முன்னாள் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கையால் மிசோரமில் இருந்து வெளியேறும் மைதேயி சமூகத்தினர்

மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை “மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்” என எச்சரித்துள்ளது. மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

மணிப்பூரின் பக்கத்து மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின்படி அமைதி வாழ்விற்கு திரும்பியது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்களை கொண்டது மிசோரம் மாநிலத்தின் பாம்ரா சங்கம். இந்த அமைப்பு, மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை “மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்” என எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், 2 பெண்களை ஆடையின்றி அணிவகுத்து அழைத்து சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிசோரம் இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதனால் மிசோரத்திலுள்ள மைதேயி சமூகத்தினர் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். மணிப்பூரில் உள்ள குகி இன சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையால் மிசோ உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு. இவ்வாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த முறையீடு மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி மக்ககளுக்கு மட்டுமே என்றும், வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

 

-mm