மீண்டும் நிலக்கரி பற்றாக்குறை; இருளில் மூழ்கும் அபாயம்

நிலக்­கரி கையி­ருப்பு குறைந்­துள்­ள­தால், மீண்­டும் பல மாநி­லங்­கள் மின்­வெட்டு கார­ண­மாக இரு­ளில் மூழ்­கும் அபா­யம் உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

எரி­சக்தி, தூய்­மை­யான காற்­றுக்­கான ஆராய்ச்சி மையம் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.

மின் உற்­பத்­திக்கு இந்­தியா பெரும்­பா­லும் நிலக்­க­ரி­யைத்­தான் சார்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் நிலக்­கரி பற்­றாக்­குறை கார­ண­மாக, நுகர்­வுக்கு ஏற்ற மின் உற்­பத்­தியை மேற்­கொள்ள வாய்ப்­பில்லை என்­றும் அதன் கார­ண­மாக, பல மாநி­லங்­கள் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­க­வும் அந்த ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய மின்­சார ஆணை­யம் வரும் ஆகஸ்ட் மாதம் நாட்­டின் அதி­க­பட்ச மின் தேவை 214 ஜிகா­வாட்­டாக இருக்­கும் எனக் கணித்­துள்­ள­து­டன், சரா­சரி மின் தேவை­யா­னது, கோடை­யின் உச்­ச­மாக கரு­தப்­படும் மே மாதத்­தை­விட அதி­க­மாக இருக்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

ஆனால், அச்­ச­ம­யம் நிலக்­கரி உற்­பத்தி பாதிக்­கப்­படும் என்­றும் சுரங்­கங்­களில் நிலக்­க­ரியை வெட்டி எடுத்து, மின் நிலை­யங்­க­ளுக்கு கொண்­டு செல்­லும் பணி­கள் தென்­மேற்குப் பரு­வ­ம­ழை­யால் தடை­ப­டக்­கூ­டும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

பரு­வ­ம­ழைக்கு முன்பே போது­மான நிலக்­கரி கையி­ருப்­பில் இருந்­தால் மட்­டுமே மின்­வெட்­டைச் சமா­ளிக்க இய­லும் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­ய­தாக எரி­சக்தி, தூய்­மை­யான காற்­றுக்­கான ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது. நாடு முழு­வ­தும் உள்ள சுரங்­கங்­களில் இருந்து 1,500 மெட்­ரிக் டன் நிலக்­க­ரியை உற்­பத்தி செய்ய முடி­யும்.

கடந்த 2021-22 நிதி­யாண்­டில் மொத்த நிலக்­கரி உற்­பத்தி 777.26 மெட்­ரிக் டன்­னாக இருந்­தது என்­றும் இது சுரங்­கங்­க­ளின் உற்­பத்தித் திற­னில் பாதி­தான் என்­றும் அந்த ஆராய்ச்சி மையத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர் சுனில் தஹியா கூறு­கி­றார். எனவே, நிலக்­கரி பற்­றாக்­குறை ஏற்­பட்­டால் நிலக்­கரி சுரங்­கங்­க­ளால் மட்­டுமே அதன் உற்­பத்­தியை அதி­க­ரிக்க முடி­யும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த மாதம் நிலக்­கரி பற்­றாக்­கு­றை­யால் மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. நாடு முழு­வ­தும் உள்ள 173 அனல் மின் நிலை­யங்­க­ளுக்குப் போது­மான நிலக்­க­ரியை உரிய நேரத்­தில் அனுப்ப இய­ல­வில்லை. இத­னால் ராஜஸ்­தான் உள்­ளிட்ட பல வட மாநி­லங்­களில் அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு அமல்­ப­டுத்­தப்­பட்­டது. அம்­மா­நி­லங்­கள் தொடர்ந்து பல நாள்­களுக்கு இரு­ளில் மூழ்­கின.

இந்­நி­லை­யில், மீண்­டும் அதே­போன்ற நிலைமை ஏற்­பட வாய்ப்­புள்­ள­தாக எரி­சக்தி, தூய்­மை­யான காற்­றுக்­கான ஆராய்ச்சி மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

அடுத்த ஒரு மாத காலத்­துக்­குள் மத்­திய அரசு தீவிர நட­வடிக்­கை­களை மேற்­கொண்­டால் மட்­டுமே நிலை­மை­யைச் சமா­ளிக்க இய­லும் என துறை­சார் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே நிலக்­க­ரியை இறக்­கு­மதி செய்ய மாநில அர­சு­களுக்குத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. மாநி­லங்­கள் தனித்­த­னி­யாக வெளி­நா­டு­களில் இருந்து இதற்­காக ஒப்­பந்­தப் புள்ளி கோரு­வது குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் என மத்­திய அரசு கரு­து­கிறது.

எனவே, மத்­திய அரசு நிறு­வ­ன­மான ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னமே வெளி­நா­டு­களில் இருந்து நிலக்­க­ரியை இறக்­கு­மதி செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

 

Tamilmurasu