சபா மற்றும் சரவாக்கில் டீசல் விலையை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகத் தக்கவைக்கும் அரசாங்கத்தின் முடிவை சபா டிஏபி துணைத் தலைவர் சான் புங் ஹின் வரவேற்றுள்ளார். இந்த மானியம் சலுகை அல்ல, மாறாக அங்குள்ள எதார்த்த நிலையையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கோத்தா கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினரான…
அன்வார் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுவார்
சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவை என்ற அவரின் குடும்பத்தாரின் கோரிக்கைகளைக் கவனிக்காமல் தாமதப்படுத்தி வந்த சிறைத்துறை முடிவில் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. “அவர் பரிசோதனைக்காகவும் கவனிக்கப்படுவதற்காகவும் சிகிச்சைக்காகவும் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என …
தெங்கு ரசாலி: வாக்காளர்களே பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
மலேசியாவில் ஒரு கட்சி பிரதமரை நியமிப்பதைவிட வாக்காளர்களே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாக வேண்டும் என்கிறார் அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சா. “மற்ற வகை அரசாங்க முறைகளையும் ஆராய்ந்து அவற்றில் எது சிறந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைப் பெற்றிருப்பதுகூட நல்லதுதான். கட்சியால் ஒருவர் முன்னிறுத்தப்படுவதைவிட…
பாஸ் தேர்தலின்போது மிதவாதக் கட்சியாக மாறலாம்
பொதுத் தேர்தலின்போது பாஸ் அதன் தீவிரவாதப் போக்கை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யும் என்பதால் அந்த இஸ்லாமியக் கட்சியும் டிஏபியும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒத்துழைக்கும் சாத்தியம் உண்டு என்கிறார் அரசியல் ஆய்வாளர் லோ சீ சோங். “அடுத்த வாரம் கட்சித் தேர்தல்கள் என்பதால் பாஸ் பழமைப் போக்கை விடாமல் …
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொருவரும் நாடு கடத்தப்படுகிறார்
மலேசிய குடிநுழைவுத் துறை, ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொரு ஜனநாயக-ஆதரவு ஆர்வலர் ஒருவரையும் நாடு கடத்த ஏற்பாடு செய்து வருகிறது. ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினரான லியோங் குவொக்-ஹங் இன்று பிற்பகல் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து இறங்கியதுமே தடுத்து வைக்கப்பட்டார். பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த …
ஹுடுட் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட பண்டிகாரை கெராக்கான் சாடியது
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது மீது பாஸ் கட்சியின் தனி உறுப்பினர் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தலைவருக்கு கெராக்கான் இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. “நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி உறுப்பினர் சட்டவரைவு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. “இப்போது அதை அனுமதிப்பார்களானால் …
மகாதிர்: பணத்தைக் காணாதவரை 1எம்டிபி குற்றவாளியே
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டப்படாதவரை அந்நிறுவனத்தின் நிர்வாகத்தைக் குற்றவாளி என்றே கருதப்படும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். கேய்மன் தீவில் முதலீடு செய்யப்பட்ட யுஎஸ்1.03(ரிம 4பில்லியன்) பற்றித்தான் மகாதிர் குறிப்பிடுகிறார். அப்பணம் என்னவானது என்பது புரியாத புதிராக உள்ளது. “கேய்மன் …
நஜிப் பதவியில் தொடர்ந்து இருக்க அவர் ஆறு நடவடிக்களை மேற்கொள்ள…
பிரதமர் நஜிப் தமது தவணைக் காலம் வரையில் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மூத்த ஊடகவியலாளரான காடிர் ஜாஸின் கூறுகிறார். அந்த ஆறு நடவடிக்கைகள்: 1. துணைப் பிரதமர் முகைதின்…
இன்று உலக பட்டினி தினம்
இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம். உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி…
பெர்காசா: 11எம்பி-இல் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் அதிகமாக ஒன்றுமில்லை
பிரதமரால் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 11வது மலேசிய திட்டம் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் குறிப்பிட்ட வியூகங்களையோ திட்டங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதால் அதை நிராகரிப்பதாக மலாய் என்ஜிஓ-வான பெர்காசா கூறியுள்ளது. ஒரு வாரகாலம் அந்த என்ஜிஓ-வின் பொருளாதாரப் பிரிவு அத்திட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அதில் பொருளாதார …
பாஸ் எம்பி: ஹுடுட் அரசமைப்புக்கு உட்பட்டது
ஹுடுட் சட்டம் அரசமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்ற கூட்டரசு அரசாங்கத்தின் நிலைப்பாடு, அது அந்த இஸ்லாமிய சட்டத்தை ஆதரிக்கவில்லை எனப் பொருள்படாது. “ஏனென்றால் ஹுடுட் அரசமைப்புக்கு ஏற்புடையதே”, என்கிறார் தகியுடின் ஹசான்(பாஸ்- கோத்தா பாரு). கிளந்தான் அரசு, மாநிலச் சட்டங்கள் எல்லாமே, 22 ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்ட கிளந்தான் ஷியாரியா …
1எம்டிபி: பண்டிகார் நஜிப்பை வழிக்குக் கொண்டுவர வேண்டும்
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, சர்ச்சைக்குரிய 1எம்டிபி கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அடக்கி வழிக்குக் கொண்டுவர வேண்டும். நாடாளுமன்றச் சீரமைப்புப் பற்றிப் பேசும் பண்டிகார் இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “பண்டிகார் தலையிட்டு …
மகாதிர்: வரிக்காக என்னை விரட்டினார்கள், பணக்காரர்களை விட்டு விட்டார்கள்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முன்பு தாம் மருத்துவராக தொழில் புரிந்தபோது உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அதிரடிச் சோதனைகளுக்கு அடிக்கடி ஆளானதாகவும் இன்றோ பெரும் பணக்காரர்களாக திகழும் அமைச்சர்களோ சுதந்திரமாக திரிகிறார்கள் என்றும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார். “அரசாங்க அதிகாரிகள் வருமானத்தைமீறிய வாழ்க்கை வாழ்ந்தால் வருமான வரி …
ஷாபி: 1எம்டிபி பற்றி அமைச்சரவையில் கேள்வி கேட்டது உண்டு
புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால், 1எம்டிபி விவகாரத்துக்கு அமைச்சரவை மொத்தமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதை நிராகரித்தார். அமைச்சரவைக் கூட்டங்களில் அமைச்சர்கள் 1எம்டிபி பற்றிக் கேள்வி கேட்கத் தவறியதில்லை என்று ஷாபி கூறினார். “நாங்கள் பொறுப்பான அமைச்சர்கள். அதனால்தான் கேள்வி கேட்டோம்..... எங்களுக்கும் தெரிந்து …
10வது திட்டத்தில் 40 விழுக்காடு நிறைவேற்றப்படவில்லை
பத்தாவது மலேசிய திட்டத்தில் விவரிக்கப்பட்ட திட்டங்களில் சுமார் 40 விழுக்காடு இன்னும் முழுமையாக அமலாக்கப்படவில்லை. 10வது மலேசிய திட்டம் சாதித்தது என்ன என்று அறிந்துகொள்ள விரும்பிய ரந்தாவ் பாஞ்சாங் எம்பி-க்குப் பிரதமர்துறை இவ்வாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 10வது மலேசியத் திட்டத்தின்படி இவ்வாண்டு மே 11வரை 11,894 திட்டங்கள் …
அருள், ஷாரோல், எங்கே போனீர்கள்? டோனி புவா கேள்வி
1மலேசியா மேம்பாட்டு நிறுவனத் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) அருள் கந்தாவும் முன்னாள் சிஇஓ ஷாரோல் ஹல்மியும் பொதுக் கணக்குக் குழுவிடம்(பிஏசி) சாட்சியம் அளிக்காமல் எங்கே சென்றார்கள் என அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டோனி புவா வினவினார். “பிஏசி சாட்சியம் அளிக்க வருமாறு கூறியிருக்க மே 25, 26-இல் அவர்கள் …
பிஎசி: 1எம்டிபி விசாரணைக்கு பிரதமரும் அழைக்கப்படலாம்
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஎசி) அதன் 1எம்டிபி மீதான விசாரணைக்கு அழைக்கப்பட்ட 1எம்டிபியின் அதிகாரிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அக்குழுவின் தலைவர் மறுத்தார். பிஎசியின் விசாரணைக்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படலாம் என்று அக்குழுவின் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் மேலும்…
அரசாங்கம் தாயிப்புக்கு ரோல்ஸ்-ரோய்ஸ் கார் வாங்கிக் கொடுக்கவில்லை
சரவாக் ஆளுனர் அப்துல் தாயிப் மஹ்மூட் பயன்படுத்தும் 2012 ரோல்ஸ்-ரோய்ஸ் ஃபெண்டம் கார் அரசாங்கம் வாங்கிக் கொடுத்தது அல்ல என அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். ரிம3.7மில்லியன் மதிப்புள்ள அக்காருக்கு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை.. சரவாக் ரிப்போர்ட்-டில் வெளிவந்துள்ள செய்தி பற்றிக் கேட்டதற்கு, “அது எனக்கே ஒரு புதிய …
ரபிஸி: பிஏசி நஜிப்பை விசாரணைக்கு அழைக்க வேண்டும்
1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய நிதிச் செயல்பாடுகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இணக்கத்தின்பேரில்தான் நடந்துள்ளன என்பதால் பொது விசாரணைக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி. 1எம்டிபி நிறுவனத்துக்கு முன்பிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவன (டிஐஏ)த்தின் அமைப்பு விதிக்…
ஜிஎஸ்டி-யால் சில கடைகள் மூடப்பட்டது உண்மையே
பொருள், சேவை வரி கொண்டுவரப்பட்ட பின்னர் சில கடைகள், குறிப்பாக வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த கடைகள் மூடப்பட்டதை நிதி அமைச்சு ஒப்புக்கொண்டது. “ஆனால், அவை மூடப்பட்டதற்கு ஜிஎஸ்டிதான் முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது”. நேற்று நாடாளுமன்றத்துக்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சு இவ்வாறு கூறியது. “அவை வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த …
எம்ஏசிசி: பெல்டா லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் தவறில்லை
மலேசிய உழல்தடுப்பு ஆணையத்தின் தொடக்க நிலை ஆய்வில் பெல்டா நிர்வாகம் ரிம538 மில்லியன் கொடுத்து லண்டனில் ஆடம்பர தங்கும் விடுதி வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. “எம்ஏசிசி-இன் தொடக்கநிலை ஆய்வுகளில் 2009 மலேசிய ஊழல்தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் எதுவும் நிகழ்ந்திருப்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை”, எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் …
மேல்முறையீட்டு நீதிமன்றம்: இந்திராவின் குழந்தைகளை மத மாற்றம் செய்த முறை…
பாலர்பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளை மத மாற்றம் செய்ய பின்பற்றப்பட்ட முறை சரியானதா என்பதை புத்ராஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திராவின் முன்னாள் கணவர் அக்குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்தார். மத மாற்றம் செய்த…
நாசிர்: 1எம்டிபி வராததை ஏற்றுக்கொள்ள முடியாது
பிரதமரின் சகோதரர் நாசிர் ரசாக், இன்று பொதுக் கணக்குக்குழுவின் விசாரணைக்கு 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) வந்து சாட்சியம் அளிக்கத் தவறியதை ”ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார். “உங்கள் நிறுவனம் தேசிய நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தைச் சந்திக்க உங்களுக்கு நேரமில்லையா? ஏற்றுக்கொள்ள முடியாத காரணம்”, என்றவர் இன்ஸ்டாகிராமில் …
திடீர் தேர்தல் நடத்தி மகாதிர் வாயை மூடுவீர்: நஜிப்புக்கு பாஸ்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சொந்தக் கட்சிக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்பதால் அவர் திடீர் தேர்தலை நடத்திப் புதிய அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என்கிறார் எதிரணி எம்பி ஒருவர். அப்படிச் செய்வதன்வழி நஜிப், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் உள்பட அவரைக் குறைகூறுவோரின் வாயை அடைக்க முடியும் …


