இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 2 பேர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

-th