கடந்த 5 ஆண்டுகளில் 2015-இல் அதிகமானோர் ஆள்குறைப்பு செய்யப்பட்டனர்

கடந்த  ஐந்தாண்டுகளில்  2015-இல்தான்  மிக  அதிகமான  தொழிலாளர்கள்  ஆள்குறைப்பு  செய்யப்பட்டார்கள்  என  மனிதவள  அமைச்சர்  ரிச்சர்ட்  ரியோட்  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். “கடந்த  ஐந்தாண்டுகளை  எடுத்துக்  கொண்டால்  2015-இல்தான்  ஆள்குறைப்பு  அதிகம்  நடந்துள்ளது. ஆனாலும் 2007, 2008,  2009  ஆகிய  ஆண்டுகளுடன்  ஒப்பிட்டால்  எண்ணிக்கை  குறைவுதான்”, என  எழுத்துவழி …

குவான் எங் ஊழல் புரிந்தார் எனக் கூறப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில்…

லிம்  குவான்  எங் (டிஏபி-பாகான்)  ஊழல்  புரிந்தார்  என்று  கூறப்பட்டதை  அடுத்து  மக்களவையில்  ஒரே  கூச்சலும்  குழப்பமும்  நிலவியது. லிம்  முன்பு  வாடகைக்குக்  குடி இருந்த  வீட்டை  இப்போது  மிகக்  குறைந்த  விலைக்கு  வாங்கி  இருப்பதாக  ஷாபுடின்  யஹ்யா(பிஎன் -தாசெக்  குளுகோர்)  கூறினார். ஜார்ஜ்டவுனில்  உள்ள  அந்த  வீட்டின் …

ஏஜிக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம்: எதிரணி மேல்முறையீடு செய்யும்

சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலிமீது  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானத்துக்கு  மக்களவைத்  தலைவர்  அனுமதி  மறுத்திருப்பதற்கு  எதிராக  எதிரணி  மேல்முறையீடு  செய்யும். எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்   மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அலியிடம்  மேல்முறையீட்டைத்  தாக்கல் செய்வார். “விரைவில்  அவருக்குக்   கடிதம்  அனுப்புவேன். மக்களின்  நலனை …

ரிம2.6 பில்லியன் குறித்து கேள்வி கேட்கத் தடையா? கெராக்கான் இளைஞர்கள்…

ரிம2.6 பில்லியன் ரிங்கிட்  நன்கொடை  தொடர்பில் நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பத்  தடை  விதிக்கும்  முடிவை     கெராக்கான்  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி  யோங்  சாடினார். அது  பற்றி  விவாதிப்பது  நீதிமன்ற  வழக்கு  விசாரணையைப்  பாதிக்கும்  என்பதால் தடைவிதிக்க  முடிவு  செய்யப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர்  அஸலினா ஒத்மான்  நாடாளுமன்றத்தில் …

‘கட்சிகள் பில்லியன் கணக்கில் செலவிட்டாலும் அதை விசாரிக்கும் அதிகாரம் இசி-க்கு…

அரசியல்  கட்சிகள்  எவ்வளவு  செலவிட்டாலும்  அதை  விசாரிக்கும்  அதிகாரம்  தனக்கில்லை  என்பதைத்  தேர்தல்  ஆணையம்(இசி)  மீண்டும்  வலியுறுத்தியுள்ளது. கடந்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்  ரிம1.5 பில்லியன்  செலவிட்டதை  ஒப்புக்கொண்டிருப்பதற்கு  எதிராக  தஞ்சோங்  எம்பி  இங்  வை  ஏய்க்கும்  ராசா  எம்பி  தியோ  கொக்  சியோங்கும்  முறையிட்டிருப்பது  குறித்து  கருத்துரைத்த …

பாஸ் ஈக்காத்தானுடன் சேர்ந்து மூன்றாவது கூட்டணியை அமைக்கும்

பாஸ், ஈக்காத்தான்  பங்சா  மலேசியா (ஈக்காத்தான்)  கட்சியுடன்  கைகோத்து  புதிய  அரசியல்  கூட்டணியை  அமைக்கப்போவதாக  அறிவித்துள்ளது. இன்று  பாஸ்  தலைமையகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  அது  அறிவிக்கப்பட்டது. அக்கூட்டத்தில்  ஈக்காத்தான்   தலைவரும்  முன்னாள்  சுற்றுலா  அமைச்சருமான   அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர்,  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், …

பெர்த்தில் மலேசியா மண்டபத்தில் நஜிப்பைக் ‘கோமாளியாகக் காண்பிக்கும்’ ஒட்டுப்படங்கள்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  “கோமாளி  முக”த்துடன்  சித்திரிக்கும் படங்கள்  ஆஸ்திரேலியாவின்  பெர்த்  நகரிலுள்ள  மலேசியா  மண்டபத்தில்  ஒட்டப்பட்டிருந்தன. சமூக  வலைத்தளங்களில்   வலம்  வந்து  கொண்டிருக்கும்  படங்கள், மலேசியா  மண்டபத்தின்  முன்வாயிலிலும்  வெளிப்புறச்  சுவர்களிலும்  நஜிப்பின்  கேலிச்சித்திரங்கள்  ஒட்டப்பட்டிருப்பதைக்  காட்டுகின்றன. நஜிப்பைக்  கோமாளி  முகத்துடன்  முதன்முதலாக  இணையத்தில்  பதிவிட்டிருந்தவர் …

என்எஸ்சி சட்டம் தேர்தலைத் தடுக்காது- ஷகிடான் காசிம்

தேர்தல்களை   இரத்துச்  செய்யும்  அதிகாரம்  தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி) சட்டமுன்வரைவுக்குக்  கிடையாது  என   பிரதமர்துறை  அமைச்சர்  ஷகிடான்  காசிம்  கூறினார். “(பாதுகாப்பு  மண்டல)  பிரகடனம்  குறிப்பிட்ட  பகுதியில்  தேர்தலைக்  கட்டுப்படுத்தாது. “அது  அப்பகுதியில்  அரசியல்  கட்சிகள்  தேர்தல்  பரப்புரைகளில்  ஈடுபடுவதையும்  தடுக்காது”. பாதுகாப்பு  மண்டலம்  என்று  அறிவிக்கப்பட்ட  பகுதிகளில் …

ஹிஷாமுடின்: மார்ச் 27 கூட்டத்தால் எதுவும் நடக்காது

மார்ச்  27-இல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நடைபெறவுள்ள  கூட்டத்தால்  எந்த  மாற்றமும்  நிகழப்போவதில்லை  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். இதற்குமுன்  எத்தனையோ  பேரணிகளும்  இயக்கங்களும்  இப்படித்தான்  நடந்து  முடிந்துள்ளன  என்றாரவர். “எத்தனை  பேரணிகள், ஆருடங்கள்,  கடந்த  ஆண்டில்  மட்டும். “நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  பற்றிக் …

எதிரிகளுடன் சேர்ந்துகொண்ட மகாதிரைக் கடிந்து கொண்டார் நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  எதிரணியுடன்  சேர்ந்து  கொண்டிருக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைக்  கேலி  செய்தார். “முன்பு  maha firaun (ஃபாரோ  மன்னர்)  maha zalim (பெருங்  கொடுங்கோலர்)  என்றெல்லாம்  மகாதிர்  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இப்போது  கூடிக்  குலாவுகிறார்கள்”, என  நஜிப் கூறினார்

ஹிண்ட்ராப்-க்கு, மீண்டும் துணையமைச்சர் பதவியா?

புரிந்துணர்வு ஒப்பந்தமும் துணையமைச்சர் பதவியும் மீண்டும் ஹிண்ட்ராப் அமைப்புக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக லண்டன் வழி நேற்று கிடைக்கப்பெற்ற ஒரு குறுஞ்செய்தியை ஹிண்ட்ராப் அமைப்பின் பினாங்கு மாநிலத் தலைவர் க. கலைச்செல்வன் வெளியிட்டார். இந்தக் குறுஞ்செய்தி லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட எண்களைக் கொண்டுள்ளது. இதை அனுப்பியவர் இதற்கு முன்பும் ஹிண்ட்ராப்…

கைது செய்யப்பட்ட தன் செய்தியாளர்களைத் தற்காத்துப் பேசியது ஏபிசி

ஆஸ்திரேலியாவின்  ஏபிசி  நிறுவனம்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்   ரிம2.6 பில்லியன்  முறைகேடு  பற்றிக்  கேள்விகேட்க  முனைந்து  அதற்காக  மலேசியப்  போலீசாரால்  கைது  செய்யப்பட்ட  அதன்  செய்தியாளர்களைத்  தற்காத்துப்  பேசியுள்ளது. “கூச்சிங்கில்  அவர்கள்  தப்பாக  நடந்து  கொள்ளவில்லை. செய்தி  சேகரிக்கும்  பணியைத்தான்  செய்தார்கள். அச்சம்பவம்  அதிகாரிகளிடம்  கேள்வி  கேட்பது …

‘பிரதமருக்கு புதிதாக ஒரு இபான் மனைவி’ ஜோக்குக்காக மன்னிப்பு கேட்டார்…

சரவாக்  முதலமைச்சர்  அடினான்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  புதிதாக  ஒரு  இபான்  மனைவியை  மணம்  செய்து  செய்துகொள்ளலாம்  என்று  வேடிக்கையாகக்  குறிப்பிட்டது   அம்மாநில  பூர்வகுடி  மக்களுக்குப்  பிடிக்கவில்லை,  ஆத்திரமடைந்தார்கள்.  அதனால்  அடினான்  அவர்களிடம்  மன்னிப்பு  கேட்டார். “பிரதமர்கூட  அதைக்  கேட்டுச்  சிரித்தார். அது  ஒரு  ஜோக்  என்பது …

‘நஜிப்பா மகாதிரா? கருத்துக்கணிப்பு வைத்து தீர்மானிக்கலாமே’

தமக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கிடையில்  யாருக்கு  மக்கள்  ஆதரவு  என்பதைக்  காண்பிக்க  தேசிய  அளவில்  கருத்துக்கணிப்பு  ஒன்றை  நடத்தலாம்  என்று முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறுகிறார். பல்வேறு  தரப்பினர்  நஜிப்புக்கு  ஆதரவு  தெரிவித்தாலும்  சிலருக்கு  இன்னும்  நம்பிக்கை  வரவில்லை.  எனவே,  இதற்கு  முடிவுகட்ட   கருத்துக்கணிப்பு …

சட்டத்தை மீறிய ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஆஸ்திரேய  செய்தியாளர்கள்  குடிநுழைவுச்  சட்டத்தை  மீறியதால்  நாடு  கடத்தப்பட்டார்கள்  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார். அவர்கள்  சுற்றுப்பயணிகள்  விசாவில்தான்  சரவாக்  சென்றார்கள்  என்றும்  அவர்கள்  வேலை  செய்ய   விசா  பெறவில்லை  என்றும்  அவர்  சொன்னார். “ஆக, இது  ஒரு  குடிநுழைவுப்  பிரச்னை”, என்றாரவர்.

“சாப் தீகா கூச்சிங்” சாராயம் பாருங்கள்: எந்த அமைச்சும் நடவடிக்கை…

  நாட்டில் மிக மலிவான சாராயம் மிகச் சுலபமாக கிடைப்பதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் சாராய போத்தல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தார். ஆறு சாராயப் போத்தல்களைக் காட்டிய அவர், தாம் இவ்வாறு செய்யும் நிலைக்குத்…

ஹிண்ட்ராப் மீண்டும் நஜிப்புக்கு அடிமை என்பதில் உண்மையில்லை – வேதமூர்த்தி

நேற்று, ”பதிவு பெற்ற ஹிண்ட்ராப் இயக்கம் மீண்டும் நஜிப்புக்கு அடிமையானது!” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் சார்பாக தொடர்பு கொண்ட பொ. வேதமூர்த்தி, அந்தச்செய்தி அவதூறானது எனச்சுட்டிக்காட்டினார். இது சார்பாக தாம் அவதூறு வழக்கு ஒன்றை தொடுக்கப்போவதாகவும் கூறினார். அந்தச்செய்தியில் எவை அவதூறானவை என்பதைச் சுட்டிக்காட்ட மறுத்த அவர்,…

த மலேசியன் இன்சைடருக்கு மூடுவிழா

இணையச்  செய்தித்  தளமான  த  மலேசியன்  இன்சைடர்(டிஎம்ஐ)  இன்று  நள்ளிரவு  மூடப்படும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது. “வணிக  காரணங்களால்”  அந்த  இணையத்தளத்தை  மூடுவதென்று  அதன்  உரிமையாளர்  தி எட்ஜ்  மீடியா  குழுமம்  முடிவு  செய்திருப்பதாக  டிஎம்ஐ  செய்தி  ஆசிரியர் ஜஹாபார்  சதிக்  கூறினார். “#ஐட்ஸ் அப்  மார்ச்-இல்  மூடப்படுவதும்  பொருத்தமாகவே …

எஸ்டி: ஆவாங் அடேக் பேங்க் நெகாராவின் அடுத்த கவர்னர் ஆகலாம்

ஸெட்டி அக்தார்  அசீசுக்குப்  பின்னர்  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஆகும்  வாய்ப்பு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அணுக்கமான  இருவருக்கு  உள்ளதாக  சிங்கப்பூரின்  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  தெரிவித்துள்ளது. ஒருவர்  அமெரிக்காவுக்கான  மலேசியத்  தூதர்  ஆவாங்  அடேக்  ஹுசேன்,  மற்றவர்  பிரதமர்துறை  அமைச்சர்  அப்துல்  வாஹிட்  ஒமார். பிரதமருக்கு  நெருக்கமான …

செய்தியாளர்கள் பயங்கரவாதிகள் அல்லர்: செய்தியாளர் அமைப்புகள் சாடல்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  கேள்வி  கேட்பதற்காக  நெருங்கிச்  சென்ற   ஆஸ்திரேலிய  செய்தியாளர்கள்  இருவர்  கைது  செய்யப்பட்டதற்கு   மலேசிய  பத்திரிகையாளர்  சங்கங்கள்  கண்டனம்  தெரிவித்துள்ளன. பிரதமரின்  பாதுகாப்பாளர்கள்  ஆஸ்திரேலிய  ஒலிபரப்புக்  கழக(ஏபிசி)ச்  செய்தியாளர்களான  லிண்டன்  பெஸ்ஸர்,  லூய்  பெஸ்ஸர்  ஆகிய  இருவரையும்  தடுத்து  நிறுத்தி  இருக்கலாம்,  கைது  செய்திருக்க …

தாய்லாந்தில் தீவிரவாதிகள் இராணுவ முகாம்மீது தாக்குதல்

தாய்லாந்தின்  நராதிவாத்தில்,  தீவிரவாதிகள்  ஜோக்  இரோங்  மருத்துவ  மனையிலிருந்து  அருகில்  உள்ள  இராணுவ  முகாம்மீது  தாக்குதல்  நடத்தியதில்   தாய்லாந்து  பாதுகாப்புப்  படையினர்  எழுவர்  காயமடைந்தனர். முன்னதாக,  தீவிரவாதிகள்   அவ்வட்டார  இரயில்வே  நிலையத்தைத்  தாக்கியதாக  ஜோக்  இரோங்  போலீஸ்  தலைவர்  கர்னல்  பிரவிட்  சோசெங்  தெரிவித்தார்.  அதன் பின்னர்  இராணுவ …

ஐந்தாண்டுகளில் அரசாங்க இரகசியங்கள் கசிய விடப்பட்ட 31 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன

2010க்கும்  2015க்குமிடையே  அரசாங்க  இரகசியங்கள்   கசிந்த  31  சம்பவங்கள்  நடந்திருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்   அஸலினா  ஒத்மான்  சைட்  கூறினார். அந்த  ஐந்தாண்டுக்  காலத்தில்  அரசாங்க  இரகசிய  காப்புச்  சட்டத்தின்(ஓஎஸ்ஏ)கீழ்  விசாரிக்கப்பட்ட  15 பேரில்  நால்வர்  மட்டுமே  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர். நால்வர்மீதும்  ஓராண்டிலிருந்து  ஏழாண்டுவரை  சிறைத்தண்டனை  விதிக்க  வலை  செய்யும்  …

மகாதிர்: தவணைக் காலம் முடியுமுன்னரே பிரதமரை அகற்ற முடியும்

தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு  பிரதமரை  அவரது  தவணைக்காலம்  முடிவதற்கு  முன்பே  பதவியிலிருந்து  அகற்ற  முடியும்  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  அகற்றுவது  தொடர்பாக  நிலவும்  சர்ச்சை  குறித்துக்  கருத்துரைத்தபோது   மகாதிர்  இவ்வாறு  கூறினார். ஒரு  பிரதமரையும்  அவரின்  கொள்கைகளையும்  மதிப்பிடவும் …