அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
எம்டியுசி வாரத்தில் ஐந்து-நாள் வேலை கோருகிறது
தனியார்துறையில் உற்பத்தி திறணை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஐந்து-நாள் வேலை முறையை கட்டாயமாக்குமாறு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டுள்ளது. அவ்வாறு செய்வது அரசாங்க இலாகாவின் வேலை நாட்களுடன் சுமுகமான நடைமுறைகளைப் பின்பற்ற உதவியாக இருக்கும் அந்த அமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் எ.பாலசுப்ரமணியம் பெர்னாமாவிடம் கூறினார்.
பாஸ்: இஸ்ரேலுடனான வாணிகத்தை நிறுத்துங்கள்
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு மலேசியா அந்நாட்டுடன் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள வாணிகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஸ் இளைஞர் பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணத் தலைவர்…
மகாதிர் நஜிப்பைக் குறைகூறுவது தவறு என்கிறார் அம்னோ எம்பி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வலுவான தலைவர் அல்லர் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறிப்பிட்டிருப்பதை அம்னோ எம்பி நவாவி அஹ்மட் மறுக்கிறார். நஜிப், வலுவான தலைவராக இருந்தால் பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்தை (டிபிபிஏ) நிராகரித்திருப்பார் என்றும் அந்நிய நெருக்குதலுக்கு வளைந்து கொடுத்திருக்க …
பாஸ்: தீபக்கின் கடன் ரிம215 மில்லியன்
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் பேங்க் ரக்யாட்டுக்குக் கொடுக்க வேண்டிய கடன் எல்லாரும் நினைப்பதுபோல் ரிம32 மில்லியன் அல்ல, அவருக்கு மேலும் இரு கடன்கள் உள்ளன, அவற்றையும் சேர்த்தால் மொத்த கடன் ரிம215 மில்லியனைத் தாண்டும். இவ்வாறு தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார், மூன்று …
சுரேந்திரன்: எஸ்ஐடிஎப் ஏற்கனவே இந்தியர்களை ஏமாற்றிய ஒன்றுதான்
நாடற்ற இந்தியர்கள், இந்திய சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் பதிந்துகொள்ளுமாறு மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டிருப்பதை எதிரணி எம்பி ஒருவர் சாடியுள்ளார். மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்களுக்கு மைகாட் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஏற்கனவே இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையும் அது அதைச் …
கட்சியில் சேர காலிட்டை அழைக்கவில்லை: பாஸ் மறுப்பு
சனிக்கிழமை நடந்த சந்திப்பின்போது சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைத் தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு அழைத்ததாகக் கூறப்படுவதை பாஸ் மறுக்கிறது. நோன்பு மாதம் என்பதால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் தாமும் மந்திரி புசாரைப் பார்க்கப்போனதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார். “நோன்பு மாதம் …
இஸ்கண்டர் திட்டத்தை எதிர்க்கும் மகாதிருக்கு பாஸ் ஆதரவு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இஸ்கண்டர் மலேசியா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய பாஸ், அவ்விவகாரத்தில் அவரை முழுக்க முழுக்க ஆதரிப்பதாகக் கூறியது. இஸ்கண்டர் திட்டம் சிங்கப்பூர் அதன் இறையாண்மையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முகப்பு என்று கூறும் மகாதிர் அதை மட்டும் ஆதாரங்களுடன் நிரூபிப்பாரானால்…
பயங்கரவாதிகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும் புகலிடமா சாபா?
சாபா, கடத்தல்கார்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் புகலிடமாக மாறியுள்ளாதா எனக் கேள்வி எழுப்புகிறார் சாபா ஸ்டார் கட்சித் தலைவரும் பிங்கோர் சட்டமன்ற உறுப்பினருமான ஜெப்ரி கிட்டிங்கான். எல்லைப்பகுதியில் கட்டுப்பாடு இல்லாதிருப்பதாலும் மலேசிய அடையாள அட்டைகள் அள்ளிக்கொடுக்கப்பட்டிருப்பதாலும் சாபாவின் பாதுகாப்பு மோசமடைந்துள்ளது. இதனால் சாபா “பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும் புகலிடமாக” மாறியுள்ளது …
மைகாட் இல்லாத இந்தியர்கள் பணிக்குழுவில் பதிந்துகொள்ளலாம்
மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்கள், இந்தியர் சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும் என அக்குழுத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார். 1957-க்கு முன்னதாக மலேசியா வந்தவர்களும் 1957-க்குப் பிறகு மலேசியாவில் பிறந்தவர்களும் மைகாட் இல்லாதிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை என மஇகா …
அம்பிகா தீவிரவாதத்தை ஈர்க்கக்கூடும், உத்துசான் உளறுகிறது
இனவாதத்தை எதிர்ப்பதற்காக சமீபத்தில் அம்பிகா அறிவித்த புதிய அரசு சார்பற்ற அமைப்பு அநோக்கத்திற்கு மாறாக இனவாதத்தை ஈர்க்கக்கூடும் என்று அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா உளறிக்கொட்டியுள்ளது. "அவருக்கு (அம்பிகாவுக்கு) எதிரான மலேசிய மக்களின் சினம், குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகளில், இன்னும் அடங்காமல் இருக்கிறது", என்று அந்நாளிதழின்…
நஜிப் சாபா சென்ற வேளையில் மாபுள் தீவில் துப்பாக்கிச் சூட்டுச்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் கால் பதித்த வேளையில் செம்பூர்னாவில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. அச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இன்னொருவர் கடத்தப்பட்டதாகவும் சாபா வட்டாரமொன்று தெரிவித்தது. நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில், பிலிப்பினோக்கள் என்று நம்பப்படும் எண்மர் இராணுவ சீருடையில் செம்பூர்னாவுக்கு …
செம்பூர்னா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நஜிப்பை அவமதிக்கும் செயலாகும்
நேற்றிரவு செம்பூர்னாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை என்பதைக் காண்பிப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “பிரதமர் சாபாவில் கால்வைத்த வேளையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? “அவர்கள் …
கோபிந் சிங்: காலணியை வீசிய ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை…
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மாணவி மீது தமது காலணியை வீசி அம்மாணவிக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் ஆசிரியர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு…
போலீஸ் அதிகாரி மீது பாலியல் குற்றம் சாட்டிய சஞ்சீவன் விசாரிக்கப்படுகிறார்
குற்ற எதிர்ப்பு அரசு சார்பற்ற அமைப்பான மைவாச் (MyWatch) தலைவர் ஆர். சஞ்சீவன் பெயரிடப்படாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் (ஆட்சியாளரிடமிருந்து சிறப்புமிக்க பட்டமும் பெற்றுள்ளவர்) மீது சாட்டிய பாலியல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்காக போலீசாரால் தாம் விசாரிக்கப்படுவதாக கூறுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் (ஒழுங்கு…
அம்பிகா, சாமாட் தலைமையில் நாட்டை புணரமைக்க நெகாரா-கு மக்கள் இயக்கம்
இன மற்றும் இனவாத சர்ச்சைகள் மலேசிய பல்லின மக்களுக்கிடையில் இதுவரையில் நிலவிய வந்த அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் மிரட்டலை உருவாக்கி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, ஆளுமை அளித்து நாட்டை புணரமைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் பெர்சேயின் முன்னாள் கூட்டு…
சிலாங்கூர் எம்பி-யும் நஜிப்பும் இரகசிய சந்திப்பு?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் நேற்று ஒன்றாக நோன்பு திறந்த பின்னர் இரகசியமாக சந்திப்பு நடத்தினார்கள் என அம்னோ-ஆதரவு வலைத்தளம் ஒன்று கூறியுள்ளது. புக்கிட் ஜெலுத்தோங், தெங்கு அம்புவான் ஜுமா பள்ளிவாசலில் அச்சந்திப்பு நிகழ்ந்ததாக MyKmu.net கூறியது. ஆனால், அச்சந்திப்பில் …
முறையீட்டை விசாரிக்க அவசரம் காட்டப்படுவதாக அன்வாரின் வழக்குரைஞர்கள் புகார்
குதப்புணர்ச்சி II வழக்குமீதான முறையீடுகளை விசாரித்து முடிக்க கூட்டரசு நீதிமன்றம் அவசரம் காட்டுவதாக அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர்கள் குறைகூறியுள்ளனர். நீதிமன்ற துணை பதிவதிகாரி ஹஸ்பி ஹசான் மூன்று முறையீடுகளையும் ஒன்றாக விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “அரசுதரப்பு வழக்குரைஞர் குழுவிலிருந்து முகம்மட் …
பிரதமர் அர்ஜெண்டினாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்: கேஜெ வேண்டிக்கொண்டார்
‘ஜோக்’ஒன்று இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் எந்தக் குழுவை ஆதரிக்கிறாரோ அது தோற்றுப்போகுமாம். நஜிப் ஸ்பேய்னை, இங்கிலாந்தை, பிரேசிலை ஆதரித்துப் பேசினார். மூன்றும் மண்ணைக் கவ்வின. இக்கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் ஜெர்மனியும் போதுகின்றன. அந்த …
கொல்லப்பட்ட மாடல் அழகியின் காதலர் தடுப்புக் காவலில்
எஸ்டோனிய மாடல் அழகி ரெஜினா சூசலு கொலை விசாரணைக்கு உதவியாக அவரின் காதலர் துங்கு அலாங் ரேஸா துங்கு இப்ராகிம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த 28-வயது ஆடவர், அவரின் நண்பர் என்று கூறப்படும் ஆகஸ்டினுடன் ஒரு வாரத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பார் என த ஸ்டார் கூறிற்று. இவர்களையும் சேர்த்து …
இஸ்மா, பெர்காசாவைவிட ஆபத்தானது: பாஸ் தலைவர்
மலாய் மேலாதிக்கத்துக்காக போராடும் பெர்காசாவைவிட ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) அமைப்பு “ஆபத்தானது, இனவாதம் மிக்கது” என்கிறார் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா. பாஸ் கட்சியின் தேசிய ஒற்றுமை பிரிவுத் தலைவருமான அவர், “அவர்கள் சமயப் போர்வை போர்த்திய இனவாதிகள்” என்றார். “பெர்காசாவைவிடவும் இனவாதம் மிக்கது …
இஸ்மா தலைவர்: இஸ்லாத்தைப் பாதுகாப்பது இனவாதமா?
இஸ்லாத்தைப் பாதுகாக்க முனையும் அமைப்புக்கு இனவாத அமைப்பு என முத்திரை குத்துவது சரியா என்று சீறுகிறார் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர். பாஸ் தலைவர் முஜாஹிட் ராவா மலேசியாகினியிடம் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினை அளித்தபோது இஸ்மா தலைவர் அப்துல்லா ஷேக் அப்துல் ரஹ்மான், இவ்வாறு சீற்றமடைந்தார். “நாங்கள் …
எம்பி: பிரதமர்துறை இலாகாக்கள் ஒன்றை மற்றொன்றை ‘விழுங்கப் பார்க்கிறது’
பிரதமர்துறையில் உள்ள சில இலாகாக்கள் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டிருப்பதால் ஒன்றுகொன்று போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றை மற்றொன்றை “அடித்துச் சாப்பிடப் பார்க்கின்றது” என குளுவாங் எம்பி லியு சின் தொங் கூறினார். பொருளாதாரத் திட்டப் பிரிவு (இபியு) ஒன்றிருக்கிறது. அடைவுநிலை மேலாண்மை, சேவைப் பிரிவு ஒன்றிருக்கிறது. இந்த இரண்டின் பணியுமே …
மகாதிருக்கு வயது 89: அவர் நலம்வாழ வாழ்த்தினார் அன்வார்
டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று 89-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவ்வளவு வயதாகியும் இரண்டு தடவை இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தும் இன்னும் அவர் பழைய மாதிரியே சுறுசுறுப்பாக இருக்கிறார். முன்னாள் பிரதமருக்கு இன்று பலரும் வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒருவர்.…