பிரான்ஸ் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை

பிரான்ஸில் செவ்வாய்கிழமையன்று, தேவாலயத்தில் காலை பிராத்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மூத்த மதகுரு, இரண்டு ஜிகாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து வழிபாட்டு தலங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என அனைத்து மதகுருக்களும் கோரியுள்ளனர். பிரான்ஸின் மதக்குருக்கள் பிரான்ஸின் முஸ்லிம் தலைவர் தலில் பொபகீர், அவர்கள் பாதுகாப்பில் நீடித்த கவனம் தேவைப்படுவதாகத்…

ஆயுதங்களை கைவிடுமாறு போராளிகளுக்கு சிரியா ராணுவம் உத்தரவு

சிரியாவின் அலப்போ நகரின் கிழக்கு பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதிக்கான தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன என அறிவித்த சிரியா ராணுவம் அங்கு இருக்கும் போராளிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரியுள்ளது. தங்களது ஆயுதங்களை கையளிப்போர் பாதுகாப்பாக நகரை விட்டு வெளியேறலாம் அல்லது நகரிலேயே தங்கியிருக்கலாம் என்று…

ஜேர்மனியில் மீண்டும் துப்பாக்கி பிரயோகம்! ஒருவர் பலி

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக குறித்த இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் பிரான்ஸ் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்றும்…

தேவாலயத்தில் தீவிரவாத தாக்குதல்! ஒருவர் பலி- பிரான்சில் பதற்ற நிலை

வடக்கு பிரான்சின் Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணிக்கு நுழைந்த இருவர் அங்குள்ளவர்களை பிணையக் கைதிகளாக பிடித்தனர். ஐந்து பேரை பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களில் பாதிரியார் ஒருவர், கன்னியாஸ்திரிகள் இருவரும் அடங்குவர் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இவர்களிடமிருந்து தப்பி பிழைத்த கன்னியாஸ்திரி ஒருவர்…

ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்கி வெறியாட்டம்: 19 பேர்…

ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில்…

பங்களாதேஷில் தாக்குதல் நடத்திய 9 இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுகொலை!

பங்களாதேஷ்-டாக்கா பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 தீவிரவாதிகளை அந்நாட்டு பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கை குண்டுகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே பொலிஸார் கல்யன்பூர் ( Kallyanpur) தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல்…

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே… உல்லாசத்திற்கு அழைக்கும் சிறுமிகள்.. பரபரக்கும் விபச்சாரம்!

ரியோ டி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகளை வைத்து தற்போது விபச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சிறுமிகள் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதை பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே சிறுமிகள் பலர் விபச்சாரத்திற்காக காத்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களை…

ஜேர்மனியில் மீண்டும் ஒரு தாக்குதல்! பெண் ஒருவர் பலி

ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து…

ஆப்கான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அந்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களை இலக்கு…

அடுத்தடுத்த தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஐரோப்பிய நாடுகள்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் வைத்து ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பாதுகாப்பு சபையினை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த, எட்டு நாட்களுக்குள், அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளதால்,…

ஐ.எஸ் இயக்கத்தை அழிக்க பிரான்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஈராக் ராணுவத்திற்கு, பிரான்ஸ் ஆயுதம் வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டே அறிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்த ஈராக் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னரே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,…

ஜெர்மனி வணிகவளாகத்தில் துப்பாகி சூடு- 15 பேர் உயிரிழப்பு, தாக்குதலாளிகளை…

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் காவல்துறை அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில்…

மத்திய தரைக்கடலில் 21 பெண்களின் சடலங்கள் மீட்பு

ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். லிபியா அருகே சென்ற போது…

ஐ.நா. எச்சரிக்கை மனிதாபிமான பேரழிவை சந்தித்து வரும் அலெப்போ நகரம்

போருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சாலையை அரசு படையினர்…

மக்களை கொன்று குவியுங்கள்! உத்தரவிடும் தீவிரவாதி

ஜேர்மனியில் ஓடும் ரயிலில் திடீரென பயணிகளை தாக்கிய குற்றவாளி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் பவேரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையே ஓடும் மின்சார ரயிலில் ஒருவன் பயணிகளை திடீரென கோடாரி மற்றும் கத்தியால் தாக்கியதில் 21 பேர் படுகாயமடைந்தனர், இதில் இருவரின்…

11 வயது சிறுவனை தலை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

சிரியாவில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர். இதுதொடர்பான…

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மனைவி மெலனியுடன் ட்ரம்ப் கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ட்ரம்ப்பை தனது வேட்பாளராக அங்கீகரித்தது. மாநாட்டில் பேசிய ட்ரம்ப் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில் தான் மிகுந்த பெருமை கொள்வதாகக்…

ஜேர்மனி தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது!

ஜேர்மனியில் ரயில் பயணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. அந்நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் மன்சார ரயில் சேவை இடம்பெறுகின்றது. இந்நிலையில், ரயிலில் பயணித்த பயணிகளை இளைஞர் ஒருவர் கோடரி மற்றும் கத்திகளை கொண்டு…

வரம்பு மீறும் வடகொரியா!

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று இருநாடுகளும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாத்தியமான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறுதி…

ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல்: 20 பேருக்கு காயம்

ஜெர்மனியில் பேவரியா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ளூர் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் கோடாரியால் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஜெர்மன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பான…

நிர்வாண புகழ் மொடல் அழகி கெளரவ கொலை! சகோதரர் பரபரப்பு…

பாகிஸ்தானின் சர்ச்சை மொடல் அழகி குவாந்தீல் பலூச்சை கெளரவ கொலை செய்த அவரது சகோதரர் வசீமை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குவாந்தீல் பலூச் (26). இவர் பாகிஸ்தானின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மொடலிங் துறையிலும் ஜொலித்து வருபவர். மேலும், சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக…

சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தாய்லாந்து நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வரும் பாலியல் தொழிலை ஒழிக்க அந்நாட்டு அரசு தகுந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர். தாய்லாந்தில் பாலியல் தொழில்…

ராணுவ சதி எதிரொலி: மரண தண்டனை சட்டத்தை கொண்டு வர…

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி செய்ததை தொடர்ந்து இச்சதியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டிக்க மரண தண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் நேற்று மாலை முதல் முயற்சி மேற்கொண்டது. நள்ளிரவில் இம்முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. முதல்…