ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மென்போக்கு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வு ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. மனித உரிமைகள் பேரவை அமர்வில் வழமை போன்று இம்முறையும் இலங்கை விவகாரமும் கவனத்தில் எடுக்கப்படவிருக்கின்றது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த முறை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எத்தகைய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது…

படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல நாடுகளில்…

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில்…

திட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் கொல்லப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்!

இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி…

இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்

கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில்…

நாடு பிளவுபட வேண்டுமென்பது எனது நோக்கமல்ல – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் எனினும் அதில் எவ்வித உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன்…

இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத தடைக்கற்களாக இராணுவம்: சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது. 1. பூநகரி பிரதேச வைத்தியசாலைக்குரிய…

வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கக் கோரும் விக்கினேஸ்வரனை கோமாளி என்கிறார்…

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வந்த, வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது…

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை!– பந்துல குணவர்தன

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்… இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடக்குமுறைக்கு…

வெளிநாடுகளிலிருந்து யாழ்.வருவோராலேயே பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று…

மீண்டும் திறக்கும் ஐ.நா. அரங்கும், இலங்கையின் தப்பிக்கும் தந்திரமும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில்…

நெறி பிறழ்ந்த நடத்தையினால் சீரழியும் மனித விழுமியங்கள்!

“உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக்…

திருச்சியில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது

திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளில் நேற்று முன்தினம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது குடும்பங்களுடன் இந்தியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரியே குறித்த அகதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா…

அம்பாறை பெண்களுக்கு இந்தியா உதவி

போரினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்தியஉயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை கே.சிங்ஹாவும் பெண் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரட்னவும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

அரசின் தீர்மானத்துடன் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். எதிர்வரும் 28ம் திகதி ஜெனிவா பயணமாகவுள்ள…

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

எதிர்வரும் வாரத்தில் தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா மற்றுமொரு பாரிய சவாலை கடந்தாக வேண்டுமென கொழும்பு ஊடகமொன்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை Sri lanka - Monitoring…

(ஈழத்) தமிழ் கலைகள் இன்றைய காலகட்டத்தில் வளர்க்கப்படுகிறதா? சிதைக்கப்படுகிறதா?

உலகத்திலுள்ள அனைத்து விடயங்களையுமே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது உள்ளங்கைகளில் கொண்டு வந்து விட்டது. இது அன்றாட வாழ்கையில் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது என்பதுடன், உலக மக்களின் கலை கலாச்சாரங்களையும் அனைவரும் அறிந்து கொள்வது இலகுவாகிவிட்டது. இதன் மூலமாக கலைகளுக்குள் வித்தியாசமான விதிமுறைகளை சோதித்துப் பார்த்து புதிய கலப்புகளை உருவாக்கி…

இனப்பிரச்சினைக்கான தீர்வை வருட இறுதிக்குள் எட்டுவதே இலக்கு!- சம்பந்தன்

பல்வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூறினாலும் நியாயமான நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய உயர்…

தற்செயலா அல்லது நாசகாரச் செயலா?- கொஸ்கம சம்பவம் அரசுக்கு பின்னடைவு!

கொஸ்கம பிரதேசத்திலுள்ள சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ அனர்த்தம் முழுநாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இச்சம்பவத்தினால் இராணுவம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்ட உயிர், உடைமை சேதங்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. உயிர்ச் சேதம் மிகவும் குறைவாக உள்ள போதிலும்,…

சர்வதேச விசாரணையை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் முழு முனைப்பு: ஹர்ஷ…

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் முனைப்போடு செயற்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பான முடிவுகளில் மாற்றமில்லை!- ஜனாதிபதி

கடந்த முதலாம் திகதியன்று வெளியான அச்சு ஊடகமொன்றில் மயிலிட்டியை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பு என்ற பிரதான தலைப்பின் கீழ் வெளியான செய்தியில், மயிலிட்டி பிரதேசத்தை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பை காட்டியதாகவும் ஜனாதிபதி அவர்கள் மாற்றுவழி ஒன்றை மயிலிட்டி பிரதேச மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக முன்…

வெடித்து சிதறிய ஆயுதக் கிடங்குகள்! பரபரப்பான கொழும்பு! காரணம் என்ன?…

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழச்சியாக இருக்கலாம் என வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தல் தொடர்பிலான விசேட வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு முறைப்படி செய்யப்பட்ட ஒன்றென கூறப்படுகின்றமை மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்த தகவல்…

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கடற்படையினர் வலுவடைகின்றனர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது நிலைகளை பலப்படுத்தும் பணிகளில்இலங்கையின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. வடக்கின் கிழக்குக்கரை மற்றும் கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியில் இலங்கையின் கடற்படை 'முகாமான எஸ்எல்என்எஸ் கோட்டாபய' ஏற்கனவே 300ஏக்கர் தனியார் காணியையும் 200 ஏக்கர் அரச காணியையும்…

தமிழகத்தில் இலங்கை அகதிகளின் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பான நடவடிக்கையாளர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை அகதிகள் சிலர், அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச்செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டநிலையிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் முகாம்கள் தொடர்பில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கையடக்க தொலைபேசிகளை…