ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர்- கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும் போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது. அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று.

ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல்தான் திருக்குறள். ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர். ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு சிலர் திருக்குறளை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளுவரால் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை. திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும் போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. திருக்குறள் நூலை பல்வேறு நபர்கள் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர். பல மொழி பெயர்ப்பாளர்களால் மொழி பெயர்க்கப்பட்டதால் எளிதாக கற்று கொள்ள முடிகிறது. இருப்பினும் திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும்.

ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம். ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை. இந்த பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் தொடங்கியது. குறிப்பாக இந்த திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

-mm