என் கற்பனை கலைந்ததே இனி எதை எழுத?……………(அரசு, ஈப்போ)

kavithai_09-09-2013picமாலை மயங்கும் வேளை
மனமது மயங்கி நின்றேன்

சோலையில் பூக்களின் கூட்டம்
வண்டிற்கோ அதன் மேல் நோட்டம்

விண் முகில் வானில் பல கோலம்
குருவிகள் கீச்சிலே பல ஜாலம்

சில்லென தென்றல் தழுவிச் செல்ல
மனமோ மயங்கி எங்கோச் செல்ல

மலர்களின் மணமோ மேளும் மெருகேற்ற
என் மனமோ துவங்கியது உன்னைச் சுற்ற

அந்த நாள் ஞாபகம் என்னை வாட்ட
நீ வருவாயோ ஒருநாள் என்னைத் தேற்ற

சட்டென கார்மேகம் கூடி இடி முழங்க
என் கற்பனை கலைந்ததே இனி எதை எழுத?

-(அரசு, ஈப்போ)

TAGS: