மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து – மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல்.

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. புதிய வகை கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும்,   புத்தாண்டு மற்றும் வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு கொரோனாவுக்கான புதிய ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட உள்ளது.

 

-ds