தூய்மைக்கேடு

ramana deviகுப்பைக் கொட்டி எரிக்கின்றாய்,

      காரைஓட்டி சிதைக்கின்றாய் – புவியில்

வெப்பம் நித்தம் கூட்டுகிறாய் – பின்

      வெம்மை என்று சலிக்கின்றாய்.

               

pollution-preventionமரத்தைவெட்டி சாய்க்கின்றாய்,

       மண்ணின்சுயத்தைஇழக்கின்றாய்,

மாரைத்தானேஅடைக்கின்றாய்,

      மரணத்தை விரைந்து அழைக்கின்றாய்.

 

புகையைக் கொண்டு புகைக்கின்றாய்,

      புவியில் சேதம் செய்கின்றாய்,

பகையைத் தனக்கே வளர்க்கின்றாய்

      தரணியின் பவித்திரம் குறைக்கின்றாய்.

 

எந்த உரிமையில் இதையெல்லாம் செய்கின்றாய்,

பிரம்மன் படைத்த இப்புவிதனிலே??!!

– ரமணாதேவி த/பெ ஆனந்தன்

மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்.

TAGS: