பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல: வி.கே.சிங்

பாகிஸ்தான் நமது அண்டை நாடு தானே தவிர, நமது நட்பு நாடல்ல என்று அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.இந்தியா அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்ள விரும்பினாலும் உரிய பாதுகாப்பை பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஃபருக்காபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் எந்த மாதிரியான உறவு தேவை என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. ஆனால், எதிர்காலத்தில் தெளிவான முடிவையே இந்தியா எடுக்கும். ஐஎஸ் அமைப்பினர் 39 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை பாதகமான தகவல் ஏதும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

TAGS: