நரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் தியானம்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோதி இன்று, சனிக்கிழமை, காவி உடை உடுத்தி அங்கு சென்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தபின் இரண்டு கிலோ மீட்டர் தூரம், பனிமலைப் பாதையில் நடந்து, தியானம் செய்யும்…

ராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்..…

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிறந்த…

“சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக…

விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை…

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின்…

சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைய முயற்சி

பத்தனம்திட்டம்: சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல…

கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு…

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே 19 அன்று தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரசாரம்…

’நிலமும் எங்களுக்கு பிள்ளைதான்; அதை இழக்க நாங்கள் தயாராக இல்லை’…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தாநல்லூரில் விவசாயிகள்  வெண்ணாற்றின் கழிவு நீரில் இறங்கி போராட்டம்  நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  மத்திய அரசு  ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதற்கு டெல்டா  மாவட்டத்தில்  விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்…

பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை?

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு…

வெளிநாடு தப்பிய 132 பேரை நாடு கடத்த மனு

புதுடில்லி: 'வங்கி மோசடி வழக்குகளில் சிக்கி, வெளிநாடு தப்பியுள்ள, தொழிலதிபர்கள், விஜய் மல்லையா, நிரவ் மோடி உட்பட, பல்வேறு வழக்குகளில், 132 பேரை நாடு கடத்தும்படி, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி…

புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்?.. சென்னையில் தண்ணீர்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது இன்னும் இரண்டு வாரத்தில் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் உச்சத்துக்கு சென்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை பொய்ந்து போனதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு நிலவுகிறது. ஏனெனில்…

தாகத்தில் தமிழகம்.. ஊற்று நீரை நம்பி வாழும் மக்கள்.. ஒரு…

மதுரை: தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தண்ணீரில்லாததால் ஊற்று நீரை நம்பி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டன. இந்த நிலையில் தற்போது கோடை…

விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவில் நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கான 'ஈழம்' எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடத்த…

இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு! ஒரு குடம் தண்ணீர்…

சேலத்தில், இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இலங்கையில் எல்டிடிஇ போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின்போது, அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கையில்…

தமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக… தாய்மொழியில் பேச தடை விதித்த…

சென்னை: வட மாநிலத்தவர் பெருமளவில் ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி தாய் மொழியில் பேசக் கூடாது என்றும், ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் ரயில்வே உத்தரவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை திருமங்கலம் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் மோதி…

’இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே’ ஒரு இந்து: கமல்ஹாசன்…

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன் ராஜ்…

இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வேண்டும் -சாயல்குடியில் அனைத்து சமுதாய…

குடிநீர் எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை கண்டித்து சாயல்குடியில் கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அனைத்து சமுதாய தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக தீர்மானம் இயற்றியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலுகாவை உள்ளடக்கிய இருநூற்றுக்கும் மேற்பட்ட…

எங்க பாட்டன்கள் குளம் வெட்டினாங்க… இப்ப நாங்க தூர் வாருறோம்……

-நீரின்றி அமையாது உலகு.. ஆனால் தற்போது குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கிறது தமிழகம். சுமார் 50 ஆண்டு காலம் நீர்நிலைகளைப் பற்றி சிந்திக்காமல் ஆக்கிரமிப்பை மட்டுமே செய்து கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை நல்ல பாடத்தை புகட்டிவிட்டது. ஏரி, குளம், குட்டை, வாரி, வாய்க்கால் இப்படி நிலடித்தடி நீரை சேமிக்கும் அத்தனை இடங்களும்…

‘ஹைட்ரஜன் வாயுவை ஆக்சிஜனாக மாற்றும் இயந்திரம்’ தமிழக பொறியாளர் அசத்தல்!

தமிழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் (MECHANICAL ENGINEER) சவுந்தரராஜன் குமாரசாமி  கோவை மாவட்டத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தண்ணீரில் செயல்படக்கூடிய சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் இயந்திரம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்…

உடல்நலம் பாதித்த சிறுமிக்காக விமானம் ஏற்பாடு செய்த பிரியங்கா!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, உயிருக்குப் போராடிய சிறுமியை மேல் சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா, உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று…

பாலகோட் பதிலடி பலி 170 – இத்தாலி செய்தியாளர்

புதுடெல்லி ; காஷ்மீரில் உள்ள புல்வாமா மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதில் 170 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கா மரினோ உறுதிப்படுத்தியுள்ளார். புல்வாமா : காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பயங்கரவாதிகள் இந்திய…

நாடு பிரிவினைக்கு நேரு காரணம் : பா.ஜ., எம்.பி.,

முகமது அலி ஜின்னாவை பிரதமராக அறிவித்திருந்தால் இந்தியா பிரிவினை அடைந்திருக்காது என ம.பி., மாநில பா.ஜ. வேட்பாளர் குமன்சிங் தோமர் கூறி உள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 6-வது கட்டமாக ம.பி., மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில்…

இந்தியாவில் ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை ஸ்தாபித்ததாக ஐ.எஸ் அறிவிப்பு

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதலின் போது, ஐ.எஸ்…

மொத்தம் 30 குழந்தைகள்.. அதில் 27 குழந்தைகள் அவர்களுடையது…? குழந்தை…

ராசிபுரத்தில் பணத்திற்கு பச்சிளங்குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்கப்பட்டுளளதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக அண்மையில் வாட்ஸ் அப்…