பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘கீரி சுற்றுலா கடற்கரை’ வடமாகாண முதலமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து…
மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில்…
வீழ்ச்சியில் இருந்து மீண்டெழும் மகிந்த?
ஏற்ற சபதத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மகிந்த அணியினர். இம்முறை மே தினக் கூட்டத்தில் காலி முகத்திடலை மறைக்கும் அளவிற்கு கூட்டம் கூடும் என்றும் எமது பலத்தை நிரூபிப்போம் என்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் சபதம் எடுத்திருந்தார்கள். அந்தச் சபதத்தை மிக வெற்றி கரமாக நிரூபித்துக் காட்டியும் இருக்கிறார்கள். இது…
தமிழரின் விமோசனம் எங்களிடமே! அழைப்பு விடுக்கும் மஹிந்த ராஜபக்ச
தமிழ் மக்களுக்கு விமோசனம் எங்களிடமே உள்ளது. ஆகையினால் தமிழ் மக்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். காலி முகத்திடலில் இன்று இடம் பெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அங்கு…
வடக்கு புலிகளுக்கு சொந்தம் : மக்களை சுட்டு வீழ்த்தி அடக்க…
வெள்ளைக் கொடி விவகாரத்தை காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகாவினால் ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம் பெறும் மேதினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், நாடு இப்போது சின்னாப்பின்னமாகி விட்டது. வடக்கை விடுதலைப்புலிகளுக்கு…
மஹிந்தவின் பின்னால் அலையென திரண்ட மக்கள்! நல்லாட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும்…
உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் நேற்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடினர். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அப்பால் அரசியல் பலத்தை நிரூபிக்கும் வகையில், இலங்கையின் பல பாகங்களில் மேதின கூட்டங்களும் பேரணிகளும் நேற்று நடைபெற்றன. நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பிரதான…
“சிங்களவர்கள் பேரினவாதிகள்” தராக்கி சிவராம் எடுத்துரைத்தார்! விக்கினேஸ்வரன் சொன்னது இதுதான்
தமிழர்களுக்கான உரிமைகளை சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து பேச்சுவார்த்தையின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தவர் ஊடகப்போராளி மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனி ஒரு தராகியை கொல்வதன் மூலம் அவரின் கொள்கைகளை அழித்துவிடலாம் அல்லது அவ்வழியில் ஈடுபடுகின்ற ஏனைய…
தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை வென்றெடுக்க ஒன்றிணைவோம்: கஜேந்திரன்
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினப் பேரணியும் பொதுக்…
அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு நூல் வெளியீடு
வன்னியில் ஆதிகாலத் தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ் மணி அகளங்களன் தலைமையில் இன்று இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.…
கடல் பாதுகாப்பு: இலங்கைக்கு இரு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்களை வழங்கும்…
இலங்கை கடற்படைக்கு இந்தியாவின் இரண்டு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்றவற்றுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் பணிகளை மேலும்…
இலங்கையை வதைக்கும் கடும் வெப்பம்! உருகும் நிலையில் நுவரெலியா!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, தெற்காசியா முழுவதும் கடுமையான வெப்பநிலை உணரப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சமகாலத்தில் இலங்கை தீவிரமான வெப்ப நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளது. இதனால்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு நனவாகின்றது!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைசினால் கிளிநொச்சியில் கால்நடை பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,…
விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! உண்மை…
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.…
திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை முகாம்!
திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தியா அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா இந்த…
இலங்கையிலிருந்து புகலிடம் கோரி லண்டன் சென்ற யாழ். இளைஞனின் சாதனை!
இலங்கையிலிருந்து லண்டனுக்கு புகலிடக் கோரிக்கையாளராக சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழில்நுட்பத் தொழிலதிபராக சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும்,…
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு…
பிரபாகரனின் ஆசைகளை நிறைவேற்ற நாங்கள் தயார்: ஆனந்த சங்கரி
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கின்றதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்…
பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத அரசு! : இரகசியம் வெளிவருமா?
காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் கொடுத்த பின்னர் அவர்கள் மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியிருந்தார். மேலும், காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது சாத்தியமற்றது. 1976ஆம் ஆண்டு முதலாக இந்தப் பிரச்சினை…
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு நிறுவ கடும் அழுத்தம் கொடுங்கள்!
காணாமல்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பிரிட்டன் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு…
யாழில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக…
யாழில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் யாழில் அரச…
வடக்கு, கிழக்கு இன்று முற்றாக முடங்கும்!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இன்றைய ஹர்த்தால்…
10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு…
பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர். இவ்வளவு தொகை பாதுகாப்புப் படையினரின் தேவை எங்கிருந்து வந்தது என்று ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல்…
தெருக்களில் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் பதில் கூறாமல் இருப்பதை ஏற்க…
தெருக்களிலும், வெயிலிலும் இருக்கும் மக்களுக்கு பதில் கூறாமல் அரசாங்கம் இருப்பதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நூளை மறுதினம் (27) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிராக போராடிவரும் தாய்மார்கள் வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு…
லண்டன் மீதான மோகம்! முகவரை நம்பி உயிரை பறிகொடுத்த ஈழத்து…
சட்ட விரோதமான முறையில் லண்டன் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் முகவர் ஒருவரின் ஊடாக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.…
