இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…
அரசாங்க வேலைகளும், இலவு காத்த கிளிகளாகும் இந்தியர்களும்
இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் எதிர்பார்ப்பைத் தாண்டி நம் சமூகம் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுச் சேவைத் துறையை பிரதமர் அன்வார் சீர்திருத்தம்…
கணினி யுகத்தை மிஞ்சியுள்ள மோப்ப நாய்களின் சேவைகள்
இராகவன் கருப்பையா - "மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை புரிந்து கொண்டான், இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஹோ.....", என 60 ஆண்டுகளுக்கு முன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஆயிரம் உண்மைகள் புதைந்துள்ளன! அகில உலகமே கணினி யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் தற்போதைய…
இனத்துவேசத்திற்கு எதிராக சட்டம்: சரியானத் தருணம் வந்துவிட்டதா?
இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவாதமும் ஒருங்கிணைந்து நாட்டின் ஆட்சியை கைபற்ற முனைந்த நிலையில், நட்டின் நல்ல காலம் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டணி ஒரு தகுதியான பிரமரின் கீழ் ஆட்சி அமைக்க முடிந்தது. நம் நாட்டில் இனத்துவேசம் தொடர்பான சம்பவங்கள், அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…
அம்னோவை ஆட்டி வைக்கும் ஸாஹிட்டின் அதிரடி முடிவுகள்
இராகவன் கருப்பையா - அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த ஒரு வார காலமாக கட்சியில் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பாதிக்குமா என பலவாறான ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் இருந்த அம்னோ தலைவர்களிலேயே பலம்…
அன்வாரின் கொள்கைகள் – ஓர் அலசல், அவை சரியா, தவறா?
கி.சீலதாஸ் - மதச் சார்பற்ற கொள்கை, கம்யூனிஸம் மற்றும் ஓர் இனப் பால் இணைதல், திருநங்கை, திருநம்பி போன்றவற்றை மலேசியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இபுராஹீம். கம்யூனிஸம் இனிமேல் தலைதூக்குவது கடினம் என்று சொல்வதைக் காட்டிலும் இந்நாட்டில் அது எடுபட வழியில்லை எனலாம். அப்படி…
மக்களாட்சியில், இனவாதமற்ற மலேசியர்கள் என்ற விழிப்புணர்வு எழ வேண்டும்
கி.சீலதாஸ் - நாம் ஜனநாயகத்தைப் புகழ்கிறோம். அந்தத் தத்துவத்தைப் பற்றி கூறப்படும் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். அவையே நம் அரசியல் வாழ்வுக்கு ஏற்றவை என வலியுறுத்துகிறோம், அவற்றைக் கைவிட மாட்டோம் எனச் சூளுரைக்கிறோம். ஜனநாயகக் கோட்பாடு பலவிதமான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. ஏதன்ஸ் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஜனநாயகம் என்ற…
சமூக பங்களிப்பும் கேளிக்கை செலவீனமும் – நாணயத்தின் மறுபக்கம்
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் மலேசியாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மீண்டும் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டில் அனிருத், சிட் ஸ்ரீராம், இளையராஜா, அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் சகோதரர் கங்கை அமரன் போன்றோர் இங்கு வந்து நிகழ்ச்சிகளைப் படைத்து பெருமளவில் வசூல் செய்து செல்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் வந்திருந்த வேளையில், கடந்த வார…
பள்ளிகளில் இனத்துவேசத்திற்கு இன்னமும் உரமிடப்படுகிறதா? ~இராகவன் கருப்பையா
தீவிரவாதம், பகடி வதை, குண்டர் கும்பல் மற்றும் பாலியல் தொல்லை, பொன்ற எதிர்மறையான நடவடிக்கைகளிலிருந்து பள்ளிகள் விடுபடுவதை தனது அமைச்சு உறுதி செய்யும் எனக் கல்வி அமைச்சர் ஃபட்லினா அண்மையில் அறிவித்திருந்தார். நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை போன்ற விவரங்கள்குறித்து பிரதமர் அன்வாரும் கூட அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்தி வருகிறார்.…
40 ஆண்டுகளைக் கடந்த பார்வை: தைபூசத்தை உளுக்கிய விபத்து! ~இராகவன்…
வழக்கமாகத் தைப்பூசம் என்றாலே இன்று வரையில் நமக்கெல்லாம் இனமறியாத ஒரு உற்சாகம் ஏற்படுவதை உள்ளூர உணர முடியும். சிலாங்கூர், பத்துமலை மட்டுமின்றி அநேகமாகப் பினேங் மாநிலத்திலும் ஈப்போவிலும் கூட இதே நிலைதான். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1983ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில்…
அரசு ஒளிபரப்பாளரின் கடமை என்ன?
சான் அஸ்லீ - அரசால் நடத்தப்படும் ஒரு பொது ஊடக அமைப்பு உண்மையில் யாருக்கு சேவை செய்கிறது? ஒப்பிடுகையில், ஒரு தனியார் ஒளிபரப்பாளர் அல்லது ஊடக அமைப்பு அவர்களின் உள்ளடக்கத்திற்கு வரும்போது யாருடைய ஆர்வத்திற்கு சேவை செய்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு இலட்சிய உலகில், ஊடகங்கள் மக்களுக்குச் சேவை செய்ய…
இந்தியர்களுக்காக போரட தனித்துவம் கொண்ட பிரதிநிதி இல்லை
இராகவன் கருப்பையா - இனவாத அடிப்படையில் நாடு தொடர்ந்து இயங்குவதால், தமிழ்ப்பபள்ளி, சமயம், கோயில் இப்படி தமிழர் சார்ந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவை குறித்த கொள்கை விவாதங்களுக்கு தகுந்த பிரதிநிதி உரிமையை நிலைநாட்டும் தன்மையுடன் போராட்ட உணர்வையும் கொண்டிருக்க வேண்டும். தாய்க் கட்சி என்று கூறிக்…
இந்தியர் பிரச்சினைகளை கவனிக்க நடவடிக்கை குழு எப்போது அமையும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலைவதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் செய்யப்பட்ட அறிவிப்பு நாமெல்லாம் நீண்டநாள் காத்திருந்த ஒரு நல்ல செய்தி. "இந்தியர் விவகாரங்களை நான் மட்டுமே தனியாக கவனிக்கப் போவதில்லை. மாறாக ஒட்டு மொத்த அமைச்சரவையும் இந்தியர்களின் நலனையும்…
மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சில கேள்விகள் – அருட்செல்வன்
இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவிற்குள் நுழைவதால் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்று மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் கூறுகிறார். ஆசியாவில் உள்ள 15 மூல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாத துறைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். எங்களால் போதுமான…
இனத்துவேசம், நம்மை நாமே இழிவுபடுத்த தூண்டுமா?
இராகவன் கருப்பையா - சமூகவியலின் அடிப்படையில் வறுமை பண்பாடு என்பது ஒருவகையான பண்பாடு.அதில் மனித இயல்பு அனுபவங்களின் குறீயீடாக வெளிப்படும். அதோடு அந்த தரப்பின் வாழ்வியல் இயல்புகளையும் வெளிப்படுத்தும். அவ்வகையில் வறுமையில் உழன்று அதன் வழி உருவாக்கப்படும் பண்பாட்டில், சில தரப்பினர் மனிதனுடைய தகுதி என்பதை அவரவர் பெற்ற…
சுகாதார அமைச்சர் ‘திடீர்’ வருகை வழி மருத்துவமனை சேவையை மேம்படுத்த…
இராகவன் கருப்பையா - கல்வியமைச்சு, நிதியமைச்சு மற்றும் உள்துறையமைச்சு ஆகியவற்றைப் போல சுகாதார அமைச்சும் ஒரு நாட்டுக்கு மிக முக்கியமான அமைச்சு என்பது எல்லாரும் அறிந்ந ஒன்று. அந்த அமைச்சு இம்முறை ஒரு முற்றிலும் புதியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமின்றி மலேசிய வரலாற்றில் முதல்…
டேவான் நெகாரா சீரமைப்பு செய்யப்பட வேண்டும் – கி.சீலதாஸ்
மலேசிய கூட்டரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றம் என்றால் பேரரசர், டேவான் நெகரா (செனட்) மற்றும் டேவான் ராக்யாட் (மக்களவை) ஆகியன உள்ளடக்கியதாகும். எனவே, மலேசிய நாடாளுமன்றத்தை ஈரவைக் கொண்டதாகும். அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் 44ஆம் பிரிவு தரும் விளக்கம். மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமே…
அன்வாருக்கு ஜொகூர் சுல்தான் அளித்த காலணி பரிசு
கி.சீலதாஸ் - அன்வார் பிரதமராவுடன் அலுவககத்திற்கு செருப்புடன் வந்தார். அதோடு அரசாங்கம் வழங்கிய S600 சொகுசு வாகனத்தையும் வேண்டாம் என்றார். ஆனால், அவர் ஏன் ஒரு விலையுந்த காலனியுடன் பவனி வந்தார்! இரண்டு அபூர்வமான சம்பவங்கள் மலேசியர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கக்கூடும். இது ஒருவருக்குக் கொடுக்கப்படும் பரிசு பற்றியதாகும். பரிசு கொடுப்பது…
பள்ளிக்கூடங்களில் இனத்துவேசம்: அமைச்சரின் கவனத்திற்கு வருமா?
இராகவன் கருப்பையா - பகடிவதை, பாலியல் தொல்லை, தீவிரவாதம் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்ற எதிர்மறையான அம்சங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் முற்றாக விடுபடுவதை உறுதி செய்வதற்கு தனது அமைச்சு பாடுபடும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் செய்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று. எந்த ஒரு மாணவரும் பள்ளிப்படிப்பை…
இந்தியர்களின் சமூக பொருளாதார சிக்கல்களை அரசு எப்படி கையாளும்?
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கு ரமேஷ் ராவ் எனும் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் மவுனம் கலைய வேண்டும். நமது சிக்கல்களை களைய வழிமுறைகள் என்ன ? இதன் தொடர்பாக பல நிலைகளிலும் உள்ள நம் சமூகத்தினர் கொந்தளிப்பு அடைந்துள்ள போதிலும்…
மூளைத் திறனுடையோர் நாடு பெயர்ச்சி, யாருடைய குற்றம்? – கி.சீலதாஸ்
இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, பெற்றோர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, சாதாரணக் கல்வியைப் பயின்ற பின்னர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது இயல்பு. சாதாரணமான தொழிலுக்கு அப்பாற்பட்ட மருத்துவம், சட்டம், கணக்கர், பொறியியல் துறை போன்றவற்றைத் திறத் தொழில் என்பார்கள். இத்தகைய உயர்கல்வியைப் பெற்றவர்கள், தாங்கள் கற்றதை இந்த நாட்டுக்கும்…
தமிழ் மொழி வளர்ச்சியில் கெடா எழுத்தாளர் இயக்கம் முன்னோடி
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் உட்பட சில இயக்கங்கள் மொழி வளர்ச்சிக்காக துடிப்பாக செயல்பட்டு வருகின்றன, அவற்றில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை. தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்தாற் போல் பல்வேறுத்…
ம.இ.கா.வின் பந்தா பேச்சினால் ஒரு பிரயோஜனமும் இல்லை
இராகவன் கருப்பையா- கடந்த மாதம் நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய அரசியல் வானில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இனவாதக் கட்சிகளான அம்னோ, மஇகா மற்றும் மாசீச ஆகிய மூன்றும் மோசமான தேர்தல் முடிவுகளால் பலி கடா ஆக்கப்பட்டனர். இதன் பின்னணியில்…
ஜஹிட் ஹமிடியின் ரமேஷ் ராவ் நியமனம் – ஒரு பலத்த…
இராகவன் கருப்பையா - பக்காத்தான் ஆட்சியமைத்தால் இந்நாட்டின் இந்திய சமூகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் எனும் எதிர்பார்ப்பில் கிட்டதட்ட ஒட்டு மொத்த சமூகமும் அந்தக் கூட்டணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தது. அக்கூட்டணியின் தலைமையில் தற்போது ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ள போதிலும் புதிய ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக்…
























