அந்த ஓட்டுநர் மூச்சுப் பரிசோதனையில் (breathalyser test) தோல்வியடைந்து, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். முன்நிலை விசாரணையில், பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்த போது நேராகச் சென்று கொண்டிருந்த யமஹா LC135 (Yamaha LC135) மோட்டார் சைக்கிள் மீது, சிவப்பு விளக்கில் நிற்காமல் வந்த…
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு எதிரான மகஜர்கள் அரசாங்கத்திடம் தாக்கல்
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தடுத்தும் கடைசி முயற்சியாக 11ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துகள் அடங்கிய இரண்டு மகஜர்கள் நேற்றிரவு பிரதமர்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்கமே அச்சட்டவரைவைக் கைவிட்டாலொழிய அது இன்று பின்னேரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதி. அவ்விரு மகஜர்களையும் கொண்டு வந்த அமைப்புகள் அலிரானும் யுனைடெட் கிங்டம் மற்றும் …
நஸ்ரி ‘நுனிபுல் மேய்கிறார்’, நான் மக்கள் பணம் ‘திருடப்படுவது’ பற்றி…
சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் ஒரு ‘மைஓபிக்’, ஆழமற்ற சிந்தனையாளர் என்று ரஃபீடா அஜிஸ் சாடினார். ஆங்கிலத்தில் 'மயோபிக்' என்ற வார்த்தைக்குக் 'கிட்டப்பார்வை கொண்டவர்' என்று அர்த்தம். மேலும், கற்பனையற்றவர், படைப்பாற்றல் இல்லாதவர், சவால் குறைந்தவர், தொலைநோக்கு குறைந்தவர், குறுகிய / மேலோட்டமான சிந்தனை…
முஹைடின் ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் இணைந்தார்
2013 பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதையத் துணைப் பிரதமரான முஹைடின் யாசின், பொருள், சேவை வரியைக் (ஜி.எஸ்.டி) காட்டி, மக்களைப் பயமுறுத்துவதாக பல எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறை கூறினார். ஏப்ரல் 1, 2015 முதல் ஜி.எஸ்.டி செயல்படுத்தப்பட்டது. 14-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவரும், பக்காத்தான்…
‘நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படலாம்’
அடுத்த வார இறுதியில், பிரதமர் நஜிப் துன் ரசாக் பிஎன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிஎன் தொடர்பியல் உக்தி இயக்குநர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் இன்று தெரிவித்தார். “எங்கள் (பிஎன்) அனுபவத்தின் அடிப்படையில், பி.என். தேர்தல் அறிக்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே சமர்ப்பிக்கப்படும்.…
ஜிஎஸ்டிக்கு எதிரான பாடலுக்காக குவான் எங் விசாரிக்கப்பட்டார்
பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிரான பாடலை குழந்தைகளுடன் பாடியதற்காக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று அவரது அலுவலகத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். அவருடன் அவரது வழக்குரைஞர் ஆர்எஸ்என் ராயரும் இருந்தார். விசாரணைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங், போலீசாருக்கு நன்றி கூறினார்.…
இனி எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது-…
அறுபதாண்டுகளுக்கு முன்பு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கூட்டணியும் அதன் வழியே வந்த பிஎன்னும் 11 பொதுத் தேர்தல்களில் மூன்றில்- இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தன. 12வது பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முதல்முறையாக அது மூன்றில்- இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது, …
பிஎஸ்எம் ‘முற்றிலும் ஓரங்கட்டப்படுகிறதே’: சுங்கை சிப்புட் எம்பி வருத்தம்
பிஎஸ்எம் சுங்கை சிப்புட் எம்பி டி.ஜெயக்குமார், தம் கட்சி எதிரணிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், அக்கூட்டணி தங்கள் கட்சியைப் பொருட்படுத்துவதில்லை என்றார். “2011 தொடங்கி அவர்களோடு ஒத்துழைக்கத் தயார் என்று கூறி வருகிறோம். அவர்கள் அதை மதிக்கவில்லை. அவர்கள் பக்கத்தான் ஹரப்பானை அமைத்தபோதும் தொகுதிப் …
அரச மலாய் ரெஜிமெண்டைக் கலைப்பது நடவாத செயல், பிரதமருக்கு பெட்ரியோட்…
எந்தவொரு அரசியல் கட்சியும் அரச மலாய் ரெஜிமெண்ட்டைக் கலைப்பது “கிட்டத்தட்ட முடியாத காரியம்” என்கிறது பெர்சத்துவான் பெட்ரியோட் கெபாங்சாஆன்(பெட்ரியோட்). நீண்ட வரலாற்றைக் கொண்ட அப்பட்டாளம் தொடர்ந்து இருப்பதற்கு அரசமைப்பு உத்தரவாதமளிக்கிறது. அப்படி இருக்க தரைப்படையின் மிகப் பழைய பிரிவான அரச மலாய் ரெஜிமெண்ட் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து …
ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் ஆணையம் ‘சுதந்திரமாக’ செயல்படும், அன்வார்…
14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிவிட்டால், தேர்தல் ஆணையம் ஓர் உண்மையான, சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார். பிகேஆர் பொதுத் தலைவரான அவர், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள ‘பொய்ச்செய்தி’ சட்டத்தையும் ஹராப்பான் அகற்றிவிடும் என்றும் உறுதியளித்தார். “முற்றிலும் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை…
‘பிஎன்-க்கு நன்றி தெரிவிப்பது கடினமல்ல, தராசில் குறியிடுங்கள்’
நகர்ப்புற நலன், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் நோ ஓமர் பாரிசான் நேசனல் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பது கடினமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். இன்று, புத்ரா உலக வாணிப மையத்தில், அவ்வமைச்சின் கீழ் சுமார் 1,200 வீட்டுத் திட்ட உதவி பெறுநர்களிடம் பேசுகையில், அவர்களை நன்றியுடன்…
‘பாலோ’வின் ஹராப்பான் வேட்பாளர் ஷேக் ஓமார், டிஏபி அறிவித்தது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் பாலோ சட்டமன்ற வேட்பாளராக, தனது விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் ஷேக் ஓமார் அலியை டிஏபி அறிவித்தது. டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், ஜொகூர் பாலோவில், நேற்று மாலை டிஏபி தேர்தல் இயக்க அறையைத் தொடக்கி வைத்தபோது,…
அரசாங்கத்துக்கும் பிரதமருக்கு விசுவாசமாக இருப்பிர்: இராணுவத்துக்கும் போலீசுக்கும் ஆயுதப்படைத் தலைவர்…
தேர்தல் காய்ச்சல் பரவி வரும் வேளையில்,, ஆயுதப் படைத் தலைவர் ராஜா முகம்மட் அபாண்டி ராஜா முகம்மட் நூர், ஆயுதப் படையினரும் போலீசும் அரசாங்கத்துக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் நன்றியுள்ளவர்களாகவும் விசுவாசமிக்கவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோலாலும்பூரில் நேற்றிரவு போலீஸ் மற்றும் ஆயுதப் படையினரைச் சிறப்பிக்கும் …
‘பெர்சத்து ஆர்ஓஎஸ் நிபந்தனைகளை நிறைவேற்றி விட்டது, இனி , ஹரப்பான்…
பெர்சத்துக் கட்சி சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) அதனிடம் கேட்டிருந்த ஆவணங்களை வியாழக்கிழமை அதற்கு விதிக்கப்பட்ட 30-நாள் கெடு முடிவடைவதற்குமுன் ஒப்படைத்தது. ஆர்ஓஎஸ் பிப்ரவரி 28-இல் பெர்சத்துவுக்கு ஒரு கடிதம் அனுப்பி 30 நாள்களுக்குள் அதன் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள், நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவறினால் …
சுஹாகாம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை, நீதிபதிகளுக்குக்கூட
மனித உரிமை ஆணையம், சுஹாகாம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பொதுமக்கள் பலருக்கு அப்படி ஓர் அமைப்பு இருப்பது தெரியவில்லை. சில நீதிபதிகளுக்குக்கூட அது இருப்பது தெரியவில்லை. வியாழக்கிழமை, சுஹாகாம் ஆணையர் நிக் சலிடா சுஹய்லா நிக் சாலே கோலாலும்பூர், கம்போங் கிரிஞ்சியில், சுஹாகாமை மக்களிடம் பிரபலப்படுத்தும் …
மகாதிரை எதிர்கொள்ள பயமில்லையாம், குபாங் பாசு எம்பி கூறுகிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குபாங் பாசு தொகுதியில் போட்டியிட வந்தால், தாம் அவரை எதிர்கொள்ள அஞ்சவில்லை என்று குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஜொகாரி பஹாரும் கூறுகிரார். தமக்கு மகாதிரை நன்கு தெரியும், ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்த…
எம்பி: கெடாவில் ஹரப்பான் செராமாவுக்கு வந்த கூட்டம் மலாய் சுனாமிக்கு…
நேற்றிரவு கெடாவில் பக்கத்தான் ஹரப்பான் ஏற்பாடு செய்திருந்த ஒரு செராமாவுக்கு வந்த 15,000 பேரடங்கிய கூட்டம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி ஏற்படப்போவதற்கான அறிகுறி என்கிறார் டிஏபி எம்பி லியு சின் தோங். முகநூலில் பதிவிட்டிருந்த குளுவாங் எம்பி-ஆன லியு, அடக்குமுறை நிலவும் சூழலில் மழையையும் பொருட்படுத்தாமல் …
ரயிஸ்: தரக்குறைவாக பேசும் எம்பிகளை அவைத் தலைவர் தண்டிக்க வேண்டும்
அம்னோ மூத்த தலைவர் ஒருவர், நாடாளுமன்றத்தில் "go to hell"(செத்துப் போ) போன்ற இழிவான சொல்களைப் பயன்படுத்துவோரை நாடாளுமன்றத் தலைவர் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “நாட்டின் உன்னத கழகமான நாடாளுமன்றத்தில் மரியாதைக் குறைவான சொல்களும் ‘செத்துப் போ’ ‘செலாகா’ போன்ற ஒருவரை இழிவுபடுத்தும் சொல்களும் பயன்படுத்தப்படுவதை அவைத் …
ஜிஇ14இன்போது குழப்பம் விளைவிக்கக்கூடிய மேலும் பலரை அடையாளம் காணும் முயற்சியில்…
போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது “கடைசிநேரத் திடீர் தாக்குதல் நடத்தி”க் குழப்பம் விளைவிக்கக்கூடிய தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் காண தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகின்றனர். இதுவரை அப்படிப்பட்ட 1,100 தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) பூசி ஹருன் கூறினார். இது தேசிய …
பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகத்தில் போலீஸ்
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சே மற்றும் மனித உரிமைக் குழுவான சுவாராம் அலுவலகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடந்த கண்டனக் கூட்டம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வந்ததாக அறியப்படுகிறது. பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகம்மட் சாஅரி, …
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தள்ளி வைப்பது நல்லது- நசிர்…
பிரபல வங்கியாளர் நசிர் அப்துல் ரசாக், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தள்ளிவைக்க வேண்டும் என்று விரும்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சகோதரரான நசிர், அது சட்டமாக்கப்படுவதற்குமுன்னர் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் குறிபிட்டிருந்தார். “பொய்ச் செய்தியை வெறுப்பவன்தான் …
சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில் பதிவு…
தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை நேற்று நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இன்று அது அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டு சட்டமாகியுள்ளது. நேற்றைய தேதி இடப்பட்டுள்ள இந்த உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. நேற்று மாலையில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவை 129 வாக்குகள்…
நச்சுத் தேனான ஹரப்பானிடமிருந்து விலகியிருங்கள், அரசு ஊழியர்களுக்கு நஜிப் எச்சரிக்கை
பக்கத்தான் ஹரப்பானின் "வெற்று வாக்குறுதிகளை" நம்ப வேண்டாம் என்று அரசு ஊழியர்களை பிரதமர் நஜிப் இன்று எச்சரித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக நம்பத்தகாத மற்றும் மக்களைக் கவரும் வாக்குறுதிகளை அளிப்பதாக அவர் கூறினார். அரசு ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் வீட்டு வசதிகள்…
பணிப் பெண்ணை கொடுமைப்படுத்திய டத்தினுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை
தமது பணிப் பெண்ணை கொடுமைப் படுத்திய ஒரு டத்தின் குற்றவாளி என்று தீர்ப்பளித்த செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு நன்னடத்தை பிணை வழங்கியிருந்தது. உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றி அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அத்தீர்ப்பை மறுஆய்வு செய்த நீதி ஆணையர் துன் மஜிட் துன்…













