“தமிழக மக்களுக்கு ஓயாது உழைப்பேன்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி தமிழக மக்கள் எனக்கு அளித்த பிறந்தநாள் பரிசாகும்.  ஆகவே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட நான் ஓயாது உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Seithisolai