ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும் ஆதரவு!

rajnathsingஇந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகள் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

இதனை செயல்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. போன்ற அரசு அமைப்புகளே உறுதுணையாக இருக்கின்றன.

தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறுவதில் உண்மை இல்லை.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலைக்குரியது.

உலகில் எத்தனையோ பயங்கரவாத அமைப்புகள் இயங்கலாம், ஆனால், அவை இந்தியாவில் கால் பதிக்க அரசு நிச்சயம் அனுமதிக்காது.

மேலும், இந்திய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் பொலிஸ், உளவுத் துறை அமைப்புகளின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். -http://www.newindianews.com

TAGS: