ஷரிசாட்: மகாதிரைப் போற்றுகிறோம், ஆனால் நஜிப்தான் எங்கள் தலைவர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கடுமையாக  விமர்சித்து  வரும்  வேளையில்  அம்னோ  மகளிர்  நஜிப்புக்குப்  பிளவுபடாத  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டது. அம்னோ  மகளிர்  தலைவர்  ஷரிசாட்  அப்துல்  ஜலில், இன்று  ஓர்  அறிக்கையில்,  எவ்வளவோ  பங்களிப்புச் செய்துள்ள  மகாதிரைப்  போற்றிப்  பாராட்டினாலும்…

சுல்தான் முன்கூட்டியே நாடு திரும்புகிறார்

சிலாங்கூர்  சுல்தான், புடாபெஸ்டிலிருந்து  திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே  நாடு  திரும்புவார். சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா  சனிக்கிழமை  திரும்பி  வருவார்  என  மாநில  அரசு  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன. இதற்குமுன்  அவர்  ஆகஸ்ட்  27-இல்  நாடு  திரும்புவார்  எனக்  கூறப்பட்டிருந்தது. மாநிலத்தில்  நிலவும்  குழப்பத்தை  சுல்தான்  வந்துதான்  தீர்த்து …

பாஸ் தலைவர்: சட்டமன்றத்தைக் கலைப்பது ‘சுத்த மடத்தனம்’

சிலாங்கூர்  சட்டமன்றத்தைக்  கலைக்க  வேண்டும்  என்பது  “பொறுப்பற்ற பேச்சு, “மடத்தனமான  பேச்சு”  என  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்  முகம்மட்  ஹனிபா  மைடின்  கூறினார். காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பெரும்பான்மை  ஆதரவைப்  பெற்றிருப்பதால்  அது  தேவையற்றது. ஆகஸ்ட்  14-இல், பாஸ்  சட்டமன்ற …

காலிட்-குறைகூறலை நிறுத்துங்கள்: பாஸ் தலைவர் கோரிக்கை

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  வெளிப்படையாகக்  குறைகூறுவதை  அனைவரும்  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  என்று  சிலாங்கூர்  பாஸ்  துணை  ஆணையர்  சித்தி  மரியா  மஹ்மூட்  கேட்டுக்கொண்டிருக்கிறார். சிலாங்கூருக்கு  காலிட்டின்  பங்களிப்பை  மறக்கலாகாது  என  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினருமான  அவர்  குறிப்பிட்டார். “சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  பக்கத்தான் …

எம்பி-க்கு ஆதரவாக என்ஜிஓ-கள் அணி திரள்கின்றன

சிலாங்கூர்  மக்களைப்  பிரதிநிதிக்கும்  12  என்ஜிஓ-களின்  கூட்டணி, மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  அவரது  தவணைக்காலம்  முடியும்வரை  பதவியில் இருக்க  அனுமதிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தும்  இயக்கமொன்றைத்  தொடக்கியுள்ளது. அச்செய்தி  அமைதியான  முறையில்  தெருவிலிருந்து  அரண்மனை  வரை  கொண்டு  செல்லப்படும்  என  அதன்  தலைவர்கள்  தெரிவித்தனர். அவர்கள் …

விளக்கம்பெற பிகேஆரை அழைத்தது ஆர்ஓஎஸ்

சங்கங்களின்  பதிவகம் (ஆர்ஓஎஸ்), சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டது  பற்றி  விளக்கம்  கேட்க  பிகேஆரைக்  கூப்பிட்டிருப்பதாக  தெரிகிறது. ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து  கடிதம் வந்திருப்பதை  பிகேஆர்  ஒழுங்கு  வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  உறுதிப்படுத்தினார். ஆனால், அதில்  காலிட்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டது  பற்றிக்  குறிப்பிடப்படவில்லை …

தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தவறான முன்மாதிரி

தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  என்.சுரேந்திரன்மீது  குற்றம்  சாட்டப்பட்டிருப்பதன்வழி  ஒரு  அநியாயமான  முன்மாதிரி  ஏற்படுத்தப்பட்டுள்ளது  என சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்  அமைப்பு  எச்சரித்துள்ளது. இது, வழக்குரைஞர்கள், சட்டக்  கருத்துகள்  தெரிவிக்கும்போது  அந்தக்  கருத்துகள்  அரசாங்கத்தின்  அரசியல்  நிலைப்பாட்டுக்கு  முரணாக  அமைந்திருக்கும்  பட்சத்தில்  அவர்களுக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை எடுக்க  இடமளித்து  விடும்.…

எம்பி: எம்ஆர்டி வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பீர்

எம்ஆர்டி  திட்டம்  மொத்தத்தையும்,  அதன் பாதுகாப்புமீதான  ஆய்வு  நடத்தி  முடிக்கப்படும்வரை,  நிறுத்தி  வைக்க  வேண்டும்  என  சுபாங்  எம்பி  சிவராசா  கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றிரவு  மூன்று  தொழிலாளர்கள் உயிரிழந்த  சம்பவம்,  கடந்த  இரண்டு  மாதங்களில்  நிகழ்ந்துள்ள  எம்ஆர்டி  சம்பந்தப்பட்ட  இரண்டாவது  அசம்பாவிதமாகும். “எம்ஆர்டி  வேலை  நடக்கும்  இடங்கள்  ஊடே …

ஹிஷாம்: ஒபாமாவும் புடினும் செய்ய முடியாததை நஜிப் செய்தார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தற்காத்துப்  பேசியுள்ள  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன், அமெரிக்க   அதிபர்  பராக்  ஒபாமாவும்  ரஷ்ய  அதிபர்  விளாடிமிர்  புடினும்  செய்ய  முடியாததை  நஜிப்  செய்திருக்கிறார்  என்றார். எம்எச் 17 விமானம்  விழுந்து  நொறுங்கிய  சம்பவத்தை  நஜிப்  கையாண்ட விதமும்,  இறந்துபோனவர்களின்  சடலங்களை  நாட்டுக்குத்…

எம்ஆர்டி விபத்தை அடுத்து சிஇஓ பதவி விலகினார்

நேற்றிரவு  எம்ஆர்டி கட்டுமான  வேலை  நடக்கும்  இடமொன்றில்  நிகழ்ந்த  விபத்தில்  மூவர்  கொல்லப்பட்டதை  அடுத்து  எம்ஆர்டி கார்ப்பரேசன்  தலைமை  செயல் அதிகாரி  அஸ்ஹார்  அப்துல்  ஹமிட், பதவி  விலகுவதாக  அறிவித்துள்ளார். இன்று  சுங்கை  பூலோவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவர்  இதனை  அறிவித்தார். எம்ஆர்டி டமன்சாரா  நிலையம்  கட்டப்படும்  இடத்தில்…

‘இதுதான் நேர்மைக்குக் கொடுக்கும் விலை’ என்றார் எம்பி

நேர்மைக்காக  இருப்பதற்குக்  கொடுத்த  விலை,  அதுதான் தமது  இன்றைய  நிலை  என்று  கூறியுள்ளார் சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம். சிலாங்கூர்  நிர்வாகத்தில் தொடரும்  நெருக்கடிக்காக அவர்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார். “பரவாயில்லை. அரசியல்வாதியாக  நினைத்த  நான்  அதன்  விளைவுகளையும் ஏற்கத்தானே  வேண்டும். இதுதான்  நேர்மைக்குக்  கொடுக்கும்  விலை”,…

அசிசாவை சுல்தான் நிராகரித்தால் அடுத்த திட்டம் என்ன? பிகேஆர் தெரிவிக்க…

பிகேஆர்  தலைவர்   டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்  மந்திரி  புசாராவதை  சிலாங்கூர்  சுல்தான் ஏற்க  மறுக்கும்  சாத்தியம்  இருப்பதால்  அப்படிப்பட்ட  நிலையில் என்ன  செய்யப்படும்  என்று  கேட்டதற்கு பிகேஆர்  பிடிகொடுக்காமல்  பேசுகிறது. வெளிநாடு  சென்றுள்ள சுல்தான்  திரும்பிவரக்  காத்திருப்பதாக  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன் …

ஜாஹிட்: மகாதிர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மதிக்க வேண்டும்

எல்லாரையும்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகமட்டும்  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்களை  மதிக்க  வேண்டும்  என்று   உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்  பிரதமர்  நஜிப்புக்கு  விசுவாசம்  காட்டிட  வேண்டும் என்றவர்  குறிப்பிட்டார். “மகாதிர் பிரதமராக  இருந்தபோது  எல்லாரும்  அவருக்கு  விசுவாசமாக  இருக்க  வேண்டும்  என்று …

நஜிப்பைப் பகிரங்கமாக சாடுவதை நிறுத்துவீர்- தெங்கு அட்னான்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசாங்கத்தைப்  பகிரங்கமாக  சாடுவதை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நிறுத்திக்கொள்ள  வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர், முன்னாள்  பிரதமர்  தம்  கருத்துகளைத்  தனிப்பட்ட  முறையில்  தெரிவிக்கலாம்  என்றார். “துன்னின்  கருத்துக்கு  மதிப்பு  கொடுக்கிறோம். அதை  வெளிப்படையாகக் …

அன்வாரின் வழக்குரைஞர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டது

பிகேஆர் உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்மீது  இன்று  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டது. அவர்  குற்றவாளி  எனக் கண்டுபிடிக்கப்பட்டால்  கூடின  பட்சம்  மூன்றாண்டு  சிறைத்தண்டனையும்  ரிம5,000 அபராதமும்  விதிக்கப்படலாம். ஏப்ரல் 14ஆம்  நாள்  வெளியிட்ட  அறிக்கையில், அன்வர்  இப்ராகிம்மீது  சுமத்தப்பட்ட  குதப் புணர்ச்சிக்  குற்றச்சாட்டு  பொய்யானது  எனக் …

