ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
நஸ்ரி: டாக்டர் மகாதிரின் குறைகூறல் ‘ஆக்கப்பூர்வமான அறிவுரை’
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறுவதை “ஆக்கப்பூர்வமான அறிவுரையாக”த்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பண்பாட்டு, சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசீஸ். மகாதிர் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர். நாட்டு நடப்புகளில் அக்கறை கொண்டவர் என்றாரவர். “அக்கறை இருப்பதால்தான் அவர் குறைகூறுகிறார். பிடிக்கவில்லை என்பதால்தான் …
பாஸ்: ஹுடுட்டை கொண்டுவர அம்னோவின் துணை தேவை
பாஸ் கட்சி, ஹுடுட்டைக் கொண்டுவர அதன் ஜன்ம வைரியான அம்னோவின் உதவி கண்டிப்பாக தேவை என்கிறது. அம்னோவின் உதவியின்றி கிளந்தானில் ஹுடுட் சட்டம் கொண்டுவருவது இயலாத ஒன்று என கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறினார். ஹுடுட் விசயத்தில் தன் தோழமைக் கட்சிகளான …
பிஎன் பிரதிநிதிதான் பொதுக்கணக்கு குழுவின் தலைவராக இருக்க வேண்டும், சிலாங்கூர்…
நாடாளுமன்ற ஜனநாய நடைமுறையில் பொதுக்கணக்கு குழு (பிஎசி) அரசாங்க வரவு செலவு கணக்குகளையும் நிருவாகத்தையும் ஆய்வு செய்வதற்கான அதிகாரமும் பொறுப்பும் கொண்ட ஒரு மிக முக்கியமான குழுவாகும். சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிரணியைச் சேர்ந்த பாரிசான் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் பிஎசி குழுவின் தலைவராக இருக்க வேண்டும்…
பழனிவேல்: மஇகா தலைமையகத்தில் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என் ஆதரவாளர்கள்
கடந்த வியாழக்கிழமை மஇகா தலைமையகத்தில் திரண்டிருந்தவர்களில் “ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்” தமக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்கள் என்கிறார் மஇகா தலைவர் ஜி.பழனிவேல். அன்று அங்கு பல இடங்களிலும் அவரைப் பதவி விலகச் சொல்லும் பதாதைகளைத்தான் பார்க்க முடிந்தது. நூற்றுக்கணக்கானவரின் ‘பதவி விலகு’ முழக்கத்தைத்தான் கேட்க முடிந்தது. ஆனால், பழனிவேல், கட்சி …
அம்னோ இளைஞர் தலைவர்மீது வழக்கு தொடுக்கப் போவதாக மிரட்டுகிறார் கைருடின்
பத்து கவான் அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைருடின் அபு ஹசன், பினாங்கு அம்னோ தலைவர் ரபிஸால் அப்துல் ரகிம்மீது வழக்கு தொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார். பினாங்கு அம்னோவைக் குறை சொன்னதிலிருந்து முன்னவருக்கும் அம்னோவுக்குமிடையில் விரிசல் விரிவடைந்து வருகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவாக்கிய 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு …
‘பெர்காசா உறுப்பினர் கிறிஸ்மஸ் பதாதையைக் கிழித்தது தவறு’
பெர்காசா பேராக் டிஏபி தலைமையகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் அங்கு தொங்க விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்து பதாதை ஒன்றைக் கிழித்தெறிந்ததை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கண்டித்தார். “மற்றவர்களின் சமய நம்பிக்கையை மதிக்க வேண்டும். நம் சமயம் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் …
நாங்கள் குண்டர்கள் அல்லர்: பழனிவேலுக்கு மஇகா உறுப்பினர்கள் அறிவுறுத்து
மஇகா இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் டி.மோகன், டிசம்பர் 18-இல் கட்சித் தலைமையகத்துக்கு வெளியில் கூடி நின்றவர்களைக் குண்டர்கள் என்று கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் கூறியிருப்பதை மறுக்கிறார். பழனிவேலின் கூற்று பொறுப்பற்றது என்றுரைத்த மோகன், அங்கு கூடியவர்கள் அனைவருமே கட்சி உறுப்பினர்கள் என்றார். அவர்கள் மஇகா கிளைகளையும் இளைஞர், …
1946-இல் அம்னோ நடத்திய ஆர்ப்பாட்டங்களை என்னவென்பது?
ஆர்ப்பாட்டம் செய்ததற்காக யுனிவர்சிடி மலாயா மாணவர் தலைவர்களை(யுஎம்8) முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறைகூறக்கூடாது, ஏனென்றால் கடந்த காலங்களில் அம்னோவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது உண்டு. குர்ஆன் மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்யச் சொல்லவில்லை என மகாதிர் நேற்று கினிடிவி-இல் கூறியிருந்ததற்கு எதிர்வினையாக யுனிவர்சிடி மலாயா மாணவர் சங்க முன்னாள் …
மகாதிர்: சான்றோர் 25 பேரின் கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ‘மலாய் சான்றோர் 25 பேர்’ எழுதிய கடிதத்தைத் தாம் இன்னும் படிக்கவில்லை என இன்று கூறினார். “அதை நான் படிக்கவில்லை. அது செய்தித்தாள்களில் இல்லை. “அவர்களுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதும் தெரியாது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சில தரப்புகள் அவர்தான் …
பிகேஆர்: ஹுடுட் பற்றி பேசுவதை பாஸ் தடுக்கக் கூடாது
பாஸ் தலைவர்கள், அக்கட்சி ஹுடுட் சட்டம் கொண்டு வருவது பற்றிக் கேள்வி கேட்கும் முஸ்லிம்களின் சமய நம்பிக்கையைக் கேள்விக்குரியதாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும் எனக் கூறும் பிகேஆர் அப்படிக் கேள்வி எழுப்புவதை ஷியாரியா தடுக்கவில்லை என்கிறது. “பாஸ் கட்சி ஹுடுட் கொண்டுவருவது பற்றி முஸ்லிம்கள் கேள்வி கேட்டாலோ சந்தேகம் …
முன்னாள் டிஎன்பி தலைவர் அனி அரோப் காலமானார்
அனி அரோப்,82, இன்று காலை மணி 5.20க்குக் காலமானார். டிஎன்பி முன்னாள் தலைவரான அனி, இரண்டாண்டுக் காலமாக புரோஸ்டேட் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் ஜாலான் பங்சார், டிஎன்பி பாலாய் இஸ்லாமில் பொதுமக்கள் இறுதி மரியாதை செய்வதற்காக வைக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு …
அமைச்சர்: இறந்தவரின் மருத்துவ அறிக்கை அவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட வேண்டும்
அசுந்தா மருத்துவமனை இறந்துபோன பதின்ம வயது பெண் ஜி.தினேஷா-வின் முழு மருத்துவ அறிக்கையை அவரின் பெற்றோர்களிடம் கொடுக்க வேண்டும் என்கிறார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம். “அது அவர்களின் உரிமை”, என்றும் அவர் வலியுறுத்தினார். என்ன நடந்தது என்பதை விவரிக்கும் முழு அறிக்கையைக் கொடுப்பது வழக்கமான நடைமுறைதான் என்றும் …
மரினா: 25 சிறந்த மலேசியர்கள் எழுதிய திறந்த கடிதம் குறித்து…
ஜி25 என்ற சிறந்த மலேசியர்கள் அடங்கிய குழு நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி அதனைக் கையாள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப்பிடம் கோரிக்கை விடுத்த அவர்களின் திறந்த கடிதம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் பிரதமர் நஜிப்பிடமிருந்து எவ்வித…
கைரி வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது
சட்டம் செயல்படும் விதம் தெரியாவிட்டால் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது என்கிறார் பத்து கவான் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசன். 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டி)த்துக்கு எதிரான புகார் தொடர்பான “உண்மைகளை” போலீசிடம் மட்டுமே தெரிவிக்க முடியும் என …
பெர்காசா: சிஎம் ‘புனித பன்றி’அல்ல, அவரைக் கைது செய்
பெர்காசா, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அம்மாநிலத்தில் முஸ்லிம்-அல்லாதார் அல்லாஹ் என்ற சொல்லைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பல கண்டனக் கூட்டங்களை நடத்தியது. பேராக்கில், ஈப்போ டிஏபி அலுவலகத்துக்கு வெளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெர்காசா உறுப்பினர்கள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் …
ஜாஹிட் டின் கருத்துகளை அவருக்கு எதிராக திருப்பி விடுகிறது பெர்காசா
முன்னாள் உயர் அரசாங்க அதிகாரிகள், பெருந் திட்டங்களுக்கும் குத்தகைகளுக்கும் அலைபவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்கிறாராம். பெர்காசா கூறுகிறது. அந்த அமைப்பின் உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாகக் குறைகூறியது குறித்து ஜாஹிட் …
நோயுற்றிருக்கும் பிகேஆர் பிரதிநிதியின் நிலை கிறிஸ்மசுக்குப் பின்னர் தெரியவரும்
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா கிறிஸ்மசுக்குப் பின்னர் தம் நிலை பற்றி முறையான அறிவிப்புச் செய்வார். “என்மீது அக்கறை காட்டும் ஊடகங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. கிறிஸ்மசுக்குப் பிறகு முறையாக அறிவிப்பேன்”, என ரொலண்ட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இனானாம் சட்டமன்ற உறுப்பினரான அவர் சட்டமன்ற உறுப்பினர் …
‘ஒன்றும் செய்யாத’ டிபிகேஎல்-லுக்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட் ஏன்?
பெரும்பாலான முக்கிய வேலைகளை வெளியாருக்குக் கொடுத்து விடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்)த்துக்கு சிலாங்கூரைவிட பெரிய பட்ஜெட் எதற்கு எனக் கேட்கிறார் செகாம்புட் எம்பி லிம் லிப் எங். “டிபிகேஎல் 2015-க்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட்டைக் கொண்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை. கோலாலும்பூரை விட 3.2 மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட …
வீராப்பு பேசும் பெர்காசாவுக்கும் இஸ்மாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் துணிச்சல் உண்டா?
பெர்காசாவும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)வும் கூறிக்கொள்வதுபோல் அவற்றுக்கு மலாய்க்காரர்களிடையே மகத்தான ஆதரவு இருப்பது உண்மையானால் தேர்தலில் போட்டியிடத் தயாரா என பிகேஆர் சவால் விடுத்துள்ளது. “பெர்காசாவும் இஸ்மாவும் அவற்றின் அதி தீவிர வலச்சாரி, இனவாதக் கருத்துகளுக்கு சமுதாயத்தில் வரவேற்பு உள்ளதாக நம்பினால் ஜனநாயக முறையில் அதைச் சோதித்துப் பார்க்கலாமே”,…
மஇகா அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்-ஸைச் சந்திக்கும்
மஇகாவில் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றி விளக்கம் பெறக் கட்சித் தலைவர் ஜி.பழனிவேலும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் அடுத்த வாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்திப்பர். “சுப்ராவும் நானும் அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்ஸைச் சந்தித்து அதன் உத்தரவு பற்றி விளக்கம் பெறுவோம். உள்துறை அமைச்சர் …
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகலைக் கட்சிக்கு தெரிவித்து…
பிகேஆரின் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா பதவி விலகும் எண்ணத்தைக் கட்சியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்பதைத் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி மலேசியாகினியிடம் இன்று உறுதிப்படுத்தினார். தம் உடல்நிலை “மோசமடைந்திருப்பதாகவும்” அதனால் பதவி விலகுவதாகவும் சியா கடிதம் வழியாகவும் தெரியப்படுத்தியுள்ளார் என ரபிஸி கூறினார்.…
மஇகா செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் தலைவரின் கார் தாக்கப்பட்டது
இன்று மாலை மஇகாவின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அவரசக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தை விட்டு வெளியேறிய போது பெருங்குழப்பம் வெடித்தது. மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி. குமாரின் கார் என்று நம்பப்படும் ஒரு பிஎம்டபுள்யு காரை ஒரு கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு அதனைத் தாக்கினர். போலீசார்…
பேரனைத் திருப்பிக் கொடுங்கள்: மன்றாடுகிறார் தீபாவின் முஸ்லிம் தாயார்
எஸ்.தீபாவின் தாயார் சித்தி அய்ஷா அப்துல்லா, தம் ஆறு-வயது பேரனை அவனின் தாயாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்லாத்துக்கு மதம் மாறிய தம் முன்னாள் மருமகன் இஸ்வான் அப்துல்லாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இஸ்வான் மகனைத் தன் வசமே வைத்திருக்க செய்திருந்த மேல்முறையீட்டில் தோல்வி கண்டதை அடுத்து சித்தி அய்ஷா இந்த …


