பஞ்சாபில் மோசமான வெள்ளம் – வாரம் முழுதும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை

கிழக்கு பஞ்சாபில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து வெளியேற மக்கள் சிரமப்படுகின்றனர். வீடுகளும் வயல்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வாரம் முழுதும் பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் மோசமான பருவமழையாலும் பனியோடைகள் கரைந்ததாலும் பாகிஸ்தானின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏறியது.

அந்தப் பெருவெள்ளத்தில் சுமார் 1,700 பேர் மாண்டனர். வயல்களும் பல கட்டமைப்புகளும் முற்றாக அழிந்தன.

 

 

-sm