ஆந்திராவில் லோன் ஆப்பில் கடன் வாங்கிய மேலும் ஒருவர் தற்கொலை

ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கும்பல் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர். நேற்று விஜயவாடா மாவட்டம் பிரசாதம் பாடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டா (வயது 33) என்பவர் லோன் ஆப் கும்பல் மிரட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 207 லோன் ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன அவற்றில் 173 ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது. லோன் ஆப்பில் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்ய வேண்டாம் தைரியமாக வந்து புகார் அளியுங்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்.

 

 

-mm