பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.

137 நாட்களுக்கு பிறகு கடந்த 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.  நேற்று விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில்,  இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 108.21 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 98 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

 

Malaimalar