பிரதமரின் ஜம்மு பயணம் எதிரொலி- லாலியன் கிராமத்தில் குண்டுவெடிப்பு ? போலீஸ் விசாரணை

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை கிராமவாசிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சம்பாவில் உள்ள பள்ளி கிராமத்தில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளில் உரையாற்றும் இடத்தில் பாதுகாப்பு சோதனைகளை நடந்து வருகின்றன.

சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Malaimalar