கடத்தல்காரர்கள் உடல் உறுப்புகளை எடுத்துப் பணத்துக்கு விற்றிருக்கிறார்கள்

ரொஹின்யாக்களையும்  வங்காள  தேசிகளையும்  கடத்திவரும்  கடத்தல்காரர்கள்  அவர்களைப் பயன்படுத்தி  மில்லியன்  கணக்கில்  பணம்  பண்ணியிருக்கிறார்கள். முதலில், மியான்மாரிலிருந்து  தப்பியோட  ஒவ்வொரு  அகதியிடமிருந்தும்  ரிம5,000  வாங்குவார்கள்.  அதன்  பிறகு  தாய்லாந்து-மலேசிய  எல்லையிலுள்ள  காட்டு  முகாம்களுக்குக்  கொண்டுவரப்படும்  அவர்கள்  மேலும்  ரிம3000-இலிருந்து ரிம5,000வரை  கொடுத்தால்தான்  அங்கிருந்து  வெளியேற  முடியும். பணம்  கொடுக்காதவர்கள் …

பாஸ் கட்சித் தேர்தலில் டிஏபி தலையிடுவதாகக் கூறப்படுவதை நிரூபிக்க வேண்டும்

டிஏபி  அது  பாஸ்   தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கைக்  குறைகூறுவதன்வழி  அக்கட்சியின்  தேர்தலில்   தலையிடுவதாகக் கூறினால்  மட்டும்  போதாது  அதை  நிரூபிக்கவும்  வேண்டும். இவ்வாறு  கோரிக்கை விடுத்த  டிஏபி  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  ஹாடி-க்கு  எதிராக  அறிக்கைகள் விடுப்பது  “தலையீடு”  என்று  அர்த்தமாகுமா  என்றும் வினவினார்.…

தாமான் துன்னில் துப்பாக்கிக்காரர்களைப் பிடிப்பதில் போலீஸ் தீவிரம்

போலீசார்  தாமான்  துன்  டாக்டர்   இஸ்மாயிலில்  ஒரு  பகுதியில்  பாதுகாப்பு  வளையம்  அமைத்து  லெம்பா  கியாரா பொழுதுபோக்கு  பூங்காவுக்குள்  தப்பியோடிய  அறுவரைத்  தேடி  வருகிறார்கள். அவ்வறுவரும்  ஆயுதங்கள்  வைத்திருப்பதாக  நம்பப்படுகிறது. அவர்கள்  அனைவருமே  வெளிநாட்டவர்  என போலீஸ்  கருதுகிறது. “அந்த  அறுவரும்  காவல்  சுற்றில் ஈடுபட்டிருந்த போலீசைக்  கண்டதும் …

ஹாடியைத் தற்காத்துப் பேசாதவர்கள் கோழைகள்

கட்சித் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கை  டிஏபி  தாக்கிப்பேசியபோது  அவரைத்  தற்காக்கத்  தவறிய  பாஸ்  இளைஞர்  தலைவர்களைக்  கோழைகள் எனப்  பேராளர்  ஒருவர்  சாடினார். “டிஏபி, பாஸ் தலைவர்  பற்றிப்  பொய்களை  அவிழ்த்து  விட்டபோது  பாஸ் இளைஞர்  தலைமைத்துவம்  தலைவரைப்  பாதுகாக்கத்  தவறிவிட்டது. “பாஸ்  இளைஞர்கள் மெளனம்  காத்தார்கள்.…

‘அமைச்சர் பதவியைத் துறந்தேனா?’:மறுக்கிறார் ஹிஷாமுடின்

தற்காப்பமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  பதவிதுறந்ததாகக்  கூறப்படுவதை  இன்று  மறுத்தார். அது “பொறுப்பற்றவர்கள்  கட்டிவிட்ட  கதை”  என்றாரவர். டிவிட்டரில்  இணையப் பயனர்  ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த  ஹிஷாமுடின் இவ்வாறு  கூறினார். ஹிஷாமுடின், 1எம்டிபி சர்ச்சை தொடர்பில்  அவர்  பதவி  விலகலாம்  என்று   உலாவரும்  வதந்தி  தொடர்பாகத்தான் இவ்வாறு  கூறியதாக  தெரிகிறது.

பாஸ் கட்சித் தேர்தலில் டிஏபி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு

டிஏபி-இன் ‘பிரித்தாளும்’ சூழ்ச்சி  பக்கத்தான்  ரக்யாட்டில்  நிலவும்  அரசியல்  ஒத்துழைப்பைக் கெடுக்கும்  என  டேவான்  உலாமா  இடைக்காலத்  தலைவர்  மாபோட்ஸ்  முகம்மட்  கூறினார். பாஸ்  தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்மீது  டிஏபி  தொடுக்கும்  தாக்குதல்கள்  பாஸ்  தலைமைத்துவத்தில்  பிளவை  உண்டுபண்னலாம். சாபா, சரவாக்கில்  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்ததற்கு இதுதான் …

முகைதின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  நேற்றிரவு  அமைச்சர்களுக்காக கோலாலும்பூர்,  மெஜஸ்டிக்  ஹோட்டலில்  நடைபெற்ற  சிறப்புக்  கூட்டத்தில் கலந்து  கொள்ளவில்லை. வெளிநாடு  சென்றிருந்த  முகைதின்  இரவு  8.45க்குத்தான் திரும்பி  வந்தார்  என்பதால்  கூட்டத்துக்குச்  செல்ல  முடியவில்லை என  அவருக்கு  அணுக்கமான  வட்டாரமொன்று  தெரிவித்தது. “கூட்டம்  நடப்பது  அவருக்குத்  தெரியும்  ஆனால்,…

நேற்றிரவு அமைச்சர்கள் கூடி என்ன பேசினார்கள்?

நேற்றிரவு அமைச்சர்கள்  கூட்டம்  ஒன்று  நடைபெற்றுள்ளது. அதில்  என்ன  விவாதிக்கப்பட்டது  என்பது  மர்மமாக  உள்ளது. கூட்டம்  நடந்த  இடத்தில்  குறைந்தது  16  அமைச்சர்கள்  காணப்பட்டதாக  ஸ்டார்டிவி  கூறியது. கூட்டத்தின்  நிகழ்வு  பற்றித்  தெரிவிக்க  எவரும்  முன்வரவில்லை.  இரண்டாம்  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்சா மட்டும்  சிறிது   பேசினார்.  ஆனால்,…

குலா: கட்டப்படாமல் இருக்கும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளின் நிலை என்ன?

  பிரதமர் நஜிப் ரசாக் கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டில் 7 புதிய தமிழ்ப்பள்ளிகள்  கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அவற்றில் ஒன்றின் கட்டட வேலை அப்போதே நடந்து கொண்டிருந்தது. எஞ்சியுள்ள 6  தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம் எந்த அளவில் இருக்கிறதென்று  இதுவரை யாரும்  அறிவிக்க வில்லை என்று டிஎபி…

கூட்டாளிகள் இல்லையேல் பாஸ் மீண்டும் தோல்வி காண்பது திண்ணம்

பக்கத்தான்  ரக்யாட் உடைந்து  விடாமல்  அதை  பாஸ்  பாதுகாப்பது  முக்கியம். அதைச்  செய்யத்  தவறினால்  பொதுத் தேர்தலில்  தோல்வி  உறுதி  என்று  அதன்  இளைஞர் தலைவர்  சுஹாய்ஸான்  காயாட்  எச்சரித்துள்ளார். “நம்மை  நாமே  நம்பி  இருப்பதே  சிறந்தது  என்று  நினைப்போரும்  நம்மிடையே  இருக்கிறார்கள். “முன்பு  நாம்  தனித்து  நின்றபோது …

டாக்டரின் புலம்பலைக் கண்டுகொள்ள வேண்டாம்: நஜிப்புக்கு நஸ்ரி அறிவுறுத்து

டாக்டர்  மகாதிர் முகம்மட்  என்ன  வேண்டுமானாலும்  புலம்பிக்கொள்ளட்டும். அதைக்  கண்டுகொள்ளாதிருப்பதுதான்  புத்திசாலித்தனம்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு ஆலோசனை  கூறியுள்ளார்  நஸ்ரி  அப்துல்  அசீஸ். அதற்குப்  பதில்  கூறுவதை  விடுத்து  நஜிப்  பிரதமருக்குரிய  பொறுப்புகளில்  கவனம்  செலுத்த  வேண்டும்  எனப் பண்பாட்டு,  சுற்றுலா  அமைச்சர் அறிவுறுத்தினார். அவரின் …

போரின் அறிகுறியாக, துணைப் பிரதமரை வரவேற்க கேஎல்ஐஏ-இல் பெருங் கூட்டம்…

1எம்டிபி விவகாரத்தில்  தம்முடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள்  பதவி  விலகலாம்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியதை  அடுத்து  இப்போது  கவனம் துணைப்  பிரதமர்  முகைதின் யாசின் பக்கம்  திரும்பியுள்ளது. முகைதின்  கடன்  தொல்லைகள்  நிரம்பிய  1எம்டிபி  பற்றி  நஜிப்புடன் மாறுபட்ட  கருத்தைக்   கொண்டவர். ஆகக்  கடைசியாக  அம்னோ …

நஜிப் அவரது தரப்பை எடுத்துரைக்க ஏற்பாடு செய்கிறது என்ஜிஓ

வரும்  வெள்ளிக்கிழமை, சமூக  அமைப்புகளும்  குடிமக்களும்  ஒரு  கலந்துரையால்  நிகழ்வில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கேள்விகளால்  துருவித் துருவி  விசாரிக்க  வாய்ப்பைப்  பெறுவார்கள். அந்நிகழ்வை  ஏற்பாடு  செய்திருக்கும்  வழக்குரைஞர்களைக்  கொண்ட   அமைப்பான  சுகாகுவாம்,  நஜிப்பைப்  பற்றியும்  அவரது  ஆட்சி  பற்றியும்  கேள்வி  கேட்க  நிறைய  வாய்ப்பளிக்கப்படும்  என்று…

அமெரிக்காவில் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார் பால் புவா

உலகக்  கிண்ணக்  கால்பந்தாட்டப்  போட்டியின்போது  லாஸ்  வேகாஸில் சட்டவிரோதமாக  பந்தயம்  கட்டும் கட்டமைப்பை  நடத்தியதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  மலேசியரான  பால்  புவா  குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார். அவ்வழக்கில்  அரசாங்கத் தரப்பு  ஆதாரங்களை  நீதிபதி  ஏற்க  மறுத்து  வழக்கைத்  தள்ளுபடி  செய்தார். அதே  குற்றம்  சுமத்தப்பட்டிருந்த  புவாவின்  மகனும்  மற்றவர்களும்  சிறுகுற்றம் …

கைதி தூக்கில் தொங்கிய சம்பவத்தில் தப்பு நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை

மே  22-இல், குளுவாங் சிறையில்  கைதி  ஒருவர்  தூக்கிலிடப்பட்ட  நிலையில் காணப்பட்ட  சம்பவத்தில்  சூது  எதுவும்  நிகழ்ந்திருக்க  வாய்ப்பில்லை  என்பதைச்  சிறைத்துறை  உறுதிப்படுத்தியுள்ளது. தூக்கில்  தொங்கியவரின்  கழுத்தில்  மட்டுமே  சிராய்ப்புகள்  காணப்படுவதாக  கொரோனரும்  சிறைத்துறை  தலைமையகமும்  மேற்கொண்ட  சோதனைகள்  காட்டுவதாக  சிறைத்துறை  துணை  இயக்குனர்  சுப்ரி  ஹஷிம்  கூறினார்.…

கிறிஸ்துவ அமைப்பின் தொடக்கவிழாவுக்கு பெர்காசாவுக்கு அழைப்பு

மலாய்  உரிமைக்காகப்  போராடும்  பெர்காசா  ஒரு  முறை பைபிளை  எரிக்கப்போவதாக  மிரட்டியிருக்கலாம். ஆனாலும்  புதிதாக  அமைக்கப்பட்டுள்ள  அமைதிக்கும்  இணக்கத்துக்குமான  கிறிஸ்துவ  அமைப்பு(சிபிஎச்எம்)  அதன்  தொடக்க  விழாவுக்கு  பெர்காசாவை  அழைத்துள்ளது. இன்றிரவு கோலாலும்பூர்  மெஜெஸ்டிக்  ஹோட்டலில் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தலைமையில்  நடைபெறும்  சிபிஎச்எம்  தொடக்க  விழாவுக்கு  அழைப்பு …

மகாதிர்: மலேசியா 2020 இலட்சியத்தை அடைவது சாத்தியமில்லை

  மலேசியா அதன் 2020 இலட்சியத்தின் நோக்கத்தை குறித்த காலத்தில் அடையும் என்று மகாதிர் முகமட் எதிர்பார்க்கவில்லை. இன்று வெளிநாட்டு செய்தியாளர்கள் கிளப்பின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய மகாதிர் தனிமனிதர் ஒருவரின் வருமானத்தை மட்டும் இலாக்காக வைத்து செயல்படுவது போதுமானதல்ல என்பதோடு அது முற்றிலும் செயற்கையானதாகும் என்று கூறினார்.…

நஜிப்: என் வழிக்கு வராத அமைச்சர்கள் வெளியேறலாம்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனக்  குளறுபடிகள்  பற்றி  சில  அமைச்சர்கள்  கேள்வி  எழுப்பியதை  அடுத்து  அவ்விவகாரத்தில்  தம்மை  ஆதரிக்காதவர்கள்  பதவி  துறக்கலாம்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை  இரண்டாவது  நிதி  அமைச்சர்  அஹ்மட்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா 1எம்டிபி  சீரமைப்புத்  திட்டத்தை  அமைச்சரவையில்  தாக்கல்  செய்த …

பிரதமர் புதிய அரசியலை நிராகரிப்பது பல குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம்

‘பொடா(பயங்கரவாதத்  தடுப்புச் சட்டம்), தேச நிந்தனைச்  சட்டங்கள்: நாடு  எங்கே  போகிறது’  என்ற கருத்தரங்கில்  பேசிய  அலிரான்  தலைவர்  பிரான்சிஸ்  லோ  மலேசியர்கள்  மேலும்  பல  கொந்தளிப்புகளைச்  சந்திக்க  நேரும்  என  எச்சரித்தார். நாட்டில்  உருவாகியுள்ள  ‘புதிய  அரசியலு’டன்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தலைமையில்  இயங்கும்  பிஎன்…

குறைகூறல்களால் 11வது திட்டத்தின் செயலாக்கத்தைக் தடுக்க முடியாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தம்  தலைமைத்துவம்  பற்றி  என்னதான்  குறை  சொன்னாலும்  11வது  மலேசிய  திட்டத்தைச் செயல்படுத்தும்  அரசாங்கத்தின் கவனம்  அதனால்  மாறப்போவதில்லை  என்கிறார். இன்று  அரசு  அதிகாரிகளிடையே  பேசிய  நஜிப்,  அவர்கள்  நாட்டுக்கு  மேலும்  முதலீடுகளைக்  கொண்டுவரவும்  மலேசியாவில்  ஆக்கத்தைப்  பெருக்கி  அதை உயர்- வருமானம் …

சைபுல் அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கைக் கைவிட்டார்

முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தொடுத்திருந்த ரிம50மில்லியன் அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். அன்வாரின் வழக்குரைஞர் லத்தீபா கோயா இன்று இதனைத் தெரிவித்தார். அவ்வழக்குமீது இன்று காலை விசாரணை நடப்பதாக இருந்தது. சைபுல் கடந்த ஆகஸ்ட் மாதம் அவ்வழக்கைத் தொடுத்திருந்தார். அன்வார், சைபுலுடன்…

பினாங்கு அரசு பத்துகாவான் இந்தியர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும்!

பத்து காவான் முன்னாள் தோட்ட மக்கள் அங்கு தொடர்ந்து கால்நடை வளர்ப்புத் தொழில் புரிந்து வருகின்றனர். தேசிய முன்னணி ஆட்சியில் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இவர்கள் பினாங்கின் மக்கள் கூட்டணி ஆட்சியில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பினாங்கு முதல் அமைச்சருக்கு இரண்டு மனுக்களை…

உத்துசான் இப்போது ஹுடுட் விவகாரத்தில் மரினா மகாதிரை தாக்குகிறது

இப்போது வெளிப்படையாக நடைபெற்றுவரும் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தற்போதைய பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான போரில் அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா மகாதிரின் மகள் மரினா மீது பாயத் தொடங்கியுள்ளது. அதன் வாராந்திர மிங்குவான் மலேசியாவில் அவாங் செலாமாட் என்ற புனைப்பெயரில் எழுதுபவர் ஹூடுட் பற்றி பேசும் போது மரினா…