மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினர் தற்காலிகமாக 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) முறையைச் செயல்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். "பொதுத்துறை மட்டுமின்றி, சில நிறுவனங்கள்…
பாஸ் கட்சியின் ஜிஎஸ்டி-க்கு எதிரான ஜிஹாட்
அடக்குமுறையை எதிர்த்து நில் என்று முகம்மது நபி கூறியிருப்பதற்கு ஏற்ப “கோடூரமான” பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு எதிராக பேரணி நடத்துவதாக பாஸ் கட்சி கூறுகிறது. “ஜிஎஸ்டி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. கொடுமையை எதிர்ப்பது- பலத்தால், சொல்லால், இதயத்தால் எதிர்ப்பது- ஏற்புடையதே. “நபிகள் நாயகம் ஒருமுறை சொன்னார், ‘கொடூர ஆட்சியாளருக்கு எதிராக …
பொடா, சட்டங்களையும் உரிமைகளையும் மீறுகிறது
ஏப்ரல் 7 அதிகாலை நேரத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டது குறித்து மலேசிய வழக்குரைஞர் மன்றம், சாபா சட்டச் சங்கம், சரவாக் வழக்குரைஞர் சங்கம் ஆகியவை கவலை கொண்டிருக்கின்றன. அத்துடன் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படுவதற்கும் அவை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டுள்ளன. பொடா என்பது 1960 உள்நாட்டுப் …
மகாதிர்-சிருல் தொலைபேசி தொடர்புக்கு மாபுஸ் ஏற்பாடு செய்கிறார்
திட்டமிடப்பட்டுள்ள மகாதிர்-சிருல் தொலைபேசி வழியான உரையாடல் திட்டப்படி நடக்கும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மீண்டும் கூறினார். கடந்த புதன்கிழமை, மகாதிரை சந்திக்க மாபுஸ் சிருலின் தாயார் பியா சாமாட்டை அழைத்துச் சென்றார். அது சம்பந்தமாக சிருல் கலக்கமடைந்துள்ளதாக அவரின் வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும்,…
மலாய்-பெரும்பான்மை தொகுதிகள் குறைக்கப்பட்டனவா? இசி மறுக்கிறது
தேர்தல் தொகுதிப் பிரிப்பில் தில்லுமுல்லுகள் செய்து மலாய்- பெரும்பான்மை தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்ததாகக் கூறப்படுவதைத் தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் மறுத்தார். அம்னோ அமைச்சர் ஒருவர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது ஆட்சியின்போது தேர்தல் தொகுதிப் பிரிப்பில் மாற்றங்களைச் செய்து மலாய்காரர்கள் …
‘இசி அம்னோவின் கருவி என்பதை இஸ்மாயில் சப்ரி நிரூபித்துள்ளார்’
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தமக்குச் சாதகமாக இருக்கும் வகையில் தேர்தல் தொகுதிப் பிரிப்பில் மாற்றங்களைச் செய்தார் எனக் குற்றம் சாட்டியிருப்பது தேர்தல் ஆணையம்(இசி) ஆளும் கட்சியின் “கருவி”யாக உள்ளது என்பதைக் காண்பிக்கிறது என டிஏபி கூறுகிறது. “இஸ்மாயில் சப்ரியின் …
நீதிபதிகளின் மேசையில் பதவி உறுதிமொழி பிரதி ஒன்று எப்போதும் இருக்க…
மலேசியாவைப் பாதுகாக்கவும் கூட்டரசு அரசமைப்பை நிலைநிறுத்தவும் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் எனத் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா நீதிபதிகளுக்கு நினைவுறுத்தினார். அந்த உறுதிமொழி பிரதி ஒன்று எப்போதும் அவர்களின் மேசைமீது இருக்க வேண்டும் என்றாரவர். “நீங்கள் செய்த பதவி உறுதிமொழியை நினைவுறுத்த அதன் பிரதி ஒன்றை…
‘தோக் ஜங்குட்’ நினைவாக மே 1 ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி
மே முதல் நாள் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு எதிரான பேரணி கிளந்தானின் சுதந்திரப் போராட்ட வீரர் தோக் ஜங்குட்டின் பெயரில் நடைபெறும். தோக் ஜங்குட் 1915-இல் பிரிட்டிஷாரின் வரிவிதிப்பை எதிர்த்துப் போராடி அப்போராட்டத்தில் உயிர் நீத்தவர் என்பதால்தான் அவர் பேரணியின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என பாஸ் துணைத் தலைவர் …
மே 5-இல் ரொம்பின் இடைத் தேர்தல்
ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மே 5-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாள் ஏப்ரல் 22. அத்தொகுதியில் முன்வாக்குப் பதிவு ஏப்ரல் 30-இல் நடக்கும் என ஆணையம் இன்று புத்ரா ஜெயாவில் கூறியது. இவ்வாரத் தொடக்கத்தில் இசி, பெர்மாத்தாங் பாவ் …
நஜிப்: அல்தான் துயாவை எனக்குத் தெரியாது என்று சத்தியம் செய்திருக்கிறேன்
2006 ஆம் ஆண்டில் மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை செய்யப்பட்டதில் தமக்கு சம்பந்தமில்லை என்பதை பிரதமர் நஜிப் இன்று (ஏப்ரல் 9) பகிரங்கமாக வலியுறுத்தினார். அல்தான்துயாவை கொலை செய்ய நஜிப்பின் பாதுகாப்பாளராக பணியாற்றிய போலீஸ் சிறப்பு கொமாண்டோவான சிருல் அஸார் ஒமாருக்கு யார் உத்தரவிட்டது என்று கடந்த…
தேர்தல் தொகுதிப் பிரிப்பில் மகாதிர் செய்த தகிடுதத்தம்: இஸ்மாயில் சப்ரி…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் தொகுதிப் பிரிப்பில் செய்த குழப்படிகளால் அம்னோவால் கூடுதல் இடங்களை வெற்றி பெற முடியாமல் போனதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி குற்றம் சாட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாதிர் மலாய்- பெரும்பான்மை தொகுதிகள் பலவற்றைப் பல-…
பணத்தைக் காண்பிக்க முடியுமா? நஜிப் ஆதரவாளர்களை வினவுகிறார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தாக்குதல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. இப்போது அவர் நஜிப் ஆதரவாளர்களை நோக்கிக் கணைகளைப் பாய்ச்சியுள்ளார். மகாதிர் தம் வலைப்பதிவில், நஜிப் ஆதரவாளர்களை நோக்கி அம்னோ தலைவரின் உருவாக்கமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) ரிம42 பில்லியன் கடன் …
பெர்மாத்தாங் பாவில் பக்கத்தான் ஒரு குழுவாக செயல்படும்
பினாங்கு டிஏபி, பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் பிகேஆருடனும் பாஸுடனும் இணைந்து ஒரு குழுவாக செயல்படும். டிஏபி-இன் இம்முடிவு பினாங்கு டிஏபி சோசலிச இளைஞர் பிரிவின் (டேப்ஸி) முடிவுக்கு நேர்மாறாக உள்ளது. டேப்ஸி தேர்தலின்போது பிகேஆர் இளைஞர் பிரிவுடன் சேர்ந்து வேலை செய்வது என்றும் பாஸுடன் இணைந்து செயல்படுவதில்லை …
கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா சட்டம் வேண்டுமென்றால், மலேசிய அரசமைப்புச் சட்டம்…
பாஸ் கட்சி ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா கிரிமினல் சட்டம் இருந்தே ஆகவேண்டும் என்றால், பெடரல் அரசமைப்புச் சட்டம் பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சாபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த 33 அரசு சார்பற்ற அமைப்புகள் கீழ்க்கண்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன: நாங்கள் -…
தேச நிந்தனைச் சட்டத்திருத்தத்துக்குக் ‘கட்டளை இட்டுக்கொண்டிருப்பவர்கள்’ அம்னோ தளபதிகள்
அஸ்மின் அலி (பிகேஆர்- கோம்பாக்) தேச நிந்தனைச் சட்டத் திருத்தத்துக்குத் திட்டமிட்டவர்களும் நாடாளுமன்றத்தில் அதை விரைந்து நிறைவேற்றத் துடிப்பவர்களும் அம்னோ தளபதிகள்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார். “சட்டத்திருத்தம் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்படுவது ஏன்? சட்டத்தைத் திருத்த வேண்டும் என அம்னோ கட்டளை இட்டதா? “60 அம்னோ தொகுதித் …
நீதிமன்றத்துக்காகக் காத்திருக்க முடியாது: தேச நிந்தனைச் சட்டம் மீதான விவாதம்…
1948 தேச நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டவரைவைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் டியோ கொண்டுவந்த தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா புறந்தள்ளினார். தேச நிந்தனைச் சட்டம் அரசமைப்புக்கு இணக்கமானதா என்று ஆராயும் வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நிலையில் இருப்பதாக…
ஜாஹிட்: மலேசியாவில் புவாமீது குற்றப்பதிவு ஏதுமில்லை
சூதாட்ட மன்னன் பால் புவா வெய் செங், 2004-இல் மீரியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் போலீஸ் பதிவேடுகளி அவர்மீது குற்றம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. “போலீஸ் பதிவேடுகளில் புவா இதற்குமுன் குற்றம் செய்தார் என்று பதிவு செய்யப்படவில்லை”. கோபிந்த் சிங் தியோவின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் …
சிருலைச் சென்று காண பணமில்லையா? உதவ முன்வந்தார் மாபுஸ்
பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய போலீஸ் அதிரடிப் படை வீரர் சிருல் அஸ்ஹார் உமரைச் சந்திப்பதற்கு ஒரு போலீஸ் குழுவை அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக இருக்கிறார். “அதிகாரிகளை அனுப்பி வைக்க போலீசிடம் பணமில்லை என்றால் ஒரு புரவலரைப் பிடித்து போலீசும் போலீஸ் …
சிருலின் தாயார் மகாதிரை சந்தித்தார்
பாஸ் பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கோனாண்டோ சிருல் அஸார் ஒமாரின் தாயார் பியா சாமாட்டை இன்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை சந்திக்க அழைத்துச் சென்றார்.…
‘நீதிமன்றத்தை அவமதிப்பது பரவாயில்லையா’-நன்சியைக் கடிந்துகொண்டார் அம்பிகா
1948 தேச நிந்தனைச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவருவது “அவமதிப்பதாக இருக்கலாம் ஆனால் சட்டவிரோதமானதல்ல” என்று கூறிய நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரியை வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கடிந்து கொண்டார். கூட்டரசு நீதிமன்றம் அச்சட்டம் அரசமைப்புக்கு ஏற்புடையதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்றும் அச்சட்டம் …
இசி: ஜாசா அதிகாரிகளை நியமித்தது தவறில்லை
சிறப்பு விவகாரத் துறை அதிகாரிகளை வாக்காளர் பதிவாளர்களாக நியமனம் செய்தது தவறு அல்ல என்கிறது தேர்தல் ஆணையம். அதே வேளை என்ஜிஓ உறுப்பினர்கள் உதவிப் பதிவாளர்களாக(ஏஆர்ஓ) செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுவதையும் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் மறுத்தார். “ஜாசா ஒரு அரசாங்கத் துறை. நாங்கள் …
மகாதிருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்
சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்), டாக்டர் மகாதிர் முகம்மட்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நாடு முழுக்க போலீசில் புகார் செய்து வருகிறது. அல்டன்துன்யா ஷரீபு கொலை தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றி முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து …
முகைதினும் உதவித் தலைவர்களும் மகாதிருடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வு காண…
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றிக் கடுமையாகக் குறைகூறி வருவதால் அம்னோவும் அதன் அடிநிலைத் தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, இந்நெருக்கடிக்குத் துணைப் பிரதமரும் உதவித் தலைவர்களும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.…
முகைதின்: பொடாவும் ஐஎஸ்ஏ-யும் ஒன்றல்ல
நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது அவசியம். அதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்(பொடா) என்கிறார் முகைதின் யாசின். இப்புதிய சட்டம் அதைப் பயன்படுத்தும் அதிகாரத்தைப் பயங்கரவாதத் தடுப்பு வாரியத்துக்குக் கொடுக்கிறது. அதன் உறுப்பினர்கள் பேரரசால் நியமிக்கப்படுகிறார்கள். இச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படுவோர் அவர்களின் உறவினர்களைச் சந்திக்கலாம். உறவினர்கள் வழியாக வழக்குரைஞர்களின் …


