சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி மதிய உணவில் சிறுதானிய வகைகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.நா. சபை சார்பில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு கடந்த ஜன.1-ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன். இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. இப்போது 12 மாவட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்களுக்கு சோயா சிக்கிக்கு பதிலாக, சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட உணவு வகைகள் பரிமாறப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 

-th