலிருந்து நடத்தும் மூன்றாவது பேரணியாகும். “அரசியல்வாதிகள், கல்விமான்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் என 120-க்கு …
‘அன்வாரின் தொகுதி காலியாக உள்ளது’
அன்வார் இப்ராகிம் இனியும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி அல்லர் என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா உறுதிப்படுத்தினார். மார்ச் 16-இலேயே மன்னிப்பு வாரியம் அன்வாரின் மனுவை நிராகரித்திருக்கிறது என்றும் ஆனால் அதன் முடிவு இன்றுதான் தமக்குத் தெரிய வந்தது என்றும் பண்டிகார் கூறினார். ஆக, பெர்மாத்தாங் …
எம்பிகள்: ரசாக் விடுவிக்கப்பட்டதற்குச் சரியான விளக்கம் தேவை
அல்டான்துன்யா ஷாரீபு கொலைக்கு உடந்தையாக இருந்த அப்துல் ரசாக் பகிண்டா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யாததற்கு புத்ரா ஜெயா கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என எதிரணி எம்பிகள் இருவர் கூறினர். “அமைச்சரின் பதில் வழக்கத்துக்கு மாறானதாகவும், முரண்பாடு மிக்கதாகவும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கிறது. அதற்குக் கூடுதல் விளக்கம் தேவை. “முதலில்…
ஊடக பதிப்பாளரும் செய்தியாசிரியரும் விடுதலை
தி எட்ஜ் செய்திதாளின் பதிப்பாளர் ஹோ கேய் தாட்டும் மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) தலைமை செயல் அதிகாரி ஜகபர் சாதிக்கும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர்களின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். த மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்திக்காக தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, கைதான 24-மணி …
ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் ‘திரும்பவும்’ சுங்கத் துறை சென்றார்கள்
ஒரு வாரத்துக்குமுன் பொருள், சேவை வரிமீது 106 கேள்விகளுடன் கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறையை முற்றுகையிட்டபோது கைதான ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்களில் சுமார் பன்னிரண்டு பேர் இன்று திரும்பவும் அங்கு சென்றார்கள். ஆனால், ஒரு மாற்றம். இப்போது அவர்கள் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவிக்க அங்கு செல்லவில்லை. தங்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்ததற்கு …
அன்வாரின் முயற்சியால் பால் கிடைக்கிறது, கொசுத் தொல்லை குறைந்தது
இரண்டு மாதங்களாக சுங்கை பூலோ சிறையில் இருந்துவரும் அன்வார் இப்ராகிம் அச்சிறைச்சாலையில் சில ‘சீரமைப்புகளை’க் கொண்டு வந்திருக்கிறார். இப்போது அங்கு சிறையில் இருப்பவர்களுக்கு வாரத்துக்கு மூன்று தடவை பால் கொடுக்கப்படுகிறது. இதற்குமுன் கைதிகளின் உணவுப் பட்டியலில் பால் இடம்பெற்றிருக்கவில்லை. கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சிறையில் கொசுத் தொல்லை இருப்பதைக் …
நஸ்ரி: ஹூடுட் மசோதாவை அமைச்சரவை விவாதிக்கவில்லை
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை என்று சுற்றுலா மற்றும் பண்பாடு அமைச்சர் நாஸ்ரி அப்துல் அசிஸ் இன்று கூறினார். இந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப்பின் மழுப்பல் போக்கு குறித்து குடையப்பட்ட போது: "அதை அவரிடம் (நஜிப்) கேளுங்கள்" என்று நஸ்ரி பதில்…
ஹுடுட்டால் பக்கத்தான் உடைந்து போகும் என எதிர்பார்க்கிறார் அமைச்சர்
அம்னோ மூத்த அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஹுடுட்டால் பக்கத்தான் ரக்யாட் உடைந்து போவதைக் காண ஆவலாக உள்ளார். “ஹுடுட் விவகாரத்தால் பக்கத்தான் உடையும் என்றால் அப்படியே நடக்கட்டும்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஹுடுட் பற்றி விவாதிக்கப்படவில்லை என்பதையும் நஸ்ரி …
அஸ்மின்: பாஸுடனான உறவை முறித்துக்கொள்வது பிகேஆரின் நிலைப்பாடு அல்ல
பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள சாபா பிகேஆர் எடுத்துள்ள முடிவு பிகேஆரின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு அல்ல என்று பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அக்கட்சியின் சாபா தலைவர் லாஜிம் உகின் மற்றும் சாபா டிஎபி தலைவர் ஜிம்மி வோங் ஆகியோர் பாஸ் கட்சியுடனான உறவை…
காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவு இல்லை: டிஎம்ஐ மூவர் விடுவிக்கப்படுவர்
த மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) செய்தித்தளத்தின் செய்தியாசிரியர்களை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறும் போலீசின் முயற்சி பலிக்கவில்லை. டிஎம்ஐ நிர்வாக ஆசிரியர் லயோனல் மொராய்ஸ், மூத்த செய்தியாளர்கள் சுல்கிப்ளி சுலோங், அமின் ஷா இஸ்கண்டர் ஆகிய மூவரும் இன்றிரவு ஏழு மணிக்குள் விடுவிக்கப்படுவர் என்று வழக்குரைஞர் …
கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தலில் பாஸ் துடைத்தொழிக்கப்படலாம்
பாஸ், ஹுடுட் சட்டத்தில் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்படலாம் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கிறார். வடக்கத்தி மாநிலங்கள் சிலவற்றில் வேண்டுமானால் அது பேர் போட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், அதன் கோட்டையாக திகழும் கிளந்தானில்கூட அக்கட்சி ஆட்சியை இழக்க நேரலாம் …


