Secret Recipe நிறுவனத்தின் ஹலால் சான்றிதழ் இரத்து

பிரபல கேக்  தயாரிப்பு    நிறுவனமான  சீக்ரெட்  ரெசிபிக்குக்  கொடுக்கப்பட்டிருந்த  ஹலால்  சான்றிதழை மலேசிய இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்) இரத்துச்  செய்துள்ளது. அதே  வேளையில்,  ஹலாலற்ற  பொருள்களை  அந்நிறுவனம்  பயன்படுத்தவில்லை என்பதையும்  ஜாக்கிம்  விளக்கியுள்ளது. “சுத்தக்குறைவு, சரியான தயாரிப்புமுறை  கடைப்பிடிக்கப்படாமை  ஆகியவையே ஹலால்  சான்றிதழ்  இரத்தானதற்குக்  காரணம். “பொருள் …

அருள் கந்தா கந்தசாமியை உடனடியாக நீக்க வேண்டும், ரபிஸி

  1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) தலைவரும் செயல்முறை இயக்குனர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஷாருல் ஹமிலி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் (பிஎசி) கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அவர்களின் முடிவு ஓர் அவமதிப்பு…

1எம்டிபி: அமைச்சரவை தெரியாது என்று சொல்லித் தப்பிக்க முடியாது

1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) குழப்படிக்கு  அமைச்சரவை  மொத்தமும்தான்  பொறுப்பு என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு ரசாலி  ஹம்சா. அவ்விவகாரத்துக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  மட்டுமே  பொறுப்பாக்குவது  சரியல்ல. “அமைச்சரவையில்  உள்ள  அனைவருமே  அப்பிரச்னைக்குக்  கூட்டுப்  பொறுப்பேற்க  வேண்டும். யாரும்  ‘அது  உங்கள்  பிரச்னை  என் பிரச்னை …

அமைதி காப்பீர்: பங்காளிக்கட்சிகளுக்கு பிகேஆர் வேண்டுகோள்

பாஸ்  கட்சியில்  தேர்தல்  நடப்பதையொட்டி  பக்கத்தான்  ரக்யாட்டில்  மூன்று  வாரங்களுக்கு “அமைதி காக்க வேண்டும்”  என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  வலியுறுத்தியுள்ளார். “பக்கத்தானைப்  பாதுகாக்க நிலைமையை  ஆறப்போடுவதுதான்  சிறந்த  வழி. “இரண்டு  மூன்று  வாரங்கள்  அமைதி  காத்து  மக்களின்  எதிர்பார்ப்புகளையும்  அவாக்களையும்  நினைத்துப்  பார்ப்போம்”, என்றாரவர்.…

குவான் எங்: அம்னோவிடம் இருக்கிறது ஹாடியின் இதயம்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங் பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயிலை  ஆதரிக்க  மறுப்பது  அவர்  அம்னோவுடன்  இருப்பதையே  விரும்புகிறார்  என்பதைக்  காண்பிக்கிறது. இதைத்  தெரிவித்த  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்,  “ஹாடி  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்குச்  செல்லவில்லை …

பிஏசி சந்திப்பைத் தவிர்க்கிறார் 1எம்டிபி தலைவர் அருள்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி)த் தலைவரும்  செயல்முறை  இயக்குனருமான  அருள் கந்தசாமி நாளை  பொதுக் கணக்குக்குழு(பிஏசி)க்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  மாட்டார். அருளும் முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரி(சிஇஓ)  ஷாரோல் ஹல்மியும்   சந்திப்பைத்  தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாக  சில  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன. பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  அது…

தாயிப் மஹ்மூட்டுக்கு ரிம3.7 மில்லியன் ரோல்ஸ் ரோய்ஸ்

சரவாக்  ஆளுனர்  அப்துல்  தாயிப்  மஹ்மூட்டுக்கு-   கோலாலும்பூரில்  இருக்கும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக- விலையுயர்ந்த  புதுக்  கார் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு 2012 ரோல்ஸ்  ரோய்ஸ்  ஃபெண்டம். அதுவே  தாயிப்பின்  அதிகாரத்துவ  காராம். அந்தரங்க  விசயங்களை   அம்பலப்படுத்திவரும்  சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  கூறியுள்ளது. அது  சரவாக்  முதலமைச்சரான அடினான்  சாதேம் …

சுபாங் ஜெயாவில் பிடிபட்டது‘ராட்சத’ எலி அல்ல

யுஎஸ்ஜே  11-இல் “ராட்சத எலி” பிடிபட்டதாகக்  கூறும்  செய்திகளும்  படங்களும்  இணையத்தளத்தில்  உலா  வந்தாலும்  அவற்றில்  உண்மை  இல்லை  என்கிறார் சுபாங் ஜெயா  சட்டமன்ற  உறுப்பினர் ஹன்னா  இயோ. எலி  படம்பிடிக்கப்பட்ட  கோணம்  அதன்  தோற்றத்தைப்  பெரிதுபடுத்திக்  காட்டுவதாக  சிலாங்கூர்  சட்டமன்றத்  தலைவருமான  அவர்  தெரிவித்தார். இன்னொரு  கோணத்தில் …

பினாங்கு சிஎம்மைத் தற்காத்துப் பேசினார் அம்னோ எம்பி

அம்னோ  உதவித்  தலைவர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-கைச்  சாடியுள்ள  வேளையில்,  அம்னோ  எம்பி  ரீஸால் மரைக்கான்  அம்மாநிலத்தில்  அகதிகள்  முகாம்  அமைக்கும்  யோசனையைப்  பரிசீலிப்பதாக  லிம் கூறியிருப்பதை  பாராட்டினார். “பல  விவகாரங்களில்  நாம்  கருத்துவேறுபாடு  கொண்டிருப்பது  உண்மை, ஆனால் ரொகின்யா  அகதிகள் …

மகாதிர்: 1எம்டிபி பற்றி நஜிப் கூறிய “பொய்” கிரிமினல் குற்றமாகும்

  1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) நிதியான அமெரிக்க டாலர் 1.103 பில்லியன் (ரிங்கிட் 3.97 பில்லியன்) எங்கு இருக்கிறது என்பது பற்றி பிரதமர் நஜிப் ரசாக் பொய் கூறியதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குற்றம் சாட்டினார். மேலும், அது குற்றமாக இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.…

ஸாகிட்: முகைதின் வீடியோவை கசிய விட்டவருக்கு மன்னிப்பே இல்லை

  பகாங்கில் கடந்த சனிக்கிழமை  நடந்த அம்னோ உறுப்பினர்களுடனான பிரத்தியோக கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை கசிய விட்ட அம்னோ தலைவருக்கு மன்னிப்பே கிடையாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறினார். அந்த அம்னோ தலைவரின் பெயரை…

விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள்மீது பழிபோடும் பிரதமர் ஒரு கபடதாரி

பொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வந்த  பின்னர்  விலைகள்  உயர்வதற்கு  வியாபாரிகளே  காரணம் என்று  பழியை  அவர்கள்மீது  போட  முயலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஒரு  “கபடதாரி”  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. சர்ச்சைக்குரிய  வரி  தொடர்பில்  புத்ரா  ஜெயாவை  குறைகூறும்போது  அது …

புவாட்: நான் ஷபரியின் ஏவலாள் அல்ல

தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  ஷபரி  சிக்-கின்  உத்தரவுப்படிதான்  தம்  முன்னாள்  எஜமானர் முகைதின்  யாசினைத்  தாக்குவதாக கூறப்படுவதை  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  முகம்மட்  புவாட்  ஸர்காஷி  மறுத்துள்ளார். புதன்கிழமை  முகநூல்  பதிவு  ஒன்றில்  சாபா, கெனிங்காவில்  தொடக்கப்  பள்ளி  மாணவர்கள்  உடைந்த  மேசைகளைப்  பயன்படுத்துவதைக்  காண்பிக்கும்  படங்களைப்…

‘ஒரு மனிதருக்காக’ நஜிப் பதவி விலக மாட்டார்

இறுதியில், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்மைப் பதவி விலகச்  சொல்லும்  கோரிக்கைகளுக்கு  நேரடியாகவே  பதிலளித்துள்ளார். “ஒரு  மனிதரின்” பொருட்டு  பதவி  விலகப்  போவதில்லை  என்றவர்  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதை  ஆங்கில நாளேடான த ஸ்டார், ‘நான்  பதவி விலக  மாட்டேன்’  என்ற  தலைப்பிட்டு  முதல்பக்கச்  செய்தியாக  வெளியிட்டிருந்தது. …

பாஸ் பாக்கத்தானிலிருந்து தாராளமாகப் பிரியலாம், டிஎபி சவால்

  பாக்கத்தான் பங்காளிக் கட்சியான பாஸ் அக்கூட்டணியிலிருந்து எவ்விதத் தடையுமின்றி விலகிக் கொண்டு  அம்னோவுடன் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைக்கலாமே என்று டிஎபி அக்கட்சிக்கு சவால் விட்டுள்ளது. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இப்போதெல்லாம் அதிகப்படியாக ஓர் அம்னோ தலைவரைப் போல் நடந்து கொண்டு இன…

பொருளை வாங்கி இருப்பில் வைத்த பிறகும் ஜிஎஸ்டி-இலிருந்து தப்ப முடியவில்லை

ஏப்ரல் 1-க்கு  முன்  முன்யோசனையுடன்  நடந்து  கொண்டார்  நான்கு பிள்ளைகளுக்குத்  தந்தையான  எஸ்.அன்பா. “ஜிஎஸ்டி-யை  வெற்றிகொள்ள  நினைத்தேன். பொருள்களை  வாங்கி  இருப்பில்  வைத்துக்  கொண்டேன்”, என்றார்  அன்பா. பலரையும்  போலவே  அன்பாவும்  ஆறு  விழுக்காடு  இஎஸ்டி-இலிருந்து  தப்பிக்க  பொருள்களை  நிறைய  வாங்கி  வைத்துக்  கொண்டார். ஜிஎஸ்டி  நடைமுறைக்கு  வந்து …

அம்னோ அவசரக் கூட்டம் தேவையில்லை- ரீஸால்

முன்னாள்  தகவல்  அமைச்சர்   சைனுடின்  மைடின்  மொழிந்திருப்பதைப்போன்று   அம்னோ உச்சமன்றம்  அவசரக்  கூட்டம்  நடத்தி கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அதன்  ஆதரவை  உறுதிப்படுத்த வேண்டிய அவ்சியமில்லை. உச்சமன்ற  உறுப்பினர்  ரீஸால்  மெரைக்கான்  நைனா  முகம்மட்  இவ்வாறு  கூறினார். “அவசரக்  கூட்டமெல்லாம்  தேவையில்லை. அம்னோவில் (நஜிப்புக்கு) ஆதரவு …

“தலைவரை நீக்க” அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனரா?

  பகாங்கில் நடைபெற்ற ஓர் அம்னோ நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரை பரவி வருகிறது. அந்த உரையில் 1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) இயக்குநர்கள் நீக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கசியப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த இன்னொரு…

‘11 வது திட்டத்தை யார் நினைக்கப் போகிறார்கள்; அம்னோ போர்…

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அணிக்கும்  துணைப்  பிரதமர் முகைதின் யாசின்  அணிக்குமிடையில்  நிகழ்ந்துவந்த  பனிப்  போர்  இப்போது  வெளிப்படையான  போராக  வெடித்திருக்கிறது  என்று கூறும்  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங், அதை  இனியும்  மூடிமறைக்க  முடியாது  என்கிறார். அடிநிலை உறுப்பினர்கள்  அணி  பிரிந்து  நின்று…

வாக்காளர் பதிவு இசி-இன் தனியுரிமையாக இருப்பதை டிஏபி சாடுகிறது

தேர்தல்  ஆணையம்  புதிய  வாக்காளர்களைப்  பதிவுசெய்யும் பணியை மெதுவாக  செய்கிறது  அதேவேளை அவர்களைப்  பதிவுசெய்ய  அரசியல்  கட்சிகளையும்  அனுமதிப்பதில்லை  என டிஏபி  சாடியுள்ளது. 2.6 மில்லியன்  தகுதிவாய்ந்த  வாக்காளர்கள் இன்னும்  பதிவு  செய்யப்படாமல்  இருக்கிறார்கள்  என  பலாகோங்  சட்டமன்ற  உறுப்பினர்  இங் தியென்  சீ  கூறினார். “வாக்காளர்களாக  பதிவு …

பின்னிரவு துப்பாக்கிச் சூடு பற்றி சிஎம் விளக்க வேண்டும்

புக்கிட்  மெர்தாஜாமில், பின்னிரவு  மணி  ஒன்றுக்குப்  பின்னரும்  ஒரு  கேளிக்கை  மையம்  செயல்பட  அனுமதித்தது  ஏன்  என்று பினாங்கு  முதலமைச்சர்  விளக்கம்  வேண்டும்  என  மலேசிய  குற்றக் கண்காணிப்புப் பணிப்  படை (மைவாட்ச்) தலைவர்  ஆர். ஸ்ரீசஞ்சீவன்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்கேளிக்கை  மையத்தில்  நிகழ்ந்த  துப்பாக்கிச்  சூட்டுச்  சம்பவத்தில்  ஒருவர் …

‘சோம்பேறி’ மைடின்: புவாட் சாடல்

முன்னாள்  கல்வி  துணை  அமைச்சர்  முகம்மட் புவாட்  ஸர்காஷி  தன்  முன்னாள்  எஜமானர்  முகைதின்  யாசினை “சோம்பேறி”  எனச் சாடியுள்ளார். சாபா,  கெனிங்காவில்  ஒரு  பள்ளியில்  மேசை- நாற்காலிகள்  உடைந்துபோய்க்  கிடப்பதை  அடிப்படையாக  வைத்து  அவர்  இவ்வாறு  சாடினார். கல்வி  அமைச்சரும்  அவரின்  இரு  உதவியாளர்களும்  பள்ளிகளுக்கு  நேரில் …

‘பேசாமல் உண்மையைச் சொல்லிடுங்க’-பிரதமருக்கு அம்பிகாவின் இலவச ஆலோசனை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம் பிம்பத்தை  மேம்படுத்திக்கொள்ள தம்  ஆலோசகர்களை  அதிகம்  நம்பியிருக்கக்  கூடாது  என்று மலேசிய வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கூறுகிறார். நஜிப்பைக்  கேலி  செய்யும்  வகையில் டிவிட்டரில்  பதிவிட்டிருக்கும்  அம்பிகா,  பிரதமருக்கு  இலவச ஆலோசனை ஒன்றைத்  தெரிவித்திருந்தார்: ‘பேசாமல்  உண்மையைச் …