பொடா சட்டம் தொடர்பில் சுஹாகாம் கண்டனம்

2015 பயங்கரவாதத்  தடுப்புச்  சட்ட(பொடா)த்தின்கீழ்  விசாரணையின்றித்  தடுத்து வைப்பதை  மீண்டும்  கொண்டு  வந்திருக்கும்  அரசாங்கத்தை  மனித உரிமைகள்  ஆணையம்(சுஹாகாம்) கடிந்து  கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு  எதிரான   புத்ரா ஜெயாவின்  போராட்டத்தை  சுஹாகாம்  ஆதரிக்கிறது   ஆனால், அதன்  பொருட்டு மனித  உரிமைகள்  பலி  கொடுக்கப்படுவதை  அது  ஏற்கவில்லை. “பயங்கரவாதத்தையும்  தீவிரவாதத்தையும்  எதிர்க்க …

போலீஸ் காவல் மரணங்கள்: இதுவரை 4 போலீசார்மீது மட்டுமே நடவடிக்கை

போலீஸ்  காவலில்  நிகழ்ந்த  மரணங்கள்  தொடர்பில்  இதுவரை  நான்கு போலீசார்  மீது  மட்டுமே  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில்  தாமஸ்  சூ(டிஏபி- ஈப்போ  தீமோர்)வுக்கு  எழுத்து  வடிவில்  அளித்த  பதிலில்  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  இதைத்  தெரிவித்தார். போலீஸ்  காவல்  மரணங்கள் தொடர்பில்  இப்போது  வழக்கு  விசாரணையை …

வாக்காளர் பதிவில் முறைகேடுகள்: பெர்சே குற்றச்சாட்டு

தேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்  பெர்சே  தேர்தல்  ஆணையத்தின்(இசி)  வாக்காளர்  பதிவில்   முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  குற்றஞ்சாட்டியுள்ளது.  இசி  வாக்காளர்  பதிவுக்கு  சிறப்பு விவகாரத்  துறை(ஜாசா)  அதிகாரிகளைப்   பயன்படுத்துவதை  அது  சுட்டிக்காட்டுகிறது. 2013  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  என்ஜிஓ-களையும்  அரசியல் கட்சிகளையும்  சேர்ந்தவர்கள்  உதவிப்  பதிவதிகாரிகளாக(ஏஆர்ஓ)ச்  செயல்படுவதை  இசி  நிறுத்திக்  கொண்டது.…

அறிவால் ஆபத்து: பிரதமர் எச்சரிக்கை

மலேசிய பட்டதாரிகள்  “வில்லன்களாகி” நாட்டை  அழிக்காதிருக்க   அவர்களுக்கு  அறநெறிகள்  புகட்டப்பட  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். “அவர்கள்  அறிவாளிகளாக  இருந்து  அறநெறியற்றவர்களாக  இருந்தால், அவர்களின்  அறிவைக்  கொண்டு  நாட்டையே  அழித்து  விடலாம். “அதற்கோர் எடுத்துக்காட்டு,  நன்கு  படித்தவர்கள்  படித்ததை  வைத்து  குண்டுகள்  உருவாக்குவது. இது …

ஹாடியின் ஹுடுட் சட்டவரைவுக்கு எஸ்ஐஎஸ் எதிர்ப்பு

இஸ்லாத்தில்  சகோதரிகள்  அமைப்பு (எஸ்ஐஎஸ்), மாராங்  எம்பியும் பாஸ்  தலைவருமான  அப்துல்  ஹாடி  ஆவாங், ஷியாரியா  சட்டத்தில்  திருத்தம்  செய்வதற்கு   மக்களவையில்  தனி  உறுப்பினர்  சட்டவரைவைக்  கொண்டு  வருவது  ஏமாற்றமளிப்பதாகக்  கூறியுள்ளது. அவர்  கிளந்தானில்  ஹுடுட்டை  அமல்படுத்துவதற்காக  கூட்டரசு  அரசமைப்பைப்  புறக்கணிக்கிறார், அவமதிக்கிறார்  என்று  அது  கூறிற்று. “சட்டவரைவு …

அமைச்சர்: விசாரணை இல்லை என்பதற்காக நீதி இல்லை என்றாகிவிடாது

பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம் (பொடா) விசாரணையின்றி  தடுத்து   வைக்க  வகை  செய்கிறது  என்பதால் அது  ஓர்  அநீதியான  சட்டமாகி  விடாது  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. மக்களவையில்  பொடா சட்டவரைவு  மீதான  விவாதத்தை  முடித்து வைத்துப்  பேசியபோது  அமைச்சர்  இவ்வாறு கூறினார். விசாரணையில்லை  என்றாலும்  நீதி …

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பின்னே ஒளிந்துள்ள பயங்கரம்

விசாரணையின்றிக்  காலவரையில்லாமல்  தடுத்து வைப்பதற்கு வகை  செய்திருப்பதால்  அரசாங்கத்தின்  அரசியல்  நோக்கம்  கொண்ட  அதிகார  அத்துமீறல்கள்  இனி  அதிகரிக்கலாம்  என்று  மனித  உரிமை  கண்காணிப்பு  (எச்ஆர்டபள்யு) அமைப்பு  எச்சரிக்கிறது. அதிகாரிகளுக்கு  தடுத்துவைக்கும்  அதிகாரத்தைக்  கொடுக்கும் பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டிருப்பது, மலேசியாவில்  மனித  உரிமைகளுக்கு  ஏற்பட்ட  “மிகப் …

தேச நிந்தனைச் சட்டத்தின் புதிய திருத்தங்களில் பிணை கிடையாது

அரசாங்கம்  இன்று  தேச  நிந்தனைச்  சட்டத்துக்குத்  திருத்தங்களைக்  கொண்டு வரவுள்ளது. இத்திருத்தங்கள்  குற்றவாளிகளுக்குக்  கடும்  தண்டனை  கொடுக்கப்படுவதற்கு  வகை  செய்யும். இப்போதுள்ள  சட்டத்தை  வலுப்படுத்தும் வகையில்  கூடின  பட்ச  சிறைத்தண்டனை  20  ஆண்டுகளாகக்  கூட்டப்படுகிறது. குற்றம்  சாட்டப்படுவோர்  பிணையில்  விடப்பட  மாட்டார்கள். “தேச  நிந்தனைக்  குற்றங்களால்  உடல் ரீதியாக …

இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் ஹுடுட் சட்டவரைவு

ஷியாரியா சட்டத்துக்குத்  திருத்தங்கள்  கொண்டுவரும்  தனி உறுப்பினர்  சட்டவரைவு  இன்றைய  நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில்  இடம்பெற்றுள்ளது. ஆனால், ஹாடி  அச்சட்டவரைவைத்  தாக்கல் செய்ய  அனுமதிக்கப்படுவாரா  என்று  தெரியவில்லை.  ஏனென்றால், பெரும்பாலும்  தனி  உறுப்பினர்கள்  கொண்டு சட்டவரைவுகள்  விவாதத்துக்கே  வருவதில்லை. அச்சட்டவரைவும்  நிகழ்ச்சி நிரலில்  24-வது  இடத்தில்  உள்ளது. இதற்குமுன் …

பொடா சட்டத்தில் விசாரணையின்றித் தடுத்து வைக்கும் விதியைத் திருத்துவீர்

பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டத்தில்(பொடா)  உள்ள  விசாரணையின்றிக்  காவலில்  வைக்கும்  விதியைத்  திருத்த  வேண்டும். அதற்குப்  பதிலாக  பயங்கரவாதி  என்ற  சந்தேகத்துக்குரியவர்  நீதிமன்றத்துக்குக்  கொண்டுவரப்பட்டு  அங்கு  நீதிபதி  ஒருவர்  அவரை  14  நாள்களுக்கு  விசாரணைக்காக  தடுத்து  வைப்பதா இல்லையா  என்பதை  முடிவு  செய்வார். அதன்  பிறகு  அவர்மீது  குற்றம்  சாட்டப்பட …

ஹெலிகாப்டரில் இருந்த பெண் யார் என்ற மர்மம் வலுக்கிறது

சனிக்கிழமை, செமிஞியில்  விழுந்து  நொறுங்கிய  ஹெலிகாப்டரில்  பயணம்  செய்த  கிர்கிஸ்தான்  பெண் யார்  என்ற  குழப்பம்  நீடித்து  வருகிறது. அந்த  ஹெலிகாப்டரில்  பயணித்த  அறுவருமே  கொல்லப்பட்டனர். ஆனால், மற்றவர்கள்  யார், எவர்  என்ற  விவரம்  தெளிவாக  தெரியும்போது  அய்டானா பைஸியவா  பற்றி  மட்டும்  எதுவும்  தெரியாமல்  மர்மமாக  இருக்கிறது.…

அடுத்து ரோஸ்மாமீது தாக்குதல் தொடுப்பாரா மகாதிர்?

24-மணி  நேரம்  அமைதியாக  இருந்த  அம்னோ-ஆதரவு  இணையத்  தளம்  ஒன்று  மீண்டும்  டாக்டர்  மகாதிர்மீது  சரமாரியாக  தாக்குதலைத்  தொடங்கியுள்ளது. மகாதிர்  அடுத்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரைத்  தாக்கும்  எண்ணத்தைக்  கொண்டிருக்கிறாரா   என்று  அது  கேள்வி  எழுப்பியுள்ளது. மகாதிர், செயல்படும்  முறையை  அடிப்படையாக  வைத்து…

நஜிப் மகாதிரை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே பிஎன் எம்பிகளின்…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  எழுப்பும் விவகாரங்களை  எதிர்க்க  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்மளவில்  சில  முயற்சிகளை  மேற்கொள்ள  வேண்டும்  என  பிஎன் ஆதரவு  மன்றம்  கேட்டுக்கொண்டிருக்கிறது. அம்மன்றத்தின்  தலைவரும்  ஜோகூர்  பாரு  எம்பியுமான  ஷாரிர்  சமட்,  பிஎன்  எம்பிகள்  நஜிப்பை  ஆதரிக்கிறார்கள்,  தற்காத்துப்  பேசுகிறார்கள் …

ரிம 116மில்லியனில் கட்டப்பட்ட ஆகாயப்படை கல்லூரியில் பல ஓட்டைகள்

அரசாங்கம்  ரிம116 மில்லியன்  செலவில் கட்டிய  ஆகாயப் படை  கல்லூரியின் (ஏஎப்சி) பயிற்சி  மையத்தில்  உள்ள   குறைபாடுகளை 2014 தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை  அம்பலப்படுத்தியுள்ளது. “அங்குள்ள பல  கட்டிடங்களும்  கட்டமைப்புகளும்  பாதுகாப்பு  அம்சங்களின்றிக்  கட்டப்பட்டுள்ளன. ஆயுதக்  கிடங்கைச்  சுற்றிப் பாதுகாப்புக்கு  வேலி  இல்லை. “சில  கட்டிடங்களில்  தொடர்புமுறைகள்  இல்லை.…

மகாதிர்மீது வழக்கு தொடுக்கும் துணிச்சல் உண்டா? நஜிப்புக்கு ரபிஸி சவால்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவதூறு  வழக்கு  தொடுத்த  சிலரில் பிகேஆர்  உதவித்  தலைவர்   ரபிஸி  ரம்லியும்  ஒருவர். இப்போது அந்த  பாண்டான்  எம்பி, தம்மீது  வழக்கு  தொடுத்த நஜிப்புக்கு  அவரை அல்டன்துன்யா  கொலையுடன்  தொடர்புப்  படுத்திப்  பேசியுள்ள  டாக்டர் மகாதிர்மீது  வழக்கு  தொடுக்கும்  துணிச்சல்  இருக்கிறதா  என்று …

கைரி: மசீச ஹூடுட் மசோதாவை அமைச்சரவையில் எதிர்க்கவில்லை

  சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்களில் மசீசவோ இதர பிஎன் பங்காளிக் கட்சிகளோ ஹூடுட் சட்ட மசோதாவை எதிர்க்கவில்லை என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஆனால், ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை. "இது நடந்துள்ளது என்று கூறப்பட்டு, அது தாக்கல் செய்யப்பட்டது", என்று அவர் செய்தியாளர்களிடம் கோலாலங்காட்டில் இன்று…

தந்தையின் ஈமச்சடங்கில் அன்வார் கலந்து கொண்டார்

  சிறையிலிடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் தந்தை இன்று காலை மணி 2.00 அளவில் காலமானார் என்று பிகேஆரின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார். அன்வாரின் தந்தை இப்ராகிம் அப்துல் ரஹ்மான் அம்னோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவரின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள…

கைரி: மகாதிரின் கேள்விகளுக்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தொடுத்துள்ள   தாக்குதல்  பற்றி  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினிடம்  கருத்துக்  கேட்கப்பட்டதற்கு  அவர்  இரு  தரப்புக்கும்  நல்ல  பிள்ளைபோல்  நடந்து  கொண்டார். மக்களிடம்  மகாதிருக்கு  அளவற்ற  செல்வாக்கு  இருப்பதால்  அவர் வலைப்பதிவில்  எழுதியதைப் புறந்தள்ளிவிட …

சிருல்: அல்டன்துன்யா புலனாய்வு பற்றி ஐஜிபி பொய் சொல்கிறார்

மலேசியாவிலிருந்து  தப்பியோடி  ஆஸ்திரேலியாவில்  மறைந்து வாழும்  சிருல் அஸ்கார்  உமர்,  தம்மைச்  சந்திக்க  அதிகாரிகளை  அனுப்பி  வைத்ததாக  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார்  சொல்வது   பொய்  என்கிறார். இன்று  மலேசிய  நேரம்  அதிகாலை 2.30க்கு  மலேசியாகினியிடம்  பேசிய  சிருல், நேற்று ஐஜிபி  அறிக்கையைப்  பார்த்ததிலிருந்து …

மலேசியாகினியை இழுத்துமூடச் சொல்லி ஆர்ப்பாட்டம்

இன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  மலேசியாகினி அலுவலகத்துக்கு அருகில் சுமார்  20 பேர்  திரண்டு அச்செய்தித்தளத்தை  இழுத்து  மூடச் சொல்லி  ஆர்ப்பாட்டம்  செய்தனர். காபோங்கான்  மலாயு  பெர்சத்து  டெமி  இஸ்லாம்  அமைப்பைச்  சேர்ந்த  அவர்கள்,  அந்த  இணையத்தளம்  செய்திகளைத் திரித்துக்  கூறுவதாகவும்  மலேசியர்களைப்  பிளவுபடுத்துவதாகவும்  இளைஞர்களைக்  குழப்புவதாகவும்  குற்றம் …

மகாதிர்: முகைதின் பிரதமராகலாம் ஆனால்……

துணைப் பிரதமர்  முகைதின்  யாசின்  பிரதமராவதற்கு  மிகவும்  தகுதி படைத்தவர்தான்  என்கிறார்  முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட். ஆனாலும்  அவரை  அப்பதவிக்குப் பரிந்துரைக்க  மகாதிர்  தயாராக  இல்லை. தமக்குப்  பின்  பிரதமராக  வந்த  இருவரும்  எதிர்பார்க்கப்பட்டதுபோல்  இல்லை  என்பதால்  “நம்பிக்கை இழந்துவிட்டதாக”க் கூறினார்  அவர். “மக்கள்மீது  நம்பிக்கை…

சுஹாகாம்: தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது

  தேச நிந்தனைச் சட்டம் 1948 தொடர்ந்து பயன்படுத்தப்படுவது "திகைக்க வைக்கிறது" என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) என்று தெரிவித்ததோடு புத்ரா ஜெயா அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்தரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இச்சட்டம் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் மற்றும், ஏன், ஊடகப் பணியாளர்கள்…

மகாதிர்: சிருல் எனது பாதுகாப்பாளராக இருந்தபோது யாரையும் கொல்லவில்லையே!

  மங்கோலிய பெண் அந்தான்துயாவை கொலை செய்ததற்காக மரணை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் தமது பாதுகாப்பாளராகவும் பணி புரிந்திருந்த தகவலை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று வெளிப்படுத்தினார். ஆனால், அந்த சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் கமாண்டோ சிருல் தம்மிடம் பணி புரிந்த போது…