வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
இடி மின்னல்
துணையின்றி
இவ்வையகம்
வந்ததன் நோக்கம்
என்னவோ
பாவை இவளின்
பாதம் நனைக்கும்முன்
கன்னம் தொட
ஆசை உனக்கு
ஓசையின்றி உள்
நுழைந்து நெஞ்சத்தை
களவாடுவதில் உனக்கு
நிகர் நீ மட்டுமே
இதழ் தீண்டிய
காற்றில் அவிழ்ந்த
பூ மொட்டுகளை
மழை முத்தமிட்டாய்
அனுமதியின்றி
ஓடுகிறாய்
கூரையின் மேல்
பட்டுப் போன
மரங்களை உன்
சிறு துளிப்
பார்வையினால்
துளிர் விடச்
செய்ய வந்தாயோ
பெருங்கிணற்றின்
வயிர் நிரப்ப
வந்த சிறு
மழையா நீ
காய்கின்ற புவி
செழிக்கத்தான்
குளிர் தென்றல்
கரம் பிடித்தாய்
என்கிறேன் நான்
உன் நேற்றைய
வரவால் இன்று
பிறந்த இளந்தளிர்களை
ஆசிர்வதிக்கத்தான்
உன் வருகையோ
நிலத்திலிருந்து
உருமாறி வான் சென்று
மேகத்தின் கருவில்
உதித்தாலும் நீ
பூமியின் பிள்ளையே
வான் செல்லும்
முன் நீர் அஞ்சல்
அனுப்பு ,வழித்
துணைக்கு என்
மூச்சுக்காற்று வரும்
காற்றோடு கலந்து !!
– கார்த்திகா
“Sinnajiru Mazhaiye” is very nice.