இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 1,054 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 347, டெல்லியில் 160, மகாராஷ்டிராவில் 132 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 271 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் நேற்று 83 பேர் இறந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 29 ஆக குறைந்துள்ளது. இதில் கேரளாவில் விடுபட்ட 21 மரணங்கள் அடங்கும்.

இதுதவிர மகாராஷ்டிராவில் 6, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,21,685 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,258 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரத்து 454 ஆக உயர்ந்தது.

தற்போது 11,132 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 233 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 14,38,792 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 185 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,18,345 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 79.38 கோடியாக உயர்ந்தது.

 

 

Malaimalar