எனக்கு என் புதல்வி திரும்ப வேண்டும் என்கிறார் இந்திரா காந்தி

தமது மனைவிக்குத் தெரியாமல் தமது மூன்று பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம்  மாற்றிய தந்தை, அந்த மதம் மாற்றத்தை உயர் நீதிமன்றம் செல்லாது என  அறிவித்த போதிலும் இளைய குழந்தையை திரும்ப ஒப்படைக்க மறுப்பதால் அவர்  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். முன்பு கே பத்மநாதன் என அழைக்கப்பட்ட…

குவான் எங்: ‘இனவாத’ மருத்துவர்களை விசாரிப்பதாக நான் வாக்குறுதி அளிக்கவில்லை

இனவாத மருத்துவர்கள் எனக் கூறப்படுகின்றவர்களைப் பற்றி விசாரிப்பதாக தாம்  வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ வாக்குறுதி அளிக்கவில்லை  என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். பினாங்கில் 'இனவாத மருத்துவர்கள்' என்னும் கடுமையான குற்றச்சாட்டைத் தாம்  விசாரிப்பதாக வாக்குறுதி அளித்ததாகச் சொல்லப்படுவது குறித்து லிம் அதிர்ச்சி  தெரிவித்தார். அவ்வாறு…

உதயாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் இண்ட்ராப் ஆர்ப்பாட்டம் செய்யும்

இண்ட்ராப், சிறையில் உள்ள அதன் தலைவர் பி.உதயகுமாரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் காஜாங் சிறைச்சாலைக்குமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 1, உதயா மருத்துவரைக் காண்பதற்கான நாளாகும். அதிகாரிகள் அதற்கு இணங்காவிட்டால் உதயகுமாரின் துணைவியார் எஸ்.இந்திரா தேவியின் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் சிறைச்சாலை முன்புறம் முகாமிடுவார்கள் என்று இண்ட்ராப்…

‘ஸ்கோர்பியன் கொள்முதலில் அல்டான்துயாவுக்குத் தொடர்பில்லை’

கொலையுண்ட மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷாரிபுக்கு  ஸ்கோர்பியன்  நீர்மூழ்கிக்  கொள்முதலில் எந்தத் தொடர்புமில்லை  என்று  கூறியுள்ளார்  ஜஸ்பிர் சிங் சாஹல்.  ஜஸ்பிர் சிங்  ஸ்கோர்பியன் நீர்மூழ்கி வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவராவார். அப்துல் ரசாக் பாகிண்டாவுடன் அல்டான்துயாவுக்குத் தொடர்பு இருந்திருந்தால் அது ஒரு தனிப்பட்ட விவகாரமாகும் என்றாரவர். நியு ஸ்ரேய்ட்ஸ்…

உறுப்பினர்கள் புதிய கட்சியை விரும்புகிறார்களா, நிரூபியுங்கள்: ஆர்ஓஎஸ்ஸுக்கு டிஏபி சவால்

டிஏபி உறுப்பினர்கள் புதிய கட்சி அமைக்க விருப்பம் கொண்டிருப்பதாக சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதற்கு  ஆதாரம்  காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் அப்படிச் சொன்னதாக நேற்று ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. “அது  மட்டுமீறிய  பேச்சு”, என்று குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளர்…

இந்திராவுக்கு வெற்றி தான் ஆனால் ஏஜி முறையீடு செய்வார்

'அரசாங்கம் விரைவில் முறையீடு செய்யும். அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள்  மாற்றும். அடுத்து எல்லாம் பழைய கதை தான்' இஸ்லாத்துக்கு பிள்ளைகளை மதம் மாற்றியதை நீதிமன்றம் மாற்றியது சின்ன அரக்கன்: இது வரலாற்றுச் சிறப்புடைய முடிவாகும். இந்த நாட்டில்  பிள்ளைகள் தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதை நிறுத்தவும் இன நல்லிணக்கத்தை…

தகவலை தெரிவித்த தாயை அச்சுறுதுகின்றவர்களை அம்பலப்படுத்துவது பற்றி மஇகா சிந்திக்கிறது

'குளியலறை கேண்டீன்' பற்றிய தகவலை வெளியிட்டவருக்கு மருட்டலை  விடுக்கின்றவர்களுடைய தொலைபேசி எண்களை அம்பலப்படுத்த மஇகா வியூக  இயக்குநர் எஸ் வேள்பாரி திட்டமிடுகிறார். "கோழைத்தனமான அந்தச் செயலுக்கு பொறுப்பான தனிநபர்கள் தாங்கள்  செய்துள்ள காரியத்தின் விளைவுகளை" உணரும் பொருட்டு தமது நாளேடான  தமிழ் நேசனில் தொலைபேசி எண்களை வெளியிடுவது பற்றி…

‘Saya Pilih BN’ இசி-க்கு குற்றமாகத் தெரியவில்லை

"எந்த நிபந்தனையும் இல்லாமல் மோசடிக்காரர்கள் இனிமேல் எம்ஏசிசி, போலீஸ்,  நீதிபதிகள் ஆகிய தரப்புக்களுக்கு பணத்தையும் கொடுக்கலாம். இலவச  விடுமுறைகளையும் வழங்கலாம்" இசி: நிபந்தனையில்லாத போக்குவரத்துச் செலவுப் பணம் லஞ்சம் அல்ல லெலிஸ்டாய்: இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவர்களே, உங்கள்  பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிமுகம் இல்லாதவர்களுக்கு…

பேரின்பத்திற்கு பெருந்துன்பம்!

