துப்பாக்கி தோட்டக்களில் பதில் வழங்கும் அரசுக்கு மக்கள் வாக்குகளால் பதிலளிக்க…

மக்களின் கோரிக்கைகளுக்கு துப்பாக்கி தோட்டக்களில் பதில் வழங்கும் சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான அவர், கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதனை கூறினார். மக்களின் கோரிக்கைகளுக்கு துப்பாக்கி…

வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்மக்களின் மூன்றாம் கட்ட போராட்டம்!- கூட்டமைப்பு…

இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தியது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை…

பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்க முயற்சிப்பவரே நவநீதம்பிள்ளை! பொதுபலசேனா தேரர் தெரிவிப்பு

உண்மைக்குப் புறம்பானவற்றை உலகுக்கு எடுத்துக்கூறி பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருபவரே ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை. எனவே அவரை ஒரு உண்மையான, நடுநிலையான இராஜதந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.…

கொமன்வெல்த் மாநாடு நடந்தால் சிங்கள தேசம் தமிழ் இனத்தையே இல்லாமல்…

கொமன்வெல்த் மாநாடு  இலங்கையில் நடந்தேறி விட்டால் கொக்கரிக்கும் சிங்கள தேசம் தமிழன் என்ற இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்தார். புலித்தடம் தேடி.. இரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்ற இலங்கை பயண நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர்…

கிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8…

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மசூதி மீது சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டது. கிரான்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, தொழுகை முடிந்த பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தின் போது,…

இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி…

இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஹல்துமுல்லை வே-எலிய வல்மீதலாவ உணுகல குகையில் மேற்கொள்ளப்பட்ட தொல் பொருள் ஆராச்சியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள்…

சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்காகவே நவநீதம்பிள்ளை இலங்கை செல்கிறார்!

அமெரிக்காவின் தேவைக்கமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான விடயங்களை தேடுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை ஆணைக்குழுவின் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்திருந்த யோசனையில் சர்வதேச…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண வேட்பாளர்களுக்கு முதன்மை வேட்பாளர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் கால அறிவுறுத்தல்களை  தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வி எங்கள் மூலதனம். பரீட்சை எழுதுகின்ற எமது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எங்கள் தேசத்தில் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் இது தேர்தல் காலம் எனினும், கல்விப்…

தமிழர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டமைப்பினால் மட்டுமே முடியும்

பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் தமிழர்கள் தம்மைத் தாமே உயர்தர்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பமாக வடக்குத் தேர்தல் அமைவதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளருமான ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். இதனை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின்…

மாகாண சபைத் தேர்தல் வெற்றி முழு நாட்டுக்கும் கிடைக்கும் அரசியல்…

சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தெளிவான அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூன்று மாகாணங்களில் மட்டும் பெறும்…

யாழில் வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேடபாளர்களுக்கு யாழில் பாதுகாப்பு இல்லை என தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் நாகபாம்புச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற மதிமுகராசா விஜயகாந் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…

கிழக்கு மாகாணத்தில் புதிய சிங்கள மாவட்டம்?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி…

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: இராணுவத்திடம் விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சட்டத்தரணி சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் திகதியான கடந்த மாதம் 29ம் திகதி மூன்று முறை மீசாலையிலுள்ள…

லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது

முன்னாள்  இலங்கை வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பின் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட அவர், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்தும்,…

வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் எம்மை பாதிக்காது!- பஷில்…

அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார். வடக்குத் தேர்தல் விடயத்தில் ஏதாவது அநீதிகள்,…

நாட்டை பிளவுபடுத்த முற்படுவோரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது! – ராஜபக்ச

நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டின் அபிவிருத்திக்கு நங்கூரம் போடப்பட்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். நாட்டின் வரைபடத்தை மாற்றியமைக்க இனியும் இடமளிக்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி நாட்டில்…

வடக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த…

வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசாங்கம் தயாரில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கட்டுகஸ்தோட்டையில் இடமபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,…

யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை குறைக்கவேண்டும்!- சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான படையினர் நிலைக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ஆங்கில நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் 13 ஆயிரம் படையினரே யாழ்ப்பாணத்தில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அங்கு ஒரு லட்சம் வரையில் படையினர் நிலைகொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் 15…

விடுதலைப்புலிகள் மீது புதிய போர்க்குற்ற அறிக்கை தயாரிக்கும் மஹிந்த அரசு!

தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பதாக கூறியும், மிரட்டியும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை மஹிந்த அரசு தயாரித்து வருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் கொழும்பு வரவுள்ள நிலையில் அவருக்கு விடுதலைப்புலிகளின் போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை புதிதாக வழங்கவும், பொது நலவாய தலைவர்களின் மா…

கோயில் கொள்ளையை எதிர்த்து த.தே.கூ போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை ஆகியவற்றை கண்டித்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. கடந்ந ஜூன் மாதம் முதல் வாரம் ஓரே இரவில் இந்த…

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர்…

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.…

நவநீதம்பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் சரத்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள மோசடியான அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். யுத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக…

தேர்தலின் பின்னர் மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்…

இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என இலங்கை பிரதமர் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சகைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இப்பணிகளை…