அரண்மனை அஸிசாவை நிராகரிப்பது அரமைப்புச் சட்டத்திற்கு சவால் விட்டதாகும்

  சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலின் நியமனத்தை அரண்மனை நிராகரித்தால் அது "தற்போதைய அரசமமைப்புச் சட்டத்தைத் தள்ளி வைப்பதற்கு" ஒப்பாகும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார். அவ்வாறான செயல் மாநிலத்தை சுதந்திரத்திற்கு முற்பட்ட…

மகாதிர்: நஜிப்பைத் தேர்ந்தெடுத்தது தப்பாக போய்விட்டது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தந்து  விட்டதாகக்  கூறி  வருத்தப்படும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நஜிப்பின்  செயல்பாடு   அப்துல்லா  அஹமட்  படாவியைவிட  மோசமாக    உள்ளது  என்றார். மகாதிர்,  இன்று  தம்  வலைப்பதிவில்  நஜிப்பைக்  கடுமையாகச்   சாடி  இருந்தார். “வேறுவழியின்றி  ஆதரவு  அளிப்பதை  நிறுத்தினேன். அதுவும்  பலனளிக்கவில்லை.…

தம்மைச் சந்திக்க காலிட் வெளிநாடு வர வேண்டியதில்லை என்று சுல்தான்…

மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  வெளிநாடு  சென்று  சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்து  அவருடன் நடப்பு  அரசியல்  நிலவரம்  குறித்து   விவாதிக்க  விரும்பி  அதற்கு அனுமதி  கேட்டது உண்மைதான்  என்பதை  சிலாங்கூர்  அரண்மனை  உறுதிப்படுத்தியது. தற்போது  ஹங்கேரி, புடாபெஸ்டில்  உள்ள  சுல்தானை  அங்கு  சென்று  சந்திக்க  காலிட்  அனுமதி …

அன்வாரின் வழக்குரைஞர் சுரேந்திரனுக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு

  அன்வாரின் குதப்புனர்ச்சி II வழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் மீது நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படும். சுரேந்திரனுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் புலன்விசாரனை அதிகாரி சுரேந்திரனிடம் தெரிவித்திருப்பதாக பிகேஆரின் சட்டப் பிரிவு தலைவரான லத்தீபா…

சுரேந்திரன்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

பிகேஆர் உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்மீது  நாளை  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச நிந்தனைக்  குற்றம்  சாட்டப்படும். அன்வர்  இப்ராகிம்  குதப் புணர்ச்சி  வழக்கு  பற்றி  அவர்  கருத்துத்  தெரிவித்ததுதான் இதற்குக்  காரணமாகும். சுரேந்திரனுக்கு  எதிராகக்  கைதுஆணை  பிறப்பிக்கப்  பட்டிருப்பதாக  போலீஸ்  அதிகாரி  ஒருவர்  சுரேந்திரனிடம்  தெரிவித்துள்ளார்  என  பிகேஆர்  சட்ட…

சிலாங்கூர் மந்திரி புசார்: வான் அஸிசா பக்கத்தானின் ஒரே வேட்பாளர்

இன்று நடைபெற்ற பல மணி நேர ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகு பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு அதன் ஒரே வேட்பாளராக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை நியமிக்க ஒப்புக்கொண்டன. இன்று முன்னேரத்தில், பாஸ் அப்பதவிக்கு கூடுதலாக பிகேஆரின் துணத் தலைவர்…

பாஸ் முடிவை ஏற்றார் காலிட்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவி மற்றும்  மாநில  ஆட்சிக்குழு  தொடர்பில்  பாஸ்  கட்சி  செய்துள்ள  முடிவைத்  திறந்த  மனத்துடன்  ஏற்பதாக  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறியுள்ளார். அடுத்து  மாநில  சுல்தானைச்  சந்தித்து  “தொடர்ந்து  எடுக்க  வேண்டிய  நடவடிக்கைகள்  குறித்து அவருக்கு  ஆலோசனை”  கூறப்போவதாக அவர்  சொன்னார். “சுல்தான்  இறுதி …

அஸ்மின்: நல்லதே நடக்க வேண்டிக்கொள்வோம்

பிகேஆர்,  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்குப்  பதிலாக  அதன்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  நியமிக்கப்பட  வேண்டும்  என்பதையே  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்தது. பாஸ், இப்போது  இன்னொரு  பெயரையும்  சேர்த்துக்  கொண்டிருக்கிறது. இன்று  இரண்டு  மணி  நேரம்  கூடிப்  பேசிய  பாஸ்  மத்திய  குழு மந்திரி …