ஜோகூர் சுல்தானுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற ‘டான்ஸ்ரீ’-க்கு 5-நாள் தடுப்புக்…

ஒருவருக்கு    “டான்ஸ்ரீ”   பட்டம்  கிடைப்பதற்குப்   பரிந்துரைக்க   ஜோகூர் சுல்தானுக்கு    ரிம 2மில்லியன்   கையூட்டுக்  கொடுக்க முயன்றதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டு    ஒரு  வணிகர்  இன்று   புத்ரா  ஜெயா   மெஜிஸ்ட்ரேட்   நீதிமன்றத்தில்     நிறுத்தப்பட்டதாக   த  ஸ்டார்   ஆன்லைன்   அறிவித்தது. மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)   விசாரணைக்கு   உதவியாக   அந்த      54 வயது  நபரை  …

ரிம1.4 மி. சாலையைப் பார்வையிட மக்களவைத் தலைவர் வீட்டுக்குச் சென்ற…

டிஏபி  எம்பிகள்  இருவர்,   ரிம1.4 மில்லியன்    செலவில்  கட்டப்பட்ட   சாலையைப்  பார்வையிட  இன்று  கோலாலும்பூர்,  ஜாலான்  துங்குவில்   உள்ள    மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்  வீட்டுக்குச்  சென்றனர். அங்கு  சென்றதும்   டிஏபி   செர்டாங்   எம்பி   ஒங்   கியான்  முங்,   செகாம்புட்  எம்பி    லிம்  லிப்   எங்   ஆகிய   அவ்விருவரும்   …

பண்டிகார்: என் வீட்டுக்குச் செல்லும் ரிம1.4 மில்லியன் சாலைக்கும் எனக்கும்…

மக்களவைத்   தலைவர்    பண்டிகார்   அமின்   மூலியா,    தம்   அதிகாரப்பூர்வ   இல்லத்துக்குச்     செல்ல  ரிம1.4 மில்லியன்  செலவில்  மாற்றுச்  சாலை  அமைப்பதற்கும்   தமக்கும்   சம்பந்தமில்லை   என்கிறார். சாலை  அமைப்பது      அரசாங்கத்தின்   தனியுரிமை    என்றவர்   சொன்னதாக   த   ஸ்டார்   அறிவித்துள்ளது. “இது   என்  வீடு   அல்ல.  அரசாங்க  வீடு”,  என்றாரவர். “அவ்வீட்டுக்குச் …

1எம்டிபி எஞ்சியுள்ள ரிம40 பில்லியன் கடனை எப்படி திருப்பிக் கொடுக்கும்?,…

  கிட்டத்தட்ட இன்னும் ரிம40 பில்லியனுக்கு இருக்கும் அதன் கடனை 1எம்டிபி எப்படித் திரும்பக் கொடுக்கப் போகிறது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்  கோரியுள்ளார். கிட்டத்தட்ட ரிம3.9 பில்லியன் வங்கிக் கடன்கள் மற்றும் குறைந்த-கால கடன்கள் ஆகியவற்றை திருப்பிக்…

சட்டம் 355 மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?, கேட்கிறார் அந்தோனி…

  சட்டம் 355க்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற அவைத் தலைவரை கேடயமாக பயன்படுத்தக் கூடாது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கூறுகிறார். தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழியும் ஒரு மசோதா அரசாங்கம் வழிவிட்டால் மட்டுமே விவாதிக்க அனுமதிக்கப்படும் ஏனென்றால்…

‘பாலமுருகன் மரணத்துக்குக் காரணமான போலீசாரைத் தற்காலிக பணிநீக்கம் செய்வீர்

மலேசிய   மனித  உரிமை   ஆணையம்(சுஹாகாம்)    எஸ்.பாலமுருகன்   மரணத்துக்குக்   கண்டனம்   தெரிவித்து    அறிக்கை  வெளியிட்டிருப்பதை    அடுத்து   அவரது  மரணத்துக்குக்  காரணமான   போலீஸ்   அதிகாரிகள்  இடைநீக்கம்   செய்யப்பட  வேண்டும்  என்கிறார்   டிஏபி   எம்பி   ஒருவர். “சுஹாகாம்   அறிக்கையை   உதாசீனப்படுத்த  முடியாது.  நடவடிக்கை   எடுக்கப்பட   வேண்டும்.  தவறினால்   போலீசையும்  பற்றியும்   அரசாங்கத்தைப் …

மாபுஸ்: சட்டம் 355 விவகாரத்தில் பாஸ், அரசாங்கம் இரண்டுமே அவசரப்பட்டு…

  ஷரியா நீதிமன்ற (குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தை     அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவைத்   தாக்கல்    செய்யும்  விவகாரத்தில்    பாஸ்    கட்சியும்   அரசாங்கமும்  அவசரப்பட்டு    விட்டன. அச்சட்ட  வரைவு   தனிநபர்   சட்டவரைவாகத்தான்   இருக்கும்    என்றும்    அரசாங்கம்   அதை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யாது     என்றும்   பிஎன்   உச்சமன்றம்    செய்துள்ள …

ஊழல் விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே சட்டம்355மீது இத்தனை கூத்தடிப்புகள்

அரசாங்கத்துக்கு   ஷியாரியா   சட்டத்தில்   திருத்தம்  செய்யும்   எண்ணம்    என்றும்  இருந்தது   இல்லை   என்பதால்   பாஸ்   தலைவர்   அப்துல்   ஹாடி  ஆவாங்    கொண்டுவந்த   தனிநபர்   சட்டவரைவைத்   தாக்கல்     செய்யும்  பொறுப்பை   அது   எடுத்துக்கொள்ளாது    என்று  முன்பே   தாம்   ஆருடம்   கூறியிருந்ததாக   அமனா   எம்பி   முஜாஹிட்   யூசுப்   ராவா  குறிப்பிட்டார். “எனக்கு …

பிரதமர்: 1எம்டிபி அத்தனை வங்கிக் கடன்களையும் கொடுத்து முடித்து விட்டது

2016   முடிய  ரிம50 பில்லியன்   கடன்  பட்டிருந்த   1எம்டிபி    அதன்   வங்கிக்  கடன்கள்,   குறுகிய-காலக்   கடன்கள்   அனைத்தையும்   கொடுத்து   முடித்து  விட்டதாக    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    கூறியுள்ளார். “இப்போது   1எம்டிபி-க்கு    வங்கிக்    கடனுமில்லை,  குறுகிய-காலக்  கடன்களும்  இல்லை”,  என  நிதி  அமைச்சர்    என்ற  முறையில்    நேற்று   நாடாளுமன்றத்தில்    …

சட்டம் 355 திருத்தத்தைக் கைவிடும் அரசாங்க முடிவுக்கு ஆயர் பாராட்டு

கத்தோலிக்க    ஆயர்  டாக்டர்  பால்   டான்    ச்சீ  இங்,  ஷியாரியா   நீதிமன்றத்துக்குக்  கூடுதல்    அதிகாரம்   வழங்கும்   தனிநபர்     சட்டவரைவைத்   தாக்கல்    செய்யும்  பொறுப்பை    எடுத்துக்கொள்வதில்லை    என்று   அரசாங்கம்   செய்துள்ள  முடிவைப்   பாராட்டினார். கடந்த  மே  மாதம்  பாஸ்  தலைவர்   அப்துல்   ஹாடி   ஆவாங்    முதன்முதலாக    தாக்கல்     செய்த    தனிநபர்  …

வான் அசிஸா குணமடைந்து வருகிறார், முகைதின் யாசின் தகவல்

  யூனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் அவரது துணைவியார் நூராயினி அப்துல் ரஹ்மானுடன் சென்று நலன் விசாரித்தார். அவர் குணமடைந்து வருவதாகவும் தங்களை அவர் வரவேற்றதாகவும் முகைதின் அவருடைய முகநூலில் தகவல் பதிவு…

இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை குறைகிறது

  ஒவ்வொரு புதன்கிழமையும் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இன்றைய முதல் அறிவிப்பு எண்ணெய் விலை குறைக்கப்படுவதாக கூறுகிறது. இந்த அறிவிப்பின்படி, ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை ஒரு லீட்டருக்கு முறையே 17 சென், 19 சென் மற்றும் 9…

கிளந்தானில் பிகேஆருக்கு இரவல் கொடுத்த இடங்களை பாஸ் திரும்ப எடுத்துக்…

பாஸ்,   கடந்த  பொதுத்   தேர்தலில்   பிகேஆருக்கு  “இரவல்   கொடுத்த”   நாடாளுமன்ற,  சட்டமன்றத்   தொகுதிகளைத்   திரும்ப   எடுத்துக்கொள்ளக்கூடும்   எனக்  குறிப்புக்   காட்டியுள்ளது . இரு  கட்சிகளுக்குமிடையில்   அண்மையில்   உறவுகள்    நலிவடைந்திருப்பதுதான்   இதற்குக்  காரணம்    என்று   கூறிய   கிளந்தான்  பாஸ்  செயலாளர்   சே   அப்துல்லா   மாட்    நாவி,   எல்லாவற்றுக்கும்  சேர்த்து   அடுத்த …

பிரதமர் ஐந்து நாள் இந்தியா பயணம்

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  வெள்ளிக்கிழமை   தொடங்கி   செவ்வாய்க்கிழமை    வரை   இந்தியாவுக்கு   5-நாள்   அதிகாரத்துவ   வருகை   மேற்கொள்வது   60  ஆண்டுகளாக   இரண்டு   நாடுகளுக்குமிடையில்   இருந்து   வரும்  வலுவான   இரு   தரப்பு   உறவுகளுக்கு   நல்ல   சான்று. இது   2009-இல்   பிரதமரான  நஜிப்பின்  மூன்றாவது   இந்தியப்   பயணமாகும்.  இந்திய  பிரதமர்   நரேந்திர  …

பக்கத்தான் ஹராபான் ஆலோசகர்களாக டாக்டர் வான் அசிசா மற்றும் மகாதிர்

பக்கத்தான்  ஹராபான்,    நாடாளுமன்ற   எதிரணித்   தலைவர்   டாக்டர்   வான்   அசிசா   வான்  இஸ்மாயிலையும்   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டையும்   அதன்  பூர்வாங்கக்  குழு    ஆலோசகர்களாக   நியமிக்க   ஒப்புக்கொண்டுள்ளது. திங்கள்கிழமை   பக்கத்தான்  ஹராபான்   தலைவர்   மன்றக்  கூட்டம்  நடைபெற்றது.  கூட்டணியின்  புதிய    உறுப்பினரான  பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)வும்  …

சரவாக்கில் ஹூடுட் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது, முதலமைச்சர் உறுதி

புதிய முதமைச்சர் அபாங் ஜொஹாரி ஒபெங் தலைமைத்துவத்தின் கீழ் சரவாக் மாநில அரசாங்கம் ஹூடுட் சட்டத்தை எதிர்ப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். சரவாக் ஹூடுட் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும், அந்த விவகாரத்தில் சரவாக் முன்னாள் முதலமைச்சர் அடினான் சாதெம்மின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அபாங் ஜொஹாரி கூறினார்.…

உணவூட்டும் கரத்தைக் கடித்து விடாதீர்கள்: அரசுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்து

அரசுப்  பணியாளர்கள்   அரசாங்கம்    குறித்துப்   பரப்பப்படும்   பொய்களை   நம்பக்   கூடாது,    உணவூட்டும்  கரத்தைக்  கடித்து  விடக்  கூடாது    என்று   அரசாங்கத்   தலைமைச்   செயலாளர்    அலி   ஹம்சா    வலியுறுத்தியுள்ளார். உலகப்   பொருளாதாரச்  சூழல்   நிச்சயமற்றுள்ள   வேளையில்     பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கின்  அரசாங்கம்    பல   வசதிகளை    அவர்களுக்குச்   செய்து   கொடுத்துள்ளது   …

முகைதின்: ஹராபான் தலைவர் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்

பக்கத்தான்   ஹராபான்   அதன்   தலைமைத்துவ   விவகாரத்துக்கு   விரைவில்   தீர்வு   காண்பது    அவசியம்   என்பதை   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)   தலைவர்   முகைதின்   யாசின்   வலியுறுத்தினார். அதன்   பிரதமர்   வேட்பாளர்,    துணைப்   பிரதமர்  வேட்பாளர்   தொடர்பான   கேள்விகளுக்குக்   கூட்டணியிடம்   ஒரு  தெளிவான   நிலைப்பாடு   இல்லாதது  குறித்து  கேட்கப்பட்டதற்கு   அவர்   இவ்வாறு …

அன்வார் மருத்துவமனை சென்று வான் அசிசாவைக் கண்டார்

சிறைத்  தண்டனை   அனுபவித்து   வரும்   முன்னாள்  எதிரணித்  தலைவர்    அன்வார்  இப்ராகிம்     மருத்துவமனையில்  உள்ள      அவரின்  துணைவியார்   டாக்டர்   வான்   அசிசாவைச்  சென்று  காண்பதற்கு  நேற்றிரவு   அனுமதிக்கப்பட்டார். அன்வார்    குடும்பத்தார்    அவர்   மருத்துவமனை   சென்றுவர    அனுமதி  கேட்டு    செய்து  கொண்டிருந்த   விண்ணப்பத்தை   ஏற்று   சுங்கை பூலோ   அதிகாரிகள்   அவருக்கு  …

பினாங்கு தன்னார்வ காவல் படை மீதான தடை செல்லாது: முறையீட்டு…

உள்துறை   அமைச்சு,  பினாங்கு   அரசின் ரேலா  படையான   பினாங்கு   தன்னார்வ   காவல்  படை(பிபிஎஸ்)க்கு  விதித்திருந்த   தடையை  முறையீட்டு   நீதிமன்றம்   இன்று   தள்ளுபடி  செய்தது. உள்துறை   அமைச்சின்    தடைவிதிப்பை     நிலைநாட்டி    பினாங்கு   உயர்   நீதிமன்றம்   கடந்த   ஆண்டு  நவம்பர்   22-இல்  அளித்த   தீர்ப்பை   மூவரடங்கிய   நீதிபதிகள்   குழு   ஏகமனதாக   நிராகரித்தது.…

ஜொங்-நாம் சடலம் இன்னும் கோலாலும்பூரில்தான் உள்ளது

கடந்த     மாதம்   மலேசியாவில்  கொல்லப்பட்ட   கிம்  ஜொங்-நாமின்  உடல்  விரைவில்    நாட்டைவிட்டு    கொண்டு    செல்லப்படும்    என்று   செய்திகள்   வந்துள்ள   வேளையில்     அது   இன்னமும்   கோலாலும்பூரில்தான்  உள்ளது   எனச்   சுகாதார   அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்   இன்று    தெரிவித்தார். “அதில்   எந்த   மாற்றமும்  இல்லை”,  என்று  சுப்ரமணியம்   செய்தியாளர்களிடம்   கூறினார். அவரது …

முதுகலை மாணவர் சித்தி நூர் ஆயிஷா மீண்டும் கைது

முன்னாள்  முதுகலைப்  பட்டப்படிப்பு  மாணவர்   சித்தி   நூர்   ஆயிஷா  பாதுகாப்புச்   சட்டத்தின் (சொஸ்மா)கீழ்   மீண்டும்  கைது   செய்யப்பட்டு   அவருடலில்  மின்னியல்   கண்காணிப்புக்  கருவி   ஒன்றும்  பொருத்தப்பட்டுள்ளது. இத்தனையும்  நேற்று   அவர்   உயர்  நீதிமன்றம்   சென்றபோது   நிகழ்ந்தது. கடந்த   ஆண்டு    செப்டம்பர்   மாதம்   12  நூல்களை   வைத்திருந்த   குற்றச்சாட்டிலிருந்து  அவரை  …

எம்ஆர்டி முதலீட்டைப் பயணக் கட்டணத்தின்வழி திரும்பப் பெற எண்ணவில்லை

அரசாங்கம்   எம்ஆர்டி   பயணக்  கட்டணங்கள்    மூலமாக    அதில்   செய்துள்ள   முதலீட்டைத்  திரும்பப்  பெற   உத்தேசிக்கவில்லை. நாடாளுமன்றத்தில்   பிகேஆர்-  லெம்பா  பந்தாய்   உறுப்பினர்   நூருல்  இஸ்ஸா   அன்வாரின்      கேள்விக்குப்  பதிலளித்தபோது   பிரதமர்துறை   அமைச்சர்   நன்சி   சுக்ரி   இவ்வாறு   பதிலளித்தார். “அகண்ட   கோலாலும்பூரில்   பொதுப்   போக்குவரத்தை    மேம்படுத்தும்  நீண்டகாலத்    திட்டத்தின்   ஒரு  …