எல்லை பிரச்சினை குறித்து சீனா-இந்தியா ராணுவ அதிகாரிகள் தரப்பில் பேச்சு வார்த்தை

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சு சீனாவில் உள்ள சுசுல் மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது.

கடந்த ஜூலை மாதம் 17ந் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக் கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது என்று இந்த கூட்டத்தில் முடுவு செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

-mm