நித்யானந்தா ஆண்மை உள்ளவர்: மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

nithyananthaநித்யானந்தாவால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும் என கர்நாடக சிஐடி பொலிசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

நித்யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார்.

ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்ததால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி பொலிஸார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 8ம் திகதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது நித்யானந்தா தனது சீடர்களுடன் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.

கர்நாடக சிஐடி பொலிஸ் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், நித்யானந்தாவுக்கு 37 வயதான ஆணுக்கு இருக்கக்கூடிய அனைத்து உடல் வளர்ச்சியும் இருக்கிறது என்றும், அவரால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதைப் பெற்ற நீதிபதி இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்துவிட்டது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதத்தை வரும் 27ம் திகதி தொடங்குங்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர் வரும் பிப்ரவரி 11ம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: