நாட்டின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். இது மலேசியாவை பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுடன் நிலையான, உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரதமர் அன்வார் இப்ராஹிமின்…
நஜிப்மீதான புலன் விசாரணையை மீண்டும் தொடங்குவீர்: மன்னருக்கு 30,000பேரின் மகஜர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னரையும் ஆட்சியாளர் மன்றத்தையும் கேட்டுக்கொள்ளும் இணையத்தள மகஜர் ஒன்றில் இதுவரை 30,000 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இது இன்று '1 Juta Desak Buka Kembali Siasatan Terhadap Najib Razak' (…
AmBank நிறுவனர் கொலையில் டெக்சி ஓட்டுனர் விடுதலை
AmBank நிறுவனர் உசேன் நஜாடி-இன் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரை தன் டெக்சியில் ஏற்றிச் சென்றதாகக் குற்றஞ்சாப்பட்டிருந்த டெக்சி ஓட்டுனரை முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுவித்தது. தன்மீதான குற்றஞ்சாட்டுக்கும் தீர்ப்புக்கும் எதிராக சியு சியாங் சீ செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தன்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற சியுவின்…
ஜெயேந்திரன்: எம்எச்370 விமானி மீட்கப்பட்டார் என்பது பொய்யான செய்தி
காணாமல்போன எம்எச்370-இன் விமானி மீட்கப்பட்டு தைவான் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இப்படி ஒரு செய்தி வெளிநாட்டு இணைய செய்தித் தளமான ‘வோர்ல்ட் நியுஸ் டெய்லி’-இல் சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குனர் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரையின் படத்துடன் வெளியாகி இருந்தது. ஜெயேந்திரனின் படத்தைப் போட்டிருந்தவர்கள் அவரை …
சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, மலாயாப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீதான நிந்தனை வழக்கை மீட்டுக்கொண்டுள்ளார். “நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில் கூட்டரசு அரசமைப்பு எனக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்டு அஸ்மிக்கு எதிரான வழக்கை நிறுத்திகொள்ள முடிவு செய்தேன்”,என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.…
பிரதமரைக் குற்றவாளியாக்க விரும்பிய ஐவரை சிருல் அம்பலப்படுத்தினார்
முன்னாள் போலீஸ் அதிரடிப் படைவீரர் சிருல் அஸ்ஹார் உமர், மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் தொடர்புண்டு என்று கூறுவதற்குக் கையூட்டு கொடுக்கவும் நெருக்குதல் கொடுக்கவும் முனைந்தவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறாராம். அவர்களைப் பற்றி சிருல் ஒரு காணொளியில் தெரிவித்தார் என்றும் காணொளி தன்வசம் …
‘உச்சமன்றத் தீர்ப்பு ஒரு அபாயகரமான முன்மாதிரி’
இஸ்வான் அப்துல்லாவுக்கு அவரின் மகனைப் பராமரிக்கும் உரிமையைக் கொடுக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு அபாயகரமான முன்மாதிரியாகும். தந்தையுடன் தங்கி இருந்தான் என்பதற்காக எட்டு-வயது சிறுவனை இஸ்வானின் பொறுப்பிலேயே விடுவது தப்பான முடிவாகும் என கூலாய் எம்பி தியோ நை சிங் கூறினார். இஸ்வானும் அவரின் முன்னாள் மனைவி எஸ்.தீபாவும் …
முக்ரிஸ்: 1எம்டிபி, ரிம2.6 பில்லியன் பற்றி நான் கருத்துத் தெரிவித்தது…
1எம்டிபி, ரிம2.6பில்லியன் ‘நன்கொடை’ பற்றிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக தம்மைக் கண்டித்ததாக கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார். “நான் (1எம்டிபி, ரிம2.6பில்லியன் பற்றிப்) பேசியதால் பிரதமர் அதிருப்தி அடைந்திருந்தார், ஆத்திரப்பட்டார்...”, எனக் காணொளி ஒன்றில் முக்ரிஸ் கூறினார்.…
கெடாவில் முக்ரிசுக்கு மேலும் ஒரு தோல்வி: மாநில அம்னோ தலைவர்…
கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா இப்போது மாநில அம்னோ தலைவருமாவார். முக்ரிஸ் மகாதிருக்குப் பதில் பாஷாவை மாநிலத் தலைவராக நியமனம் செய்ய அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பணித்திருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் கூறினார். “கெடா அம்னோவில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை …
Psy நிகழ்ச்சிக்கு பிஎன் 1எம்டிபி பணத்தைக் கொடுத்ததா? பிஏசி ஆராய…
2013 பினாங்கில் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் கொரியன் சூப்பர்ஸ்டார் Psy நிகழ்ச்சி நடத்துவதற்கு பிஎன் 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதா? இதைப் பொதுக் கணக்குக்குழு(பிஏசி) கண்டறிய வேண்டும். இக்கேள்விக்கு இந்நாள்வரை பதில் கிடைக்கவில்லை என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “பிஏசி இன்று அல்லது …
‘நானும் மனிதன்தானே. என் உரிமைகள் என்ன ஆவது?’-சைபுல் கேள்வி
மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்களை அவரால் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான் சாடியுள்ளார். “பாதிக்கப்பட்டவன் நான். நானும் மனிதன்தானே. மனித உரிமைப் போராட்டக் குழுக்கள் என் உரிமைகளை மட்டும் மறுப்பதேன். “மனிதர்கள், யாரை முக்கியம் என நினைக்கிறார்களோ, …
அரசாங்கத்தின் அசிங்கமான இரகசியங்களை மறைக்கத்தான் ஏஜி ஓஎஸ்ஏ-இல் திருத்தங்கள் கொண்டுவர…
ஊழலையும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கையும் எதிர்க்கும் மையம்(சி4). சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அதிகாரத்துவ காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ) த்துக்குத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் எனப் பரிந்துரைத்திருப்பதை வரவேற்கவில்லை. அதை, “அரசாங்கத்தின் அசிங்கமான இரகசியங்களை மக்கள் கண்ணில் படாமல் மூடிமறைக்கும் வெட்கங்கெட்ட செயல்” என சி4 நிறுவன …
‘ஒன்றுபடுவீர்’- எதிரணியினருக்கும் அம்னோ கிளர்ச்சிக்காரர்களுக்கும் சைட் அறைகூவல்
முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் எதிரணியினரும் அம்னோவில் உள்ள கிளர்ச்ச்சிக்காரர்களும் பொது எதிரிகளான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி ஆகியோருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறார். “நஜிப்புக்கும் அபாண்டிக்கும் எதிராக அதிகமாக எதையும் செய்ய முடியாது, அடுத்த பொதுத் …
மகனைப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கும் மகளைப் பராமரிக்கும் உரிமை தாயாருக்கும்…
இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அக்குழந்தைகளைச் சந்தித்துப் பேசிய கூட்டரசு நீதிமன்றம், மகனைப் பராமரிக்கும் உரிமையை அவர்களின் தந்தையான இஸ்வான் அப்துல்லா(என், வீரன்)வுக்கும் மகளைப் பராமரிக்கும் உரிமையைத் தாயார் எஸ்.தீபாவுக்கும் கொடுத்துத் தீர்ப்பளித்தது. பிள்ளைகளின் விருப்பத்தின் அடிப்படையில் அத்தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிவில் திருமண வழக்குகளில் திருமணத்தை…
தீபா: என் மகனை இழந்தேன், சட்டங்கள் மாற வேண்டும்
மகனைப் பராமரிக்கும் உரிமையை இழந்த எஸ்.தீபா இதன் பிறகும் யாரும் இப்படிப்பட்ட விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றார். “இப்படிப்பட்ட (சிவில் திருமணம் சம்பந்தப்பட்ட) வழக்குகளை விசாரிக்கும் உரிமை சிவில் நீதிமன்றங்களுக்கு உண்டு என இன்று (கூட்டரசு நீதிமன்றத்தில்) தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் நான் என் மகனை இழந்து விட்டேன். “மலேசியா …
பிஏசி தலைவர்: மேலும் சாட்சிகளை விசாரித்துக் கொண்டு போனால் 1எம்டிபி…
பொதுக் கணக்குக்குழு, 1எம்டிபி விசாரணைக்காக மேலும் சாட்சிகளை அழைக்கப்போவதில்லை. அதனிடம் போதுமான தகவல்கள் உள்ளன என்பதால் மேலும் சாட்சிகளை விசாரிப்பது “தேவையற்றது”. அது அறிக்கை தயாரிக்கப்படுவதைத் “தாமதப்படுத்தி விடும்”. “நான் ஏற்கனவே அறிவித்ததுபோல் 1எம்டிபி நிர்வாகம் பற்றி பிப்ரவரி 11-இலும் 12-இலும் சாட்சியம் அளிக்கப்போகும் (முன்னாள் தலைவர்( பக்கே …
அன்வாரின் சிறைத்தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவீர்: மனித உரிமைக் கண்காணிப்பு…
அன்வார் இப்ராகிம் சிறை வைக்கப்பட்டு ஒராண்டு நிறைவுபெறும் வேளையில் மலேசிய அரசாங்கம் முன்னாள் துணைப் பிரதமரும் எதிரணித் தலைவருமான அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் காலத்தில் அன்வாருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை அரசாங்கம் உறுதி …
அமானா: அம்னோ கைக்குப் போய்விடக்கூடாதே என்பதால்தான் பாஸின் இடங்களில் போட்டி…
பார்டி அமானா நெகாரா, பாஸ் களமிறங்கும் இடங்களில் எல்லாம் போட்டியிட முடிவு செய்துள்ளது என்றால் அந்த இடங்கள் அம்னோவின் கைக்குப் போய்விடக் கூடாதே என்ற அக்கறைதான் காரணமே தவிர, அதற்கு பிகேஆரும் டிஏபி-யும் வேறு இடங்களைக் கொடுக்காதது காரணமல்ல. இதனைத் தெரிவித்த சிலாங்கூர் அமானா இளைஞர் தலைவர் அப்பாஸ் …
ஸிக்கா வைரசுக்கு எதிரான உயர் விழிப்புநிலையில் அமெரிக்கா
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் (சிடிசி), ஸிக்கா வைரஸ் பரவலை எதிர்க்க அதன் அவசர நடவடிக்கை மையத்தை உயர் விழிப்பு நிலையில் வைத்துள்ளது. கொசுவால் பரப்பப்படும் ஸிக்கா வைரசை எதிர்த்துப் போராட காங்கிரசிடம் யுஎஸ்$1.8 பில்லியன் கேட்கப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ள வேளையில் சிடிசியும் விழிப்புநிலையை முடுக்கிவிட …
சாலமன் தீவுகளில் வலுவான நிலநடுக்கம்
ரிக்டர் கருவியில் 6.4 என்று பதிவான நிலநடுக்கம் நேற்றிரவு மணி 12.19க்கு சாலமன் தீவுகளைத் தாக்கியதாக மலேசிய வானியல் துறை அறிவித்தது. சாபாவின் செம்பூர்ணாவிலிருந்து 4.193 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை. இதனிடையே, இன்று நியு சிலாந்தின் தலைநகரமான …
சீனச் சக்கரவர்த்திபோல் உடை அணிந்து வம்பில் சிக்கிக்கொண்ட பாஸ் பிரதிநிதி
பாஸ் கட்சியின் பாயா ஜராஸ் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் ஒத்மான் “சீனச் சக்கரவர்த்தி”போல் உடை தரித்து சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது வம்பாக போய்விட்டது. அவர் அணிந்த உடை தாவோ சமயத்தாரின் எட்டு தெய்வங்களில் ஒன்றான காவ் குவோஜியு-வுக்குரிய உடையாம். அந்த உடைக்குச் சமயத் தொடர்பு …
பிகேஆரும் டிஏபி-யும் சிலாங்கூரில் இடமளிக்கவில்லையா? அமானாவை நோக்கி பாஸ் கிண்டல்
சிலாங்கூரில் பிகேஆரும் டிஏபி-யும் தங்கள் தொகுதிகளை அமானாவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கண்டர் அப் சமத் கூறினார். அதனால்தான் அமானா, சிலாங்கூரில் பாஸ் போட்டியிடும் இடங்களில் பாஸுக்கு எதிராக போட்டியிட விரும்புகிறது என்றாரவர். “அமானா எதற்காக பாஸ் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது …
அஸலினா: மற்ற நாடுகளில் அரசாங்க இரகசியங்கள் அம்பலமாவதில்லை
அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) திருத்தங்கள் கொண்டுவரும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியின் முடிவு இப்போதைக்கு அவசியமான ஒன்று எனப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் நினைக்கிறார். நாட்டில் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலமாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “மற்ற நாடுகளில் இந்த நிலை இல்லை. மலேசியாவில் நிறைய …
தைவான் நிலநடுக்கம்: இரண்டு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து ஒரு பெண்…
தைவானின் தைனான் நகரில், நில நடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் இன்று உயிருடன் மீட்கப்பட்டார்.48 மணி நேரத்துக்குமேல் அவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தார். ஓர் ஆடவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.…