நன்கொடை முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களைத் தடுக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நிதியைச் செலவிடும் முறையில் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். மனிதநேய அமைப்புகள், நலச் சங்கங்கள், மரண உதவி நிதிகள், அறக்கட்டளைகள் அல்லது…
அம்னோவிலிருந்து விலகிய எம்பியை வரவேற்கிறார் வான் அசிஸா
இன்று அம்னோவிலிருந்து வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவித்த பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலிக்கு துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் வரவேற்பு தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவிப்பது அவரது தேர்வு என்று கூறிய வான் அசிஸா, நாட்டிற்கு…
பிஎன்னிலிருந்து வெளியேறிய கெராக்கான் செனட்டர் பதவிகளையும் துறக்க வேண்டும்
பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறிய கெராக்கான் பிஎன்னில் இருந்தபோது கிடைத்த செனட்டர் பதவிகளையும் கைவிட வேண்டும் என பக்கத்தான் ஹரப்பான் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். “பிஎன்னிலிருந்து வெளியேறிய கெராக்கான், அடுத்து செய்ய வேண்டிய மேலான காரியம் அதன் இரு செனட்டர்களையும், கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்) ஆலோசனை வாரியத்திலும் மற்றும் கூட்டரசு, …
ரிம300 மில்லியன் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் அஸ்மின்
பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் ரிம300 மில்லியனை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுவதை அபத்தம் என்று கூறி உதறித் தள்ளினார். இன்று ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார், அக்குற்றச்சாட்டைச் சாக்கடை அரசியல் என்று வருணித்தார். அவ்வளவு …
போலீஸ் வலையில் சிக்காமல் தண்ணி காட்டும் ஜமால்
போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய ஜமால் முகம்மட் யூனுஸ் இன்னும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அம்னோ தேர்தலுக்கு வருவார் என்று கட்சித் தேர்தல் நடைபெறும் அம்னோ தலைமையகத்தில் காத்திருந்ததாகவும் அங்கும் அவர் வரவில்லை என்றும் சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹ்மட் கூறினார். ஜமால் …
அம்னோ பிரிவுகளின் தேர்தல் முடிவுகள் மாலை மணி 5க்கு அறிவிக்கப்படும்
அம்னோவின் மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளுக்காக நடந்த தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை மணி 5க்கு அறிவிக்கப்படும் எனக் கட்சி நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசுப் கூறினார். “இணையத் தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல”, என்றவர் நேற்றிரவு கூறினார். நேற்று மாலையிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற …
பாகன் செராய் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறி மகாதிருக்கு ஆதரவு அளிக்கிறார்
பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்து வெளியேறி விட்டார். இப்போது அவர் டாக்டர் மகாதிரையும் பக்கத்தான் ஹரப்பானின் பெடரல் மற்றும் மாநில அரசுகளை ஆதரிப்பதாக கூறுகிறார். தற்போதைக்கு தாம் ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், ஆனால் பெர்சத்துவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகவும்…
தமிழர்களின் அறமா..? ஆகம அணியின் ஆணவமா..?
உலக புகழ் பெற்ற பத்துமலை தமிழர் திருக்கோவிலை களங்கப்படுத்தும் வகையில் திட்டமிட்ட ஆகம அணி பேரணியையும் தமது உலக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை இழிவாக முகநூலில் எழுதிய அருண் துறைசாமியையும் எதிர்த்து நாளை 24/6/2018 காலை 7.00 மணியளவில் தமிழர் சமயம் நடவடிக்கை குழு ஏற்பாட்டில்…
ஸாகிட்: ‘பிஎன் போன்ற’ புதிய கூட்டணி அமைக்க வேண்டும்
பிஎன் போன்ற ஒரு புதிய பல்லின கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பிஎன் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். 14 ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து முன்னாள் ஆளுங்கூட்டணி சிதறிப் போய் விட்டதால் இவ்வாறு கூறப்படுகிறது. பல அரசியல் கட்சிகள் அடங்கிய ஒரு…
கெராக்கான் பிஎன்னிலிருந்து வெளியேறுகிறது
கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிஎன் கூட்டணி உறுப்புக் கட்சியான கெரக்கான் கட்சியும் அக்கூட்டணியிலிருந்து இப்போது வெளியேறுகிறது. இவ்விவகாரத்தை விவாதிக்க இன்று மதியத்தில் கூட்டப்பட்ட அக்கட்சியின் சிறப்புக் கூட்டத்தில் பிஎன்னை விட்டு வெளியேறுவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. கெராக்கான் கட்சி பிஎன்னின் ஒரு…
டிஏபியின் இங்காவுக்கு அமைச்சரவையில் இடமில்லையாம்
பக்கத்தான் ஹரப்பான் அமைச்சரவைப் பட்டியலில் பேராக் டிஏபி தலைவர் இங்கா கொர் மிங் இடம்பெற மாட்டாராம் டிஏபி வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல் இது. டிஏபி அனைத்துலக செயலாளர் தியோ நை சிங்-கைப்போலவே இங்காவுக்கும் அமைச்சர் பதவி கிடைக்காதாம். “முதலில் தியோவுக்குத் துணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கேள்விப்பட்டோம், …
இசிஆர்எல் வைத்துக்கொள்ளப்படும், விலையைக் குறைக்கத் திட்டம்
சர்ச்சையாகியுள்ள கிழக்குக்கரை இரயில் திட்டத்துக்கு ஆகும் செலவைக் குறைப்பதற்குச் சீனாவுடன் மறுபேரம் பேசி மறு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியுமா என்று அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். அத்திட்டத்துக்கு மலேசியா இதுவரை ரிம20 பில்லியன் செலவிட்டிருப்பதால் அதைக் கைவிடுவதற்கில்லை என மலேசியன் …
அபு தாலிப்: 1எம்டிபி விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவுற்று விட்டன
1எம்டிபி மீது மேகொள்ளப்பட்ட பல்முனை விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவுற்று விட்டன என்று 1எம்டிபி விசாரணைக் குழுவின் தலைவர் அபு தாலிப் ஓத்மான் கூறினார். மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் முகம்ட் ஷூகிரி மற்றும் அதன் முன்னாள் தலைவர் அபு காசிம் ஆகியோரைச் சந்தித்த பின்னர்…
பிரதமர் மேலும் 15 அமைச்சர்களின் பெயரை அகோங்கிடம் தாக்கல் செய்துள்ளார்
பிரதமர் மகாதிர் இன்னும் 15 அமைச்சர்களை நியமிப்பதற்கு அவர்களின் பெயர்களை பேரரசர் சுல்தான் முகம்மட் v-திடம் தாக்கல் செய்துள்ளார். பெயர் பட்டியல் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரம் கூறுகிறது. மொத்தம் 28 அமைச்சர்கள் இருப்பார்கள், சாபா மற்றும் சரவாக் ஆகிய ஒவ்வொன்றிலிருந்து இரு அமைச்சர்கள் இருப்பார்கள்.…
அமைச்சர்: உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
எதிர்வரும் ஜூலை 1 லிருந்து நாட்டிலுள்ள உணவகங்கள் உள்ளூர் சமைகள்காரர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று மலேசிய மனிதவள அமைச்சு கூறுகிறது. இருப்பினும், உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு உணவகங்களுக்கு இவ்வாண்டு இறுதி வரையில் அவகாசம் அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர்…
பிரதமர் அலுவலகம் முன் ஒன்றுகூடினர் : போலிஸ் பி.எஸ்.எம்.-ஐ விசாரணைக்கு…
கடந்த ஜூன் 11-ம் தேதி, பிரதமர் அலுவலகத்திற்கு முன்புறம் ஒன்றுகூடியதற்காக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வனின் வாக்குமூலத்தைப் போலிஸார் நேற்று பதிவு செய்தனர். போலிசாரைச் சந்தித்த பின்னர் தொடர்புகொண்ட போது, அமைதி ஒன்றுகூடல் சட்டம் 2012-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக, மலேசியாகினியிடம் அருட்செல்வன்…
நஜிப் : தி.ஆர்.எக்ஸ். திட்டத் தகவலில் குவான் எங் பொய்…
'துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்தில், நிதியமைச்சர் லிம் குவான் எங் பொய் தகவல்களைப் பரப்புவதாக நஜிப் ரஷாக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்திட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், புத்ராஜெயா RM2.8 பில்லியனைச் செலவழிக்க வேண்டும் என்று லிம் கூறியதன் தொடர்பில், முன்னாள் பிரதமரின் அறிக்கை வெளியிடப்பட்டது. "ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை…
RM3 பில்லியன் நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ்.சி. போலிஸ் புகார் செய்யும்
‘துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1எம்டிபி-ஆல் எடுக்கப்பட்ட நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ். சிட்டி சென். பெர். (தி.ஆர்.எக்ஸ்.சி.) போலிஸ் புகார் செய்யவுள்ளது. நேற்று, தி.ஆர்.எக்ஸ். மேம்பாட்டுத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட RM3.07 பில்லியன், 1எம்டிபி-யால் தவறாக பயன்படுத்தப்படுவதாக, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்…
வாக்களிக்கும் வயதை 18 க்கு குறைக்க விரும்புகிறார் மகாதிர்
தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் தற்போதைய 21 வயதை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் 18க்கு குறைக்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் ஆலோசனை கூறுகிறார். மக்கள் கற்றறிந்தவர்களாகவும் சுயமாகச் சிந்தித்து தீர்மானிக்கும் திறனுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கையை இதன் வழி வெளிப்படுத்த இயலும் என்று அவரை…
நஜிப் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார் என்கிறார் மகாதிர், நஜிப்…
1எம்டிபி -இல் நிகழ்ந்த பணப்பட்டுவாடாக்கள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் நிராகரிக்கின்றனர். அது சாத்தியமல்ல என்று குறிப்பிட்ட மகாதிர் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் நஜிப்பின் கையெழுத்து உள்ளது …
அதிகமான வெளிநாட்டு தொழிளார்கள் நாட்டிற்குள் புகுந்திருப்பது குறித்து ஸாகிட் விசாரிக்கப்பட…
முறையான பத்திரங்கள் இல்லாமல் நாட்டிற்குள் புகுந்திருக்கும் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை, இந்த விவகாரம் குறித்து போலீஸ் புகார் செய்த பார்டி எக்கோனமி ராக்யாட் மலேசியா-வின் (பெர்கிரா) தலைவர் முகமட் ரிட்ஸுவான் அப்துல்லா, முன்னாள் உள்துறை அமைச்சர் அஹமட்…
1எம்டிபி பணம் பிஎன் உறுப்புக்கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டதா என்றும் விசாரிக்கப்படுகிறதாம்
1எம்டிபி-இலிருந்து பிஎன் உறுப்புக்கட்சிகளுக்கும் அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றியும் அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியிருப்பதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்று கூறுகிறது. இவ்விசாரணை பல “அதிர்ச்சிகளை” உண்டாக்கலாம் என்றும் அது தெரிவித்தது. ஏனென்றால் பணம் பெற்ற தரப்புகளின் வங்கிக் கணக்குகள் விசாரணை முடியும்வரை அல்லது …
‘நஜிப் கடனைப் பெருக்கி வைத்துள்ள வேளையில் சிறுவன் கடனைக் குறைக்க…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டுப்பற்று பற்றியும் தேசிய கடனைக் குறைப்பதற்குச் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் 12-வயது சிறுவனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறினார். சிறுவன் நாட்டின் கடனைக் குறைப்பதற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்ய …
‘தலையாட்டும்’ கலாச்சாரத்தை விட்டொழிப்பீர்- எம்ஏசிசி தலைவர்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல், அரசு அதிகாரிகள் தலையாட்டிப் பொம்மைகள்போல் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “அரசு அதிகாரிகளுக்கு என் எச்சரிக்கை இதுதான்: இனிமேற்பட்டு தலையாட்டிப் பொம்மைகளாக இருக்காதீர்கள். திட்டப் பணிகளைக் கொடுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை. கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் …
