இனங்களுக்கிடையிலானப் பிரச்னைகளைச் சரிகட்டுவதற்கென்று தயாரிக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்ட சில நிமிடங்களுக்குள் அதில் கையெழுத்திட்ட பெர்காசா மற்றும் இந்திய அரசு சார்பற்ற அமைப்பு பேரின்பம் ஆகிய இருதரப்பினர்களுக்கிடையில் தகராறு மூண்டது. இச்சாசனம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா துணைத் தலைவர் ஜுல்கிப்லி நூர்டின் சுங்கை பூலோ ஸ்ரீ…

ஸ்ரீ பிரிஸ்டினா தலைமையாசிரியருக்கு ஆதரவாக முகநூல் பக்கம் திறக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட்  நோருக்கு ஆதரவாக முகநூல் நேயர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் எழுதியுள்ள இணையப் பயனாளிகள் அவரது நடவடிக்கையை ஆதரித்ததுடன் 'எதிர்மறையான' தோற்றத்தைத் தருவதற்காக அந்த விவகாரத்தை 'திசை திருப்பி' விட்டவர்களையும் சாடியுள்ளனர். முகமட் நாசிர் குளியலறையை தற்காலிக கேண்டீனாக…

நிபந்தனையற்ற முறையில் போக்குவரத்துப் பணம் கொடுப்பது கையூட்டல்ல

தேர்தல் காலத்தில் போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுப்பது கையூட்டல்ல. ஆனால், அதில் நிபந்தனை எதுவும் ஒட்டிக்கொண்டிருக்ககூடாது என்கிறது தேர்தல் ஆணையம் (இசி). பணம் கொடுப்பவர் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறினால் மட்டுமே அது சட்டமீறலாகும் என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.…

குழந்தை மதம் மாற்ற தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய வேண்டாம்…

எம் இந்திரா காந்தியின் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது  அரசமைப்புக்கு முரணானது என நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  முறையீடு செய்ய வேண்டாம் என அவருடைய வழக்குரைஞரான எம்  குலசேகரன் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவரை வலியுறுத்தியுள்ளார். தாய்க்கும் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்க முறையீடு…

போலீஸ் திடீர் மரணத்தைப் பதிவுசெய்யவில்லை என்ற செய்தியால் எரிச்சலடைந்தது சுவாராம்

தடுப்புக்காவலில் இருந்த ஆர். குணசேகரன் இறந்தபோது அந்தத் திடீர் மரணம் குறித்து புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என செந்தூல் போலீஸ் தலைவர்  ஏசிபி ஜக்கரியா பகான் கூறியிருப்பதை சுவாராம்  குறைகூறியுள்ளது. “குணசேகரனின் மரணம் குறித்து போலீஸ் இதுவரையிலும் புகார் எதையும் பதிவுசெய்யவில்லை. இது எப்படி சாத்தியம்?”, என்றந்த…

டிஏபி: சிலாங்கூர் போலீஸ் தலைவர் பற்றி பொய் சொன்னதற்காக உத்துசான்…

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் குளியலறை தற்காலிக கேண்டீனாக  பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் படங்களை பரப்புகின்றவர்கள் மீது தேச  நிந்தனைச் சட்டத்தைப் போலீசார் பயன்படுத்துவர் என செய்தி வெளியிட்டதற்காக  அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்…

கிராமத் தலைவர்: அது லஞ்சம் அல்ல. வெறும் ஊக்குவிப்புத் தான்

கோலா பெசுட் இடைத் தேர்தல் தினத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக  கூறப்படுவதை கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத் தலைவர் யாகோப் காதிர்  மறுத்துள்ளார். "அது லஞ்சம் என்றால் மிக அமைதியாக செய்யப்பட்டிருக்கும். நாங்கள் பிஎன்  -னுக்கு வாக்களித்தவர்களுக்கும் பாஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும்  வேறுபாடின்றி நாங்கள் அந்த ஊக்குவிப்பைக் கொடுத்தோம்.…

பெர்காசா மற்ற இன என்ஜிஓ-களுடன் கைகோர்க்கிறது

இனவாத அமைப்பாகக் கருதப்படும் பெர்காசா,மலேசிய அனைத்து- இன என்ஜிஓகள் மன்றம் அமைக்க வகைசெய்யும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளது. கையெழுத்திடும் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு கோலாலும்பூர் கிளப் சுல்தானில்  நடைபெறும். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்வும் நடக்கும். “நோன்பு திறப்பில் கலந்துகொள்ள சீன, இந்திய,…

‘குளியலறை கேண்டீனை’ அம்பலப்படுத்திய தாய்க்கு கடத்தல் மருட்டல்

குளியலறை கேண்டீன் சர்ச்சை தொடர்பான படங்களை வெளியிட்ட தாய்க்கு  கடத்தல் மருட்டல்கள் வந்துள்ளன. அதே வேளையில் ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப்  பள்ளியில் உள்ள அவரது புதல்வியை வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும்  கேலி செய்கின்றனர். தமது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப் போவதாகவும் புதல்வியைக் கடத்தப்  போவதாகவும் அடையாளம் தெரியாத தனிநபர்கள்…

ஜாமீன் செலுத்திய பின்னர் அல்விவி ஜோடி விடுவிக்கப்பட்டனர்

செக்ஸ் வலைப்பதிவாளர்களான அல்வின் தான் -னும் விவியன் லீ-யும் 30,000  ரிங்கிட் ஜமீன் தொகையை கட்டிய பின்னர் இன்று விடுவிக்கப்பட்டனர். சிறைச்சாலை மோசமானதாக இல்லை என அவர் நீதிமன்றத்துக்கு வெளியில்  நிருபர்களிடம் கூறினார். தான் சுங்கை பூலோ சிறையிலும் லீ காஜாங் சிறையிலும் கடந்த எட்டு நாட்களாகத்  தடுத்து…

‘தடுப்புக் காவல் மரணங்களை தடுக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்’

மலேசியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ள 9 போலீஸ் தடுப்புக் காவல்  மரணங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இது வரை அத்தகைய 12 மரணங்கள்  நிகழ்ந்துள்ளன. அதனால் அத்தகைய மரணங்களை தடுப்பதற்கு மலேசிய அதிகாரிகள் தங்கள்  வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்பு அமைப்பும்  சுவாராமும் கேட்டுக் கொண்டுள்ளன. உள்துறை…

TPPA-யின் 18வது சுற்றுப் பேச்சுக்கள் முடிந்தன- மருந்துகள் மீது இணக்கம்…

TPPA என்ற பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் மீதான 18வது சுற்றுப் பேச்சுக்கள்  கோத்தா கினாபாலுவில் நேற்று நிறைவடைந்தன. அந்தப் பேச்சுக்களில் மருந்துகள் சம்பந்தப்பட்ட அறிவாற்றல் சொத்துக்கள் பற்றி எந்த இணக்கமும் ஏற்படவில்லை. பேச்சுக்கள் இன்னும் தொடரும் என அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சைச் சார்ந்த ஜே ஜெயஸ்ரீ கூறினார். அவர்…

ஏ தெய்வீகன்: ‘குளியலறை கேண்டீன் படங்கள் தொடர்பில் தேச நிந்தனைச்…

குளியலறை கேண்டீன் சர்ச்சை தொடர்பில் படங்களைப் பரப்பியவர்கள் மீது  போலீசார் தேசநிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தும் எனத் தாம் சொன்னதாக  கூறப்படுவதை சிலாங்கூர் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ஏ தெய்வீகன்  மறுத்துள்ளார். 'குறிப்பிட்ட ஒரு பத்திரிகை' தம்மை தவறுதலாக மேற்கோள் காட்டி விட்டது என  தெய்வீகன் சொன்னதாக சின்…

தலைமறைவாக இருக்கும் போலீஸ்காரர்- அவர் மாட்டி விடப்பட்டாரா ?

'இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் நீங்கள் நிரபராதி என்றால் ஏன் சட்டத்திலிருந்து  விலகி ஒடுகின்றீர்கள் ? நீங்கள் மாட்டி விடப்பட்டிருந்தால் வழக்குரைஞர்  ஒருவரை நாடுங்கள். உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்' தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் தமக்கு எதுவும்  தெரியாது என்கிறார் சீ3: என் தர்மேந்திரன் மரணத்துக்கு யார்…

பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் மாற்றியது

எம் இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவர்களுடைய தந்தை இந்திரா  காந்திக்குத் தெரியாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை ஈப்போ உயர் நீதிமன்றம்  இன்று மாற்றியுள்ளது. அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமானதாகும். பிள்ளைகள் மீது kalimah syahadah (இஸ்லாத்தை தழுவுவதற்கான அறிவிப்பு)  செய்யப்படாததால் அந்தப் பிள்ளைகள் மதம் மாற்றப்படவில்லை என…