உலகளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.   சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது.…

வடகிழக்கு நைஜீரியாவில் பன்னாட்டுப் படைத்தளம் போக்கோ ஹராம் பிடியில்

தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம், வடகிழக்கு நைஜீரியாவில் கைப்பற்றியுள்ள பன்னாட்டுப் படைத்தளத்தின் மீதான தனது பிடியை மேலும் பலப்படுத்தியுள்ளது. நைஜீரியவின் வடகிழக்கில் போக்கோ ஹராமின் பிடி இறுகிறது?   அப்படைத்தளத்தின் கட்டுப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. பாகா எனும் இடத்தில்…

ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்: அலறித்துடித்த பயணிகள்

சுரபயா, ஜன.5- இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன் அதன் என்ஜினும் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறித்துடித்தனர். உடனே…

அமெரிக்காவுக்கு வடகொரியா மீண்டும் எச்சரிக்கை

அமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும்   வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் புதிய பொருளாதார தடைகள் வடகொரிய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை என்று குற்றம் சுமத்தியிருக்கும் வடகொரிய அரசு, இதன் இறுதிப்பலன்கள், எந்த நோக்கத்துக்காக இந்த தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டனவோ, அதற்கு நேர் எதிரானவையாக அமையும் என்று எச்சரித்திருக்கிறது.…

வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடை

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது இணையதளத் தாக்குதல் தொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவில் அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். அந்த உத்தரவின்படி, வட கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மீதும், 10 நபர்கள் மீதும் புதிய…

நள்ளிரவில் 40 மாணவர்கள் கடத்தல்: எல்லை மீறும் தீவிரவாதிகளின் அட்டூழியம்

நைஜீரியாவில் 40 மாணவர்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தனிநாடு கோரி அரசுக்கு எதிராக போராடும் போகோ ஹாரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு மலாரி(Malari)…

தாய்மார்களை திசைதிருப்பும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஆபத்தின் பிடியில் குழந்தைகள்!

குழந்தைகளை ஜிகாதிகளாய் மாற்ற இளம் தாய்மார்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் தங்களது இயக்கத்தில் அதிக ஜிகாதிகளை சேர்க்க, இளம் தாய்மார்கள் தங்கள்…

புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு:அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

நியூயார்க்:புற்றுநோய் செல்களின் உயிரியல் கடிகாரத்தை மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூலக்கூறு '6-தியோ-2 (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த…

தென்கொரியாவுடன் பேச வடகொரியா விருப்பம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்   வடகொரியத்தலைவர் கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் அரச தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரையில் இந்த அறிவிப்பை செய்திருக்கிறார். வடகொரியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தென்கொரியாவின் அதிபர் பார்க் கொய்ன் ஹையுடன் பேச்சுவார்த்தை…

சிரியா மோதல்களில் கடந்த ஆண்டில் 76,000 பேர் பலி

சிரியாவில் நடந்து வரும் மோதல்களில் கடந்த ஆண்டில் மாத்திரம் 76, 000 பேர் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சிரியாவில் உள்நாட்டுப் போர் 2011 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இந்த அளவுக்கு உயிரிழப்பு வேறு எந்த ஆண்டிலும் ஏற்பட்டதில்லை. சிரியாவின் அலெப்போ நகர்   கொல்லப்பட்டவர்களில் கால்வாசிப் பேர்…

வெள்ளைத் தோலுடன் பிறந்த ஆப்ரிக்கப் பெண் மாயமானது குறித்து விசாரணை

இயற்கைக்கு மாறாக வெள்ளைத் தோலுடன்(அல்பைனோ) பிறந்த பெண் ஒருவர் காணமல் போனது குறித்து நான்கு பேரை தான்சானியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வெள்ளைத் தோல் கொண்ட பெண்   நாட்டின் வட பகுதியில் உள்ள மவாசா என்ற இடத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் காணமல்…

விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை காரணமா?

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டிருந்தது. மோசமான காலநிலையும் விமான விபத்தும்   தனது பாதையில் இருந்து இன்னமும் உயரமாக பறப்பதற்கு அந்த விமானத்தின் ஓட்டுனர் அனுமதி கோரியிருந்தார். உலகெங்கும் நடந்த…

உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே

சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது   ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு…

புடின் பெரிய புத்திசாலியல்ல – ஒபாமா

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அப்படியொன்றும் பெரிய புத்திசாலி கிடையாது என்றும் கிரைமியாவை யுக்ரேனிