ஹிஷாம்: ஆட்சியாளர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறாதீர்

1எம்டிபி  மீது  ஆட்சியாளர்  மன்றம்  அறிக்கை  வெளியிட்டிருப்பதை  வைத்து  அவர்களுக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மீதிருந்த  நம்பிக்கை  போய்விட்டது  என்று  கூறப்படுவதைத்  தற்காப்பு  அமைச்சர் ஹிஷாமுடின்  உசேன்  மறுத்தார். “அது (நஜிப்பிடம்  ஆட்சியாளர்கள்  நம்பிக்கை  இழ்ந்தனர்  என்று கூறுவது)  பொறுப்பற்ற  பேச்சு. “அது  நியாயமல்ல.  ஆட்சியாளர்களுக்குப்  பிரதமர்மீது …

அலி திஞ்சு மலாக்கா ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டார்

முகம்மட்  அலி  பஹாரோம்  தாமான்  மலாக்கா  ராயாவில்  நடத்தத்  திட்டமிட்டிருந்த  கண்டனப்  பேரணியை  அதிகாரிகள்  கேட்டுக்கொண்டதற்கிணங்கக்  கைவிட்டார். அலி  திஞ்சு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முன்னாள்  மலாய்  படைவீரர்  சங்கத்தின் தலைவரான அவர்,  அதே  நாளில்  வரும்  மலாக்கா  ஆளுனரின்  பிறந்த  நாளுக்கு  மரியாதை  கொடுத்து  ஆர்ப்பாட்டத்தைக் …

மசீசவுக்கு‘அதிருப்தி’தான் என்றாலும் அது பிஎன்னில்தான் இருக்கும்

அம்னோ  தலைவர்கள்  சிலரது  இனவாத  கருத்துகளால்  மசீச அடிநிலை  உறுப்பினர்கள்  பிரத்மர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள  வேண்டும்  என்று  விரும்பினாலும்  பிஎன்னை  விட்டு  வெளியேறும்  எண்ணம்  அக்கட்சிக்குக்  கிடையாது. பிஎன்னைத்  தோற்றுவித்த  கட்சிகளில்  மசீசவும்  ஒன்று  என அதன்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  குறிப்பிட்டார்.…

ஆய்வாளர்: நஜிப் சுல்தான்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்

1எம்டிபி  மீதான ஆட்சியாளர்  மன்றத்தின்  அறிக்கை சுல்தான்களுக்கு  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கிடம்  நம்பிக்கை இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  ஆய்வாளர்  ஒருவர்  கருதுகிறார். மலாய்  ஆட்சியாளர்கள்  அரசாங்க  விவகாரம்  ஒன்றில் இதற்குமுன்  இவ்வளவு  தெளிவாகக்  கருத்துத்  தெரிவித்ததில்லை என  சிங்கப்பூரின்  ராஜரத்தினம்  அனைத்துலக  ஆய்வுக் கழகத்தைச்  சேர்ந்த  ஜோன்…

நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்கிறார் லியோங் சிக்

  பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக மசீச முன்னாள் தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் மன்னிப்பு கோரமாட்டார். பிரதமர் தமக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பினால், தம்மை தற்காத்துக் கொள்ளப்போவதாக பிரதமருக்குத் தெரிவித்த லியோங் சிக், "மிகுந்த பணிவுடன் நான் உங்களுடைய சவாலை…

ஆட்சியாளர்கள் நஜிப் வெளியேற அழுத்தம் கொடுக்க வேண்டும், பாஸ் வலியுறுத்து

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவியிலிருந்து  வெளியேற  ஆட்சியாளர்கள்  மன்றம் அழுத்தம்  கொடுக்க  வேண்டும்  என  பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  மாபுஸ்  ஒமார்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். அதன்பின்  அவர்கள்  நாட்டின்  நிர்வாகத்தைச்  சீரமைக்க  அனைத்துக்  கட்சிகளையும்  உள்ளடக்கிய  இடைக்கால  அரசாங்கம் ஒன்றை  அமைக்க  வேண்டும். சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட் …

‘செலாக்கா மலாயு’ என்று சொல்லவில்லை: அந்தோனி லோக்: மறுப்பு

குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்றதற்காகக்  கைது  செய்யப்பட்ட சிரம்பான் எம்பி அந்தோனி லோக்,  லாக்-அப்பிலிருந்து  வெளிவந்தவுடனேயே  ஒரு  புதிய  சர்ச்சையில்  சிக்கிக்  கொண்டிருக்கிறார். அவர் நேற்று கைது  செய்யப்பட்டபோது  ‘செலாக்கா  புன்யா  மலாயு’ என்று உரத்த  குரலில்  சத்தமிட்டாராம். நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில்,  சுமார் 100 …

டிபிபிஏ விவரங்கள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்

அண்மையில்  செய்துகொள்ளப்பட்ட  பசிபிக்- வட்டார  பங்காளித்துவ  உடன்பாடு (டிபிபிஏ)  பற்றிய  விவரங்களைப் பொதுமக்கள்  இன்னும்  ஒரு  மாதத்தில்  தெரிந்து  கொள்ளலாம். என்று  அனைத்துலக  வாணிக,  தொழிலமைச்சர்  முஸ்டபா  முகம்மட்  உறுதியளித்துள்ளார். “இன்னும்  ஒரு  மாதத்தில்  அந்த  உடன்பாடு  பற்றிய  விவரங்கள்  வெளியிடப்படும். கூடவே செலவு ஆதாயப் பகுப்பாய்வு அறிக்கையும்…

டிபிபிஏ பற்றிய விவரங்களை வெளியிடுவீர்: அபிம் கோரிக்கை

அண்மையில்  முடிவுற்ற பசிபிக்  வட்டார பங்காளித்துவ  உடன்பாடு(டிபிபிஏ) மீதான  பேச்சுகளின்  விவரங்கள்  வெளியிடப்பட  வேண்டும்  என மலேசிய  முஸ்லிம்  இளைஞர்  இயக்கம் (அபிம்)  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. டிபிபிஏ-யால்  நாட்டுக்கு  நன்மைதான்  என்று  மக்கள்  நம்பிக்கை  கொள்வதற்கு  அது  உதவும்  என அபிம்  தலைமைச்  செயலாளர்  பைசல்  அப்துல்  அசீஸ் …

பாஸ்: ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது முதலில் கலந்துரையாடல் தேவை

பிரதமர்  நஜிப்புக்கு  எதிராக எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்  கொண்டுவரத்  திட்டமிட்டுள்ள  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  நடத்தக்  கோரும்  தீர்மானத்தை  பாஸ்  ஆதரிக்கும். ஆனால், ஒன்று. முதலில்  அதை நன்கு  விவாதிக்க  வேண்டும். எதிரணி  சகாக்கள்  எழுப்பும்  விவகாரங்களுக்கு  ஆதரவளிக்க தம்  கட்சி  எம்பிகள்  எப்போதுமே …

ஆட்சியாளர் அறிக்கை பற்றி விவாதிக்க 2நாள்களை ஒதுக்குவீர், நாடாளுமன்றத்துக்கு வலியுறுத்து

அக்டோபர்  மாத  இறுதியில்  நாடாளுமன்றத்தின்  பட்ஜெட்  கூட்டத்தின்போது   முதல்  இரண்டு  நாள்களை  ஆட்சியாளர்கள்  மன்றம்  நேற்று  வெளியிட்ட  அறிக்கையை  விவாதிக்கப்  பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “அது (அறிக்கை) நற்சிந்தனையும் நாட்டுப்பற்றும்  கொண்ட  மலேசியர்கள்  கவலை  கொண்டுள்ள மூன்று …

ஆட்சியாளார்கள்: 1எம்டிபி விசாரணை முடிக்கப்பட வேண்டும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  1எம்டிபி பற்றிய விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் மாநாடு கட்டளையிட்டது. "விசாரணயின் முடிவுகள் முழுமையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் அரசாங்கத்தின் நேர்மை பற்றியும் அது உண்மையை மறைக்காது என்பது குறித்தும் மக்கள் நம்பிக்கை…

பெர்சே திரட்டிய நிதி விபரம் வெளியிடப்பட்டது, பிரதமரும் அவ்வாறு செய்யுமாறு…

  தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சே அதன் பெர்சே 4 பேரணிக்கு திரட்டிய நிதியின் கணக்கு விபரத்தை இன்று வெளியிட்டது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அவ்வாறு செய்யுமாறு பெர்சே அவருக்கு சவால் விட்டது. பெர்சேயின் தகவல்படி, ஆகஸ்ட்29-30 கோலாலம்பூர் பேரணிக்கு ரிம2,647,361.74 திரட்டப்பட்டது. அதில் ரிம2,064,652.74 நன்கொடைகளாகப் பெறப்பட்டது.…

குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற டிஎபி எம்பி கைது செய்யப்பட்டார்

  நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் மற்றும் திமியாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சின் சாய் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர். வெளியேற்றப்படும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக காலை மணி 8 லிருந்து…

PKFZ விவகாரத்தால் நஜிப்மீது வெறுப்படைந்திருக்கிறார் லிங்

டாக்டர் லிங் லியோங்  சிக்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  வெறுப்புக்  கொள்ள  காரணம்  இருக்கிறது  என்றும்  அதனால்தான் அவர்  நஜிப்  பதவி  விலக  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்தார்  என்றும்  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்  கூறினார். “மூத்த  அரசியல்வாதி  என்ற  முறையில் …

குவான் எங்: நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்தை டிஏபி ஆதரிக்கும்

நாடாளுமன்ற  எதிரணித்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் மீது  நம்பிக்கை-இல்லா வாக்கெடுப்பு  நடத்த  தீர்மானம்  கொண்டு  வந்தால்  டிஏபி  அதை  ஆதரிக்கும். இதைத்  தெரிவித்த  அதன்  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  அது  ஒரு  முக்கியமான  தீர்மானம்  என்றும்   அதை …

ஹிஷாமுடின்: அம்னோவில் அந்த எழுவர் யார் என்பது தெரியாது

அம்னோ  உதவித்  தலைவர்  ஹிஷாமுடின்  உசேனுக்கு  அம்னோவில்  ஒழுங்கு  நடவடிக்கைக்கு  ஆளான  எழுவர்  பற்றித்  தெரியவில்லை. அவர்கள்  யார்  என்று  வினவியதற்கு, “தெரியாது”  எனச்  சுருக்கமாகப்  பதிலிறுத்தார். கட்சித்  தலைமைச்  செயலாளர்   தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரிடம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்று …

நெத்தன்யாகு- நஜிப் கைகுலுக்கல் மீது பாஸின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தாம்  இஸ்ரேலிய பிரதமர்  பெஞ்சமின்  நெத்தன்யாகுவுடன்  கைகுலுக்கியது  திட்டமிடப்படாத  ஒன்று  என  விளக்கமளித்தாலும்  பாஸின்  ஆத்திரம்  கொஞ்சமும்  குறையவில்லை. அல்-அக்காசா  பள்ளிவாசல்  தொடர்பில்  இஸ்ரேலுக்கும்  பாலஸ்தீனத்துக்குமிடையில்  சச்சரவு  மூண்டுள்ள  வேளையில்  நஜிப்  சிரித்துக்  கொண்டே நெத்தன்யாகுவின்  கரத்தைப்  பிடித்துக்  குலுக்கியதுதான்  ஆத்திரத்துக்குக்  காரணம் …

நிக் நஸ்மி-மீது மீண்டும் குற்றம் சாட்ட இயலாது: நீதிமன்றத்தில் வலியுறுத்து

சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கருப்பு  505  பேரணி நடத்தியபோது  10-நாள்களுக்கு  முன்னதாகவே  பேரணி  பற்றித்  தெரியப்படுத்தத்  தவறியதாக  மூன்றாவது  தடவையாக  குற்றம் சாட்டப்பட்டார். கடந்த  வியாழக்கிழமை  முறையீட்டு  நீதிமன்றம்,  அமைதிப்  பேரணிக்கு  10 நாள்களுக்கு  முன்னதாகவே  அதைத்  தெரியப்படுத்தத்  தவறுவது  குற்றம்  என்று …

பக்கத்தான் ஹராபான் விவகாரத்தால் பிகேஆரில் பிளவில்லை

பக்கத்தான்  ஹராபான்  அமைக்கப்பட்டதன்  தொடர்பில் பிகேஆர்  மத்திய  செயல்குழு உறுப்பினர்கள்  25பேர்  மகஜர்   தாக்கல்  செய்ததை  அடுத்து  அக்கட்சி  பிளவு பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  அக்கட்சியின் துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  மறுத்தார். புதிய  கூட்டணி  அமைக்கப்பட்டதன்மீது  கேள்வி  எழுப்பும்  அம்மகஜர் பற்றி  இன்னும்  விவாதிக்கப்படவே இல்லை  என்றாரவர். மேலும் …

10-நாள் முன்னறிவிப்பு விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றம் துணிச்சலுடன் தீர்ப்பளிக்க வேண்டும்

அமைதிப்  பேரணி  நடத்துவதற்குமுன்  10 நாள்களுக்கு  முன்னதாக  போலீசுக்குத்  தெரியப்படுத்த  வேண்டும்  என்ற  விதி  சட்டப்படி  சரியானதே  என்ற  முறையீட்டு  நீதிமன்றத்தின்  தீர்ப்பு   ஏமாற்றமளிப்பதாக பிகேஆர்  இளைஞர்  பகுதி  கூறியது. ஜோகூர்  பிகேஆர்  நிர்வாகச்  செயலாளர்  ஆர். யுனேஸ்வரனைக்  குற்றவாளியாக்கிய  இத்தீர்ப்பு,  கடந்த  ஆண்டு  இதே  நீதிமன்றம்  தம் …

நஜிப்புக்கு வீர வரவேற்பு

ஐநா  பேரவைக்  கூட்டத்துக்கும்  மீலான்  நகருக்கும்  வருகை  மேற்கொண்டு  விட்டு  நாடு  திரும்பிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  வரவேற்க  ஆயிரத்துக்கு  மேற்பட்டோர் கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்துக்கு  வந்திருந்தனர். பிரதமரையும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும்  ஏற்றிவந்த  சிறப்பு  விமானம்  காலை  மணி  9.55க்குத்  தரை  இறங்கியது.…

முன்னாள் சிஎம்-மீது அரச நிந்தனை வழக்கு

சிலாங்கூர்  இளவரசர்  மதம் மாறினார்  எனத்  தம்  முக  நூல்  பக்கத்தில்  பதிவிட்ட  மலாக்கா  முன்னாள்  முதலமைச்சர்  அப்துல்  ரஹிம்  தம்பி  சிக்மீது  அரச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. ஷா  ஆலம்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  அரச  நிந்தனைச்  சட்டத்தின் பகுதி 4(1), (சி)இன்கீழ்  குற்றம்  சாட்டப்பட்ட  அப்துல்  ரஹிம் …