இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிய பாதிப்பு 5,910 ஆக சரிவு

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,034 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரத்து 464 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

பாதிப்பு நேற்று முன்தினம் 7,219, நேற்று 6,809 ஆகவும் இருந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,034 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரத்து 464 ஆக உயர்ந்தது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 1,140 குறைந்துள்ளது. அதாவது தற்போது 53,974 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் மேலும் 16 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,007 ஆக உயர்ந்துள்ளது.

 

-mm