‘இனவாத டிஏபி-யை’ நிராகரியுங்கள் என முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களுக்குச்…

பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின், 'இனவாத, பிரிவினைவாத, ஆணவப் போக்குடையது' என தாம் வருணிக்கும் டிஏபி அரசியலை நிராகரிக்குமாறு கேலாங் பாத்தா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். "கேலாங் பாத்தா மக்கள் அனைவருக்கும் லிம் கிட் சியாங்-கை தெரியும். நமக்கு அவருடைய வரலாறு தெரியும்.  அவர் ஒர் இடத்திலிருந்து…

தேர்தலுக்குமுன் முகைதின் சீனப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கிறார்

ஜோகூரில் தேர்தல் காய்ச்சல் அதிகமாகவே இருக்கிறது.  அடுத்த வாரம் பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் முகைதின் யாசின் தேசிய வகை சீனப்பள்ளிகளின் ஆசிரியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சிறப்புக்கூட்டமே” இதற்குச் சான்றாகும். வேட்பாளர் நியமன தினத்துக்கு நான்கு நாள் முன்னதாக ஜோகூர் பாரு பூன் இயு தேசிய வகை…

முஹைடின்: பக்காத்தான் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பது ஒரு தந்திரம்

பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை பெரும் எண்ணிக்கையில் அறிவிப்பது,  உட்பூசலுக்கான அறிகுறி என பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் சொல்கிறார். வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களை அறிந்து கொள்ள அனுமதிக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர்,  மற்ற கட்சிகளை  மடக்கி, குறிப்பிட்ட ஒரு…

தேர்தல் கொள்கை அறிக்கை வாக்குவாதம்: பக்காத்தான் பிஎன் -னைக் ‘காப்பி’…

பக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையைத் தயாரித்த போது பிஎன் சிந்தனைகளைக் 'காப்பி'  அடித்தது என முஹைடின் யாசின் திருப்பிச் சாடியுள்ளார். அந்த இரு கூட்டணிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் ஒரே மாதிரியான கருத்துக்கள் பற்றி  இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் தொடரும் வேளையில் முஹைடின்…

துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு…

சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின்  கூறுகிறார். "அந்தத் திரைப்படம் பொது மக்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் சில பிரிவினருக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது." "சில பொறுப்புள்ள…

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான மறு பயிற்சிக்கு 22 மில்லியன் ரிங்கிட் ஏன்…

ஒப்பந்தம் ஒன்றுக்கு ஈடாகக் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை அமெரிக்க விளையாட்டுக் கல்லூரி (USSA) மறுத்துள்ள போதிலும் டிஏபி அந்தப் பேரம் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றது. ஆயிரம் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கு அம்னோவுடன் தொடர்புடையது எனக்…

முகைதின்: மே 13 மீண்டும் வராது, ஆனால் பக்காத்தான் ஆட்சிக்கு…

அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றினால் குழப்பம் மூள்வது உறுதி என்றார். “நான் அப்படி எதுவும் சொன்னதில்லை. மே 13…

முகைதின்: நஜிப்பை எதிர்க்க எத்தனை பேர் வந்தாலும் வரட்டும், அத்தனை…

துணைப் பிரதமர் முகைதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். “பிரதமரைப் பொறுத்தவரை வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கவலை இல்லை. இது தேர்தல். போட்டியிடுவது அவர்களின் விருப்பம்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார். பார்டி கித்தா…

அன்வாரின் ‘பொருளாதாரத் திறமையின்மை’யைக் கேலி செய்தார் முகைதின்

பக்காத்தான் நிழல் பட்ஜெட், பற்றாக் குறையைக் குறைக்கும் என்று கூறுவது அக்கூட்டணிக்குப் “பொருளாதா Read More

முஹைடின்: பிஎன் எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் தயாராக உள்ளது ஆனால்

சிலாங்கூர் அரசாங்கத்தை பீடித்துள்ளதாக கூறப்படும் பல பிரச்னைகள், அந்த மாநிலம் பிஎன் எடுத்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளது என்பதற்கான அர்த்தம் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்தப் பிரச்னைகளில் தலாம் விவகாரமும் தண்ணீர், மணல் சர்ச்சைகளும் அடங்கும் என அவர் சொன்னார். அந்தப் பிரச்னைகள் பக்காத்தான்…

முஹைடின் இரண்டாவது தண்ணீர் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

சிலாங்கூர் தண்ணீர் விவகாரம் குறித்த அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்கு துணைப் பிரதமர் முஹைன் யாசின் இன்று தலைமை தாங்கினார். அந்தக் கூட்டம் எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சில் நடைபெற்றது. சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் நீர் விநியோகச் சேவை தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து…

சிலாங்கூர் நீர் விவகாரம்: பேச்சுக்கிடமில்லை: முகைதின்

சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார். “முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு…

மே 13ஐ முஹைடின் உண்மையிலேயே தவிர்க்க விரும்புகிறாரா? லிம் கிட்…

எம்பி பேசுகிறார்: அடுத்த பொதுத் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது அம்னோ/பாரிசான் நேசனல் ஆட்சியை நிலைத்திருக்க செய்வதற்கு அச்சத்தையும் இனத்தையும் பயன்படுத்தும் தரம் குறைந்த, பொறுப்பற்ற ஈவிரக்கமற்ற அவமதிப்பைத் தரக் கூடிய இரட்டை அரசியலில் ஈடுபடவில்லை என்பதையும் மே 13 மீண்டும் நிகழாமல் தடுக்க விரும்புவதாக கூறியுள்ளதையும் நிரூபித்து…

இந்தியர் பிரச்னைகளை முஹைடின் விவாதிக்க வேண்டும் என ஜோகூர் டிஏபி…

ஜோகூரில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்க முன் வருமாறு துணைப் பிரதமரும்  முன்னாள் ஜோகூர் மந்திரி புசாருமான முஹைடின் யாசினுக்கு ஜோகூர் எதிர்த்தரப்புத் தலைவர் பூ செங் ஹாப் சவால் விடுத்துள்ளார். அதே விவகாரம் மீது அம்னோவுடன் விவாதம் நடத்த விரும்புவதாக பிகேஆர் ஏற்கனவே அம்னோவுக்கு…

மெட்ரிக்குலேசன் இடங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன

துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டில் மஇகா தலைவர் ஜி.பழநிவேல் இந்திய மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல்…

சீன சுயேட்சை பள்ளிகள்: முகைதின் பல்டி

புதிய சீன சுயேட்சை பள்ளிகள் கட்டுவது குறித்த தற்போதைய  நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்படாது என்ற மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு முற்றிலும் எதிர்மாறான போக்கை துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மசீச ஆகியோருடன் விவாதித்ததாகவும் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு…

பிஎன் இன வேறுபாடு காட்டுகிறதா? இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் பாரிசான் நேசனல் இன வேறுபாடு காட்டுவதில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார். பிஎன் தலைமையிலான அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதி பெற்ற மற்றும் தேவைப்படும் அனைத்து இனத்திற்கும் வழங்கப்படுகின்றன என்றாரவர். மலாய்க்காரர்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற…

யார் “பொய்யர்”?: முகைதினுக்கு டோங் ஜோங் சவால்

மலேசிய துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசினால் பொய்யர் என்று முத்திரை குத்தப்பட்ட சீன கல்வி உரிமைகள் குழுவான டோங் ஜோங் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளன என்ற அதன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இன்று புள்ளிவிபரங்களை வெளியிட்டது. "கல்வி அமைச்சு ஒரே மொழி…

பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றும் என்கிறார் முஹைடின்

சிலாங்கூரில் "நீல அலை" கண்ணுக்குத் தெரிவதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். அந்த மாநிலம் மீண்டும் பிஎன் ஆட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை அது காட்டுவதாக அவர் சொன்னார். "சிலாங்கூர் முழுவதும் நீல அலை தென்படுகிறது. பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டுக்கு ஆட்சியுரிமையை வழங்கிய மூன்று…

வங்காள தேசிகளுக்கு குடியுரிமை எளிதாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப்…

இந்த நாட்டில் வாக்காளர்களாக மாறும் பொருட்டு வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு எளிதாக குடியுரிமை கொடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார்.   அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேசனல் அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர். "அவ்வாறு சொல்லப்படுவது…