20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஆந்திர ஐகோர்ட்

andhra-police

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி, மக்கள் உரிமம் குழு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை காலை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. என்கவுன்டர் என்பது இருமாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்க ஆந்திர அரசு கோரியது. அதனை நீதிமன்றம் நிராகரித்தது.

-http://www.nakkheeran.in

TAGS: