பேராசிரியர்: சோம்பேறி மலேசியர்களால் குடியேறிகள் ‘தவக்கே’ஆகிவிடுகிறார்கள்

மலேசியர்களின்  சோம்பேறித்தனம்தான்  அன்னிய  தொழிலாளர்கள் “தவக்கேகள்”  ஆவதற்கு  உதவுகிறது  எனத்  தேசிய  பேராசிரியர்  மன்றச்  செயலாளர்  ராடுவான்  சே  ரோஸ்  வருத்தத்துடன்  குறிப்பிட்டார். “சோம்பேறிகளாக  இருக்கிறோம். நம்  மக்கள்  வாய்ப்புகளைப்  பயன்படுத்திக்கொள்வதில்லை. அதேவேளை வாய்ப்புகள்  கிடைப்பதில்லை  என  முறையிடவும்  செய்கிறார்கள். அவர்களுக்கு (அன்னிய தொழிலாளர்கள்)  மட்டும் வாய்ப்பு  எப்படிக் …

மக்களிடம் பொய் சொல்லாதீர், நஜிப்பிடம் கூறுகிறார் முன்னாள் தேர்தல் ஆணையத்…

  மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்தி விட்டு, மாறாக அவர் "தமது வேலையைச் செய்ய வேண்டும்" என்று பெர்காசா உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் பிரதமர் நஜிப் ரசாக்கை கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான அப்துல் ரஷிட் ஓர் அறிக்கையைக் குறிப்பிட்டு அந்த அறிக்கை…

அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களை நாட்டை விட்டு விரட்டுகிறது

  அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களையும் முஸ்லிம்-அல்லாதவர்களையும் அச்சுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறது என்று டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரி ஷா ராஜா பூஜி கூறினார். இதற்காகத்தான் மலாய்க்காரர்களின் உரிமைகள், இஸ்லாம் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை என்ற பெயரில் அம்னோ தேசிய நிந்தனைச்…

டிஏபி: 14வது பொதுத் தேர்தலுக்குப் போகும்போதே பிரதமரையும் தீர்மானித்து விட…

14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்போதே  பிரதமர்  பதவி  ஏற்கப்போகின்றவர்  யார்  என்பதையும்  பக்கத்தான்  ரக்யாட்  பெயர்  குறிப்பிட்டு விட  வேண்டும்  என  டிஏபி  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  கூறியுள்ளார். டிஏபி  ஆண்டுக்  கூட்டத்தில்  உரையாற்றிய  லிம், பக்கத்தான்  முக்கியமான  விவகாரங்களில்  தெளிவான  கருத்தொற்றுமை  இன்றி  தேர்தலில் …

எம்எச் 370: தேடும் பணி மே மாதம் முடிவடையலாம்

இந்தியப் பெருங்கடலின்  தென்  பகுதியில்  60,000 சதுர  கிலோமீட்டர்  பரப்பில்  மேற்கொள்ளப்பட்டுவரும்  எம்எச் 370-ஐத் தேடும் பணி மே மாதம்  முடிவுக்கு  வரலாம். மலேசிய  விமான  நிறுவனத்தின் காணாமல்போன  அவ்  விமானத்தைக்  கடலடியில்  தேடும்  மாபெரும் பணியில்  ஈடுபட்டுள்ள  மூன்று  கப்பல்களும்  மூன்றில்- இரண்டு பங்கு  பகுதியில்  தேடலை …

பெர்னாமா டிவி மூடப்படலாம்: அதன் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

அக்டோபர்  மாதத்திலிருந்து  பாதிச்  சம்பளத்தை  மட்டுமே  பெற்று  துன்பத்தை அனுபவித்துக்  கொண்டிருக்கும்  பெர்னாமா  டிவி (பிடிவி) ஊழியர்களிடம்  அந்நிறுவனம்  மூடவேண்டிய  நிலை  வரலாம்  என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை  நடந்த  சந்திப்பின்போது,  நிறுவனம்  தொடர்ந்து  இழப்பை  எதிர்நோக்கினால் அது  இழுத்து  மூடப்படலாம்  என   பெர்னாமா  மேலாளர்  சுல்கிப்ளி  சாலே  கூறியதாக …

வெளிநாட்டுப் பயணத்தைக் குறைப்பீர்: பிரதமருக்கு பெர்காசா அறிவுறுத்து

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வெளிநாடு செல்வதைக்  குறைத்துக்கொள்ளாவிட்டால்  பதவியை  இழக்க  நேரலாம்  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி எச்சரிக்கிறார். “உங்கள்  பதவி  பறிபோகாதிருக்க வெளிநாடு  செல்வதைக்  குறைத்துக்கொள்ள வேண்டும்”,  என  பெர்காசா  ஆண்டுக்கூட்டத்தில்  பேசிய  இப்ராகிம்  குறிப்பிட்டார். மற்ற  நாட்டுத்  தலைவர்கள் இந்த  அளவுக்கு  வெளிநாட்டுப் …

டிஏபி மாநாட்டில் ஹுடுட்டுக்குக் கண்டனம்: பாஸ் தலைவர்கள் வரவில்லை

இன்று  தொடங்கிய  டிஏபி  ஆண்டுக் கூட்டத்தில் நாட்டில்  சமயச்  சட்டங்களை  அமல்படுத்தும்  முயற்சி  வெகுவாகக்  குறை  சொல்லப்பட்டது. சுபாங்  ஜெயாவில்  நடைபெறும்  கூட்டத்தில்  தொடக்கவுரை  ஆற்றிய  டிஏபி  இடைக்காலத்  தலைவர்  டான்  கொக் வாய், “அண்மைக்காலமாக  பல  தரப்புகள்  சமய  அடிப்படையிலான  சட்டங்களைக் கொண்டுவரும்  முயற்சியில்  ஈடுபட்டு  வருகின்றன. …

1எம்டிபி கடனை கட்டுவதற்கான கால நீட்டிப்பை பேங் நெகாராவிடமிருந்து பெற்றது

  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1எம்டிபி) அதன் கட்டப்படாமலிருக்கும் கடனைக் கட்டுவதற்வதற்கான கால நீட்டிப்பை பேங்க் நெகாராவிடமிருந்து பெற்றுள்ளது என்று "வட்டாரங்களை" மேற்கோள் காட்டி மூத்த செய்தியாளர் எ. காடிர் ஜாயின் தமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இக்கால நீட்டிப்புக்கான கோரிக்கையை பேங் நெகாராவின் ஆளுனர் ஸெட்டி…

சிடி அப்துல்லா: மலேசிய அரசாங்கம் இன்னும் முன்னாள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப்…

  மலேசியா எவ்வளவுதான் தூற்றினாலும் தாய்லாந்தில் வாழ்ந்து வரும் முன்னாள் கம்யூனிஸ்ட் வீரர்கள் தொடர்ந்து போரை முடிவிற்கு கொண்டு வந்த ஹதாய் ஒப்பந்தத்தை கொண்டாடி மகிழ்வர். 25 ஆண்டுகளை கடந்து விட்ட ஹதாய் ஒப்பந்தம் டிசம்பர் 2, 1989 இல் ஹதாயில் கையெழுத்திடப்பட்டது. மலேசியா மற்றும் தாய்லாந்து அரசாங்களுடன்…

பழனிவேலை வரவேற்க வருவோருக்கு ‘ரொக்கம்’ கொடுக்கப்படும் என்ற செய்திக்கு யார்…

பெரு  நாடு  சென்று  திரும்பும்  திரும்பும்  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேலை  வரவேற்க  விமான  நிலயம்  வருவோருக்குப்  பணம்  கொடுக்கப்படும்  என்று  கூறும்  குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்)-க்கும்  தங்களுக்கும்  சம்பந்தமில்லை  என  மஇகா வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ‘நாளை, பிற்பகல்  மணி  2.30க்கு கேஎல்ஐஏ-இல்  ஒன்றுகூடி  நம்  பாசத்துக்குரிய  தலைவர்  ஜி.பழனிவேலுக்கு  நம்  ஆதரவைக் …

தர்மேந்திரனைக் கொன்ற குற்றச்சாட்டிலிருந்து போலீஸ்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்

கோலாலும்பூர் போலீஸ்  லாக்-அப்பில்  தடுத்து  வைக்கப்பட்டிருந்த  என். தர்மேந்திரனைக்  கொன்றதாகக்  குற்றம்  சாட்டப்பட்ட  நான்கு  போலீஸ்  அதிகாரிகளை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  விடுவித்தது. நால்வர்மீதும்  குற்றஞ்சாட்ட போதுமான  ஆதாரங்கள்  இல்லை  என்று  நீதிபதி  கமருடின் ஹஷிம்  தீர்ப்பளித்தார். கெடா, சுங்கை  பட்டாணி  இன்ஸ்பெக்டர்  எஸ்.ஹரி  கிரிஷ்ணன்,41, சர்ஜெண்ட் …

மகாதிர்: எம்எச்17-இன் சிதைவுகளை மலேசியாவுக்குக் கொண்டு வருவீர்

எம்எச்17-இன்  சிதைந்த  பகுதிகள்  மலேசியாவில்  ஆராயப்படுவதற்காக  இங்குக்  கொண்டுவரப்பட  வேண்டும்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கோரிக்கை  விடுத்துள்ளார். சிதைவுகளை  ஆராய்வதினின்றும்  மலேசியா  ஒதுக்கப்படுகிறது என்றும்  நெதர்லாந்தில்  அவற்றை  ஆராய “வேண்டா வெறுப்பாகவே  அது  அனுமதிக்கப்பட்டது”  என்றும்  அவர்  கூறினார். “அந்த விபத்தில்  உயிரிழந்தவர்களில்  டச்சு …

1எம்டிபி-க்கு எதிராக அம்னோ கட்சிக்காரர் போலீசில் புகார்

அம்னோ  தொகுதித்  தலைவர் ஒருவர், கடன்  தொல்லைகளை  எதிர்நோக்கும் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் உருவாக்கமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீசில்  புகார்  செய்துள்ளார். பினாங்கு   பத்து  கவான்  அம்னோ  தொகுதித்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்  இன்று  பிற்பகல் கோலாலும்பூர்  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்தில் …

பகுதிச் சம்பளமே வழங்கப்பட்டதால் பிடிவி பணியாளர்கள் மீண்டும் விடுப்பில் சென்றனர்

சம்பளம்  கொடுபடாதிருந்த  பெர்னாமா  டிவி (பிடிவி) பணியாளர்கள்  சுமார்  30  பேர்,  இரண்டு  நாள்களுக்கு  முன்  நவம்பர்  ,மாதத்துக்கான  பகுதிச்  சம்பளமாக   ரிம500  மட்டுமே  வழங்கப்பட்டதை  அடுத்து  நேற்று   மீண்டும்  விடுப்பில்  சென்றனர். மலேசியாகினிக்குக்  கிடைத்த  கடிதமொன்றில் “பெர்னாமா டிவி சைனர்ஜி முழுச்  சம்பளத்தைக்  கொடுத்தாலொழிய  டிசம்பர்  10-இலிருந்து…

பல்கலைக்கழக தேர்தலில் முறைகேடுகள்: யுயுஎம் மாணவர்கள் குற்றச்சாட்டு

யுனிவர்சிடி  உத்தாரா மலேசியா (யுயுஎம்) மாணவர்  மன்றத்தைச்  சேர்ந்த  மாணவர்  குழு  ஒன்று,  நவம்பர்  27 தேர்தலில்  பல்கலைக்கழக  அதிகாரிகள்  குறுக்கீடு  இருந்ததாகக்  கூறுகின்றது. மாணவர்களுக்குப்  பகலுணவு  வழங்கி  அவர்களைப்  பல்கலைக்கழகத்துக்கு  வேண்டிய  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்குமாறு  கேட்டுகொண்டது  உள்பட  பல்கலைக்கழக  அதிகாரிகள் பல திருகுதாளங்களில்  ஈடுபட்டார்களாம். ட்ரேன்போர்மாசி  மஹாசிஸ்வா …

அன்வார் சிறை சென்றால் பக்கத்தான் ஆட்டம் முடிந்துவிடும்

அன்வார்  இப்ராகிம்  சிறை  செல்லும் சாத்தியம்  இருப்பதால்தான்  லிம்  கிட்  சியாங்  பக்கத்தான்  எதிர்காலம்  குறித்து  நம்பிக்கை  இழந்து  பேசுகிறாராம்.  அம்னோ  தலைவர்  ஒருவர். கூறுகிறார். “அன்வார்  சிறைக்குச்  சென்றால் யார்  எதிரணித்  தலைவர்  ஆவார்”, என  முகம்மட்  புவாட்  ஸார்காஷி  வினவினார். “லிம், (அப்பதவிக்கு) வருவதை  பாஸ் …

பாலாவின் துணைவியார் நஜிப்புக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

  காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ் செல்வி பிரதமர் நஜிப், அவரது துணைவியார் ரோஸ்மா மற்றும் இதர எழுவருக்கு எதிராகத் தொடுத்திருந்த ரிம1.9 மில்லியன் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான சட்டப்பூர்வமான தகுதி…

நேப்பாளி பெண் தண்டிக்கப்பட்டதைத் தற்காக்கும் ஏஜி-இன் செயல் ஏமாற்றமளிக்கிறது

நேப்பாள் நாட்டவரான  நிர்மலா  தாப்பாவின்  வழக்குரைஞர், நிர்மலா குற்றஞ்சாட்டப்பட்டு  தண்டிக்கப்பட்டது  சரிதான்  என்று  வாதாடும்  சட்டத்துறைத்  தலைவரின் (ஏஜி)  செயல்  “ஏமாற்றமும்  வியப்பும்” அளிப்பதாகக்  கூறினார். நிர்மலாவுக்குக்  கருக்கலைப்பு  செய்துகொண்டதற்காக  ஓராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்  பத்திரிகையைக்  கூர்ந்து ஆராய்ந்தால், அவர்  புக்கிட்  மெர்தாஜாம்  மருத்துவ …

‘யுஎம் ஆக்கிரமிப்பாளர்கள்’ கலைந்துசெல்ல உத்தரவு

யுனிவர்சிடி  மலாயா  நுழைவாயிலில்  கூடாரமிட்டு  ‘யுஎம்  ஆக்கிரமிப்பு’ இயக்கத்தை  நடத்தும்  மாணவர்களைக்  கலைந்து  செல்லும்படி  போலீசும்  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றமும் (டிபிகேஎல்)  உத்தரவிட்டுள்ளன. நேற்று  முதல் அந்த  இயக்கத்தை நடத்திவரும்  மாணவர்களைக் கலைப்பதற்கு  போலீசாரும்  டிபிகேஎல்  அமலாக்க  அதிகாரிகளுமாக  சுமார்  30  பேர்  பிற்பகல் 3 மணிக்கு  அங்கு …

ரோன்95 விலையை ரிம1.90க்குக் குறைக்க புத்தாண்டுக்கு இரவில் ஆர்ப்பாட்டம்

கடந்த  ஆண்டு  புத்தாண்டுக்கு  முந்திய  நாள் இரவுக்  கொண்டாட்டங்களில்  நிகழ்ந்தது  போலவே  இவ்வாண்டும்  டட்டாரான்  மெர்டேகாவில் பேரணி  ஒன்று  நடைபெறும். இம்முறை ரோன்95  விலையை  லிட்டருக்கு  ரிம1.90  என்று  குறைக்கக்  கோரிக்கை  விடுக்கப்படும். கிராக்கான்  துருன்  கோஸ்  சாரா  ஹிடுப்(துருன்), சொலிடேரிடி   அனாக்  மூடா  மலேசியா (எஸ்ஏஎம்எம்)  ஆகிய …

ஐந்து முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுக்கு ரிம4.5 மில்லியன் இழப்பீடு

பத்து  எம்பி  தியான்  சுவா,  ஹுலு  கிளாங்  சட்டமன்ற  உறுப்பினர்  சாஆரி  சுங்கிப்  உள்பட   முன்னாள்  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்ட(ஐஎஸ்ஏ)  கைதிகள் ஐவருக்கு  ரிம4.5 மில்லியன் இழப்பீடு கொடுக்க  முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  உத்தரவிட்டது. மற்ற  மூன்று  சமூக  ஆர்வலர்கள்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  முன்னால்  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினர் …

மேன்மேலும் சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்: எம்பி அரசாங்கத்துக்கு அறிவுறுத்து

அரசாங்கம்  அமெரிக்கத்  தூதர்  ஜோசப்  யுன்னைக்  கூப்பிட்டு  அனுப்பியது  ஏன்  என்று  வினவும்  பாடாங்  செறாய்  எம்பி  என். சுரேந்திரன்  இப்படிப்பட்ட  செயல்களால்  நாடு  மேலும்  சங்கடமான  நிலைக்குத் தள்ளப்படும்  என்கிறார். தேச நிந்தனைச்  சட்ட  விவகாரத்தில்  நஜிப்  அடித்த  பல்டி  குறித்து  யுன்  தெரிவித்த  அதே கவலை …