பேராசிரியரும், நடிகருமான பெரியார்தாசன் மரணம்

கல்லூரி பேராசிரியரும், பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவருமான பெரியார்தாசன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 63. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு…

தலைவா தயாரிப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி… -மருத்துவமனையில் சிகிச்சை

தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இம்மாதம் 9 ந் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய தலைவா பல்வேறு காரணங்களால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயக்கம் காட்டி…

தலைவா திரைப்படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியுள்ளனர்

'தலைவா’ திரைப்படத்தின் படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். தலைவா படத்தில் நடித்த விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ஆகஸ்ட் 16 அல்லது ஆகஸ்ட் 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில்…

தலைவா பட பிரச்னை: முதல்வர்தான் காப்பாற்ற வேண்டும்

"தலைவா' பட பிரச்னையில் முதல்வர்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் கண்ணீர் மல்க கூறினார். பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: தமிழ்…

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு!

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தலைவா படத்திற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளியாகததால், தமிழக ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் தலைவா பட சி.டி.க்களும் விற்பனை செய்யப்பட்டு…

17 மொழிகளில் வெளியிடப்படும் ‘ஐ’

கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமிஜாக்சன் நடித்து வரும் 'ஐ' படத்தைப் பற்றியதுதான். 'ஐ' படத்தின் ஷ_ட்டிங் 75சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்குமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’எந்திரன்’…

“தலைவா’ திரைப்பட பிரச்னை: முதல்வர் உதவ விஜய் கோரிக்கை

"தலைவா' திரைப்பட பிரச்னையில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவ வேண்டும் என முதல்வருக்கு நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டது. இதையடுத்து அந்தப் படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு…

தலைவா பிரச்சனையில் நான் அரசுக்கு எதிரானவன் அல்ல: நடிகர் தனுஷ்

விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகமல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திரையிடப்படவில்லை என்று கோவையைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு தொடர்ந்து தடை விதித்தால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய்…

விஸ்வரூபத்திற்கு வந்த அதே நிலை தலைவாவுக்கு – கருணாநிதி அறிக்கை

விஜய்யின் தலைவா படம் ரிலீஸாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  தலைவா படம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.…

தமிழக முதல்வரை சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்

கொடைநாட்டில் தங்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்  இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு…

செக்ஸ் தொல்லை காரணமாக திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதாதேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ்…

காதலை நான் எதிர்க்கவில்லை: கண்கலங்கிய படியே பேட்டி அளித்துள்ளார் சேரன்

காதலை நான் எதிர்க்கவில்லை, அதற்காக கெட்டவன் என்று தெரிந்தும் என் மகளை எப்படி கட்டிக் கொடுக்க முடியும் என கண்கலங்கிய படியே பேட்டி அளித்துள்ளார் சேரன். இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், இதுவரை…

என் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்: மனிஷா கொய்ராலா

சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம். ஆனால், இப்போதோ அவர் ஆளே உருமாறி இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்து…

ரஜினி ஈழத் தமிழர்களுக்கு என்ன செஞ்சாரு? -பத்திரிகையாளர் சந்திப்பில் விலாசல்!

சமீபத்தில் 'சுவடுகள்' என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. ஜெய்பாலா என்பவர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மோனிகா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு இன்னும் என்னென்ன வேலைகள் மிச்சமிருக்குமோ, அத்தனையும் இந்த ஒருவரே பார்க்க, படத்தின் மிச்ச சொச்ச வேலைகள்…

தமிழ்ச் சினிமாவின் மரண ஆண்டு: அடுத்தடுத்து மரணங்களால் அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ்ச் சினிமாவின் மரண ஆண்டாக 2013 ஐச் சொல்லலாம்.. தமிழ்ச் சினிமாவை தூக்கி நிறுத்திய ஒப்பற்ற உன்னதமான கலைஞர்கள் பலர் இவ்வாண்டு இயற்கை எய்தி உள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி…

4 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய நடிகை

மாதவனும் மலர்விழியும் என்ற படம் பரதநாட்டியத்தை கருவாக கொண்டு தயாராகி வருகிறது. மாதவனும், மலர்விழியும் பரதநாட்டிய கலைஞர்கள். காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். தனியா விடப்பட்ட மலர்விழி படும் கஷ்டங்களும். இருவரும் பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதும் படத்தோட கதை. படத்தின்…

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம்

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, கடந்த 18ம் ‌தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. நடக்க முடியாமல், மிகவும் ஆபத்தான நிலையில்…

வன்முறை குறைய வழி இளையராஜா சொல்கிறார்

இசையை கட்டாயப் பாடமாக்கினால் இளைஞர்கள் மனதில் வன்முறை உணர்வு குறையும், என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். மதுரை தியாகராஜர் கல்லூரியின் இசை ஆய்வு மையத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "தமிழ் இசை மிகவும் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்தது.…

அசினுக்கு எதிராக தொடரும் போராட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அசின். அந்த படத்தில் இந்தி ரீமேக்கிலும் நடித்தவர் அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்டார். பின்னர் காவலன் என்ற படத்தில் மட்டும் விஜய்யுடன் நடித்தவர் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். அப்படி இந்தி படங்களில் நடித்து வந்தநேரம் இலங்கையில்…

காதலிப்பது உண்மை: சிம்பு, ஹன்சிகா திடீர் முடிவு

நாங்கள் காதலிப்பது உண்மை தான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக் கொண்டுள்ளனர். கொலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கொலிவுட்டிலும் பரபரப்பாக…

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் , கவிஞர் வாலி காலமானார்

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி நேற்று   தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால்…

நான் காந்தியின் ரசிகன்! -கமல்

விஸ்வரூபம்-2 பட வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் கமல். அதனால்தான் எந்தவொரு விழாக்களிலும் அவர் தலைகாட்டுவதில்லை. படப்பிடிப்பு ஒரு பக்கம், போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் இன்னொரு பக்கம் என பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் கமல். இந்த நேரத்தில், தேசப்பற்றுள்ள கதைகளிலேயே நீங்கள் படமெடுப்பதேன்? என்று அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நான்…

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மும்பை ஹிந்திப் படவுலகின் நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் எங்களது விருந்தினர் பட்டியலில் உள்ளனர். இருவரையும்…