‘பதவி விலக வேண்டாம்; டிஏபியிடன் உறவுகள் துண்டிப்பு இன்னும் இறுதி…

டிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளக்  கோரி  வார இறுதி  பாஸ்  முக்தாமாரில்  கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தைத்  தொடர்ந்து பினாங்கிலும்  சிலாங்கூரிலும்  அரசுப்  பணிகளில்  உள்ள  பாஸ்  தலைவர்கள்  “அவசரப்பட்டு” பணி  விலகிவிட  வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். “தலைமை  முடிவெடுக்குமுன்னர்  அவசரப்பட   வேண்டியதில்லை”, என உலாமா  பிரிவுத்  தகவல்  தலைவர்  முகம்மட்  கைருடின் …

சாபாவில் சிறிய நில நடுக்கங்கள் தொடர்கின்றன

சாபாவில்  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  பலமான  நிலநடுக்கத்தை  அடுத்து இன்று  பல  இடங்களில்  சிறிய  நிலநடுக்கங்கள்  பதிவாகியுள்ளன. இன்று  காலை  கோத்தா  பெலுட்டில் ரிக்டர் கருவியில் 3.0  என்று  பதிவான பலவீனமான  நிலநடுக்கம்  ஒன்று நிகழ்ந்ததாக  மலேசிய  வானியல்  ஆய்வு  மையம்  தெரிவித்தது. ராணாவிலும்  நில  அதிர்வுகள்  உணரப்பட்டன. லாபுவானுக்கு …

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பினாங்கு ரிம100,000 உதவி

பினாங்கு  அரசு, சாபாவில்  நில  நடுக்கத்தால்  பாதிக்கப்பட்டோருக்கு  உதவியாக  ரிம100,000  கொடை  வழங்க  எண்ணியுள்ளது. வழக்கமாக  புதன்கிழமைகளில்  கூடும்  மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்தில்  இப்பரிந்துரையை  முன்வைக்கப்போவதாக  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். அந்நிலநடுக்கத்தில் சிங்கப்பூர்  பள்ளி  மாணவர்கள்  10பேர்  உள்பட, 13 பேர்  உயிரிழந்ததற்கு  லிம்  இரங்கல் …

பாஸ்மா புதிய அரசியல் கட்சியா?

  கடந்த வாரம் நடைபெற்ற பாஸ் முக்தாமாரில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து பெர்சாத்துவான் உம்மா செஜாதெரா மலேசியா (பாஸ்மா) என்ற அரசு சார்பற்ற அமைப்பு புதிய அரசியல் கட்சி தோற்றுவிப்பது பற்றி விவாதிக்கவிருக்கிறது. இந்த என்ஜிஓவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பாஸ் முற்போக்குவாதிகள் இந்த சாத்தியம் குறித்து அடுத்த வாரம்…

குவான் எங்: பாஸ் காலி செய்யும் பதவிகள் மற்ற மலாய்க்காரர்களைக்…

பினாங்கு  மாநில  முதல்வர்  லிம்  குவான்  எங், பாஸ்  வெளியேறுவதால்  மாநில  அரசில்  காலியாகும்  இடங்களை  நிரப்புவதில்  பிரச்னை  இருக்காது  என்கிறார். “தகுதிபெற்ற  மலாய்க்காரர்கள்  பலர்  இருக்கிறார்கள். அவர்களைக்  கொண்டு  பதவிகள்  நிரப்பப்படும்”, என்றாரவர். பாஸ்  கட்சி  முன்னாள்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு பூலாவ்  பினாங் நீர்…

ஐஜிபியின் அதிகார வரம்பு மீறலை கடுமையாகச் சாடினார் சுரேந்திரன்

  கோலாலம்பூரில் 1எம்டிபி விவகாரம் குறித்து விவாதிக்க விருந்த பொதுக் கருத்தரங்கை தடுத்து நிறுத்தியதற்காக போலீசாரின் நடவடிக்கைகளை படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கடுமையாக தாக்கிப் பேசினார். இது போலீஸ் படைத் தலைவரின் அதிகார வரம்பு மீறலுக்கான மிக அண்மைய சம்பவமாகும். நாட்டின் பாதுக்காப்புக்கு எதிரான…

லிம் கிட் சியாங்; பாக்கத்தான் செத்து விட்டது!

  பாஸ் கட்சி அதன் 61 ஆவது முக்தாமாரில் டிஎபியுடனான உறவை துண்டிக்கும் முன்மொழிதலை ஏற்றுக் கொண்டதுடன் பாக்கத்தான் மக்கள் கூட்டணி இறந்து விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரகடனம் செய்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு தாம் இன்னும் இரண்டு வாரத்திற்குப் பின்னர்…

பினாங்கு அரசாங்க பதவிகளிலிருந்து மாட் சாபு விலகுகிறார்

பாஸ் கட்சி அதன் மாநாட்டில் டிஎபியுடனான உறுவுகளை முறித்துக் கொள்ள எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து பினாங்கு மாநில அரசில் தாம் வகித்து வரும் பதவிகளிலிருந்து விலகப் போவதாக பாஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். "நான் அதற்கு கீழ்ப்படியாவிட்டால், நான்…

சாபா நிலநடுக்கம்: துயிலுறியும் சுற்றுலாப் பயணிகள்கள்தான் காரணம் என்கிறார் துணை…

  நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார். "இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள்…

பாஸ்-டிஎபி மணவிலக்கு: ஏன் விவாதம் இல்லை, பேராளர்கள் கேள்வி

  பாஸ் கட்சியின் 61 ஆவது மாநாட்டில் விவாதம் ஏதும் இன்றி கட்சியின் உலாமாக்கள் பிரிவு முன்வைத்த டிஎபியுடனான உறைவைத் துண்டிக்கும் முன்மொழிதலை கட்சி ஏற்றுக்கொண்டதற்கு பேராளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறான முடிவை எடுப்பதற்கு கட்சிக்கு துணிவு இருக்கையில், இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு பேராளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்…

பேராளர்: டிஏபியை வெட்டி விடுவது பற்றி 30 நிமிடத்தில் முடிவு…

டிஏபி-யுடன்  உறவுகளைத் துண்டித்துக்  கொள்வதில்  அவசரம்  கூடாது  என  சிலாங்கூர் பேராளர்  சாபி  ங்கா  பாஸ்  முக்தாமாரில்  எச்சரித்தார். உலாமா  பிரிவு  கொண்டுவந்த  தீர்மானத்தை  நடப்பு  முக்தாமாரில்  விவாதிப்பது  மட்டும்  போதாது  என்றாரவர். “நல்ல  தீர்மானம்தான். ஆனால், நன்றாக யோசித்துப் பாஅருங்கள், ஒருவரை 'Aku ceraikan kau' என …

சாபா நிலநடுக்கத்தில் ஐவர் பலி?!

இன்று காலை சபா, ரானாவைத் தாக்கிய  ரிக்டர்  கருவியில்  5.9  என்று பதிவான நிலநடுக்கத்தால் கினாபாலு  மலையில் உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கினபாலு மலை 1 நிமிடம் குலுங்கி,  அக்குலுக்கலில்  சரிந்து  விழுந்த  பாறைகளால் குறைந்தது ஐந்து  பேராவது  தாக்கப்பட்டிருக்கலாம் என  த  ஸ்டார் …

கலந்துரையாடலில் கலந்துகொள்ள பிரதமர் தயாராக இருந்தார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  நடைபெறவிருந்த  கலந்துரையாடலில்  கலந்துகொள்வதற்காக வீட்டைவிட்டுப்  புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்  கொண்டிருந்தார். அப்போது  போலீஸ்  அவரிடம்  அதில்  கலந்துகொள்ள  வேண்டாம்  என்று  அவருக்குக்  கூறியது. கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள்  இதனைத்  தெரிவித்தனர். “பிரதமர்  புறப்பட்டு  வரத்  தயாராகி  விட்டார்...... அப்போதுதான்  போலீஸ்  தலையிட்டது”, என  …

ஐஜிபி: என் முடிவு பிரதமருக்கும் பிடிக்கவில்லைதான்

பிரதமருடனான  கலந்துரையாடலை இரத்துச்  செய்யும்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு பக்காரின்  முடிவு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  பிடிக்கவில்லைதான். மலேசியாகினியிடம்  பேசிய காலிட்  இன்று  காலை   தம்  முடிவைப்  பிரதமரிடம்  தெரிவித்ததாகக்  கூறினார். “என்  முடிவு பிரதமருக்கும்  பிடிக்கவில்லைதான். ஆனால் பாதுகாப்புக்  காரணங்களுக்காகவும்  இணக்கநிலையைக்  காக்கவும்…

பிரதமர் வரவில்லை; நிகழ்வின் நாயகனாக மாறினார் மகாதிர்

இன்று  காலை  புத்ரா உலக  வாணிக  மையத்தில் பிரதமருடனான  கலந்துரையாடலில் சூடான  வாதத்தையும்  எதிர்வாதத்தையும்  எதிர்பார்த்து  பெருங்  கூட்டம்  கூடியிருந்தது. அதற்காகவே  வந்தவர்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டும்  காலை 8.50-இலிருந்து  அங்கு காத்திருந்தார். ஆனால், போலீஸ் பாதுகாப்பு  காரணங்களுக்காக “ஒளிப்பதற்கு  எதுவுமில்லை” என்ற  அந்நிகழ்வை  இரத்துச் …

மகாதிர்: ஆயுதமாக வைத்திருக்கிறேன்? ஏன் இந்தப் பயம்?

தம்மைக் கண்டு யாருமே  பயப்பட  வேண்டிய  அவசியமில்லை என்கிறார் டாக்டர்  மகாதிர்  முகம்மட்.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  1எம்டிபி  மீதான “ஒளிப்பதற்கு  ஒன்றுமில்லை”  என்ற கலந்துரையாடலுக்கு  வருவதாகச்  சொல்லிவிட்டு  வரத்தவறியதை  அடுத்து  மகாதிர்  இவ்வாறு  கூறினார். “நான்  ஒரு  சாதாரண  மனிதன். என்னிடம்  ஆயுதங்கள் …

பாஸ் கட்சி தேர்தல்: ஹாடி வென்றார், மாட் சாபு தோற்றார்

  பாஸ் கட்சியின் தலைவரான அப்துல் ஹாடி அவாங் கட்சி பேராளர்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மீண்டும் கட்சியின் தலைவரானார். துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் முகம்மட் சாபுவை துவான் இப்ராகிம் துவான் மான் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கட்சியின் இதர பதவிகளுக்கான…

நாளை மகாதிர்-நஜிப் நேருக்கு நேர் மோதல் நிகழுமா?

நாளை பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அவரின்   குருவாக  இருந்து  எதிரியாக  மாறியுள்ள  டாக்டர்  மகாதிர்  முகமட்டை நேருக்கு  நேர்  சந்திப்பாரா? கடந்த  செவ்வாய்க்கிழமை, வழக்குரைஞர்களைக்  கொண்ட  என்ஜிஓ-வான  சுகாகுவாம் சமூக  அமைப்புகள்  நஜிப்பைச்  சந்தித்துப்  பேச  2-மணி  நேர  கலந்துரையாடலுக்கு  ஏற்பாடு  செய்திருப்பதாகக்  கூறியிருந்தது. அதில் கேள்வி-பதில் …

மகாதிர்: நஜிப் பதவி இழக்கும்போது சட்டம் சும்மா விடாது

இப்போதுள்ள  அதிகாரிகளுக்கு  1எம்டிபி  விவகாரத்தை  விசாரிக்கும்  துணிச்சல் இருக்குமா  என்றால்  இருக்காது. ஆனால், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  இழந்தாரானால்  சட்டம்  அதன்  வேலையைச்  செய்யத்  தொடங்கிவிடும்  என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “அரசியல்வாதிகளும்  அரசு  அதிகாரிகளும்  ஆதாரங்களை  மூடி  மறைத்ததற்கான  ஆதாரங்கள்  கொட்டிக்  கிடக்கின்றன. “அடுத்த …

மலேசிய எல்லைக்குள் சீனக் கப்பல் ஊடுருவல்;ஈராண்டுகளாக அதே இடத்தில் நங்கூரமிட்டுள்ளது

மலேசிய  எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்த  சீனக்  கடலோரக்  காவல்படை  கலமொன்று  மலேசியாவின்  தனிப்பட்ட பொருளாதாரப்  பகுதிக்குள்  நங்கூரமிட்டு  நின்று  கொண்டிருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்  ஷாஹிடான்  காசிம்  கூறினார். ஷஹிடான்,  சரவாக்கிலிருந்து  84 கடல்மைல் (156கி.மீ)  தொலைவில்  தென்சீனக் கடலில்  உள்ள  பாதிங்கி  அலி  மணல் திட்டுப்  பகுதிக்கு  அதிகாரப்பூர்வ …

சரவாக்கில் நஜிப்புக்கு பிரமாதமான வரவேற்பு

டாக்டர் மகாதிர்  முகமட்டைவிட  சரவாக்கின்  வளர்ச்சிக்கு  அதிகம்  செய்துள்ளவர்  என மாநில  முதலமைச்சர்  அடினான்  சதேமால்  புகழப்பட்டவரான  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  வரவேற்க  இன்று  காலை  கூச்சிங்  ஸ்டேடியம்  பெர்பாடுவானில்  ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்கள்  திரண்டிருந்தனர். “12 ஆயிரத்துக்கும்  அதிகமானோர்” கூடியிருந்ததாக  பெர்னாமா  கூறியது. நஜிப்பும்  அவரின்  துணைவியார் …

ஜாஹிட்: ஒத்துப்போகாதவர்கள் விலகுவதே மேல்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள் “சொல்லாமல்  கொள்ளாமல்” பதவி விலகுவது   நல்லது  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. அமைச்சர்களை  நியமிக்கவும்  நீக்கவும்  அதிகாரம்  படைத்தவர்  பிரதமர். எனவே, அமைச்சரவை  உறுப்பினர்களுக்கு   பிரதமர்   எடுக்கும்  முடிவுகளுடன்  ஒத்துப்போகும்  கடப்பாடு உண்டு  என்றாரவர். “எந்தவொரு  அமைச்சருக்கும்…

பக்கத்தான் கூட்டணியில் இருக்க ஹாடி ஒப்புக்கொள்கிறார்-நிபந்தனைகளுடன்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், பக்கத்தான்  ரக்யாட்டுடன்  அரசியல்  ரீதியில் பாஸ்  ஒத்துழைக்கும்  என்று  கூறினார். ஆனால்,  அந்த ஒத்துழைப்பு “பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட”  இடங்களில் மட்டுமே. அடக்குமுறை, ஊழல், வீண்  பணச்  செலவு  போன்றவற்றுக்கு  எதிராகவும்  நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மைக்காகவும்  பாஸ்  பக்கத்தானுடன்  சேர்ந்து  போராடும். ஆனால், மற்ற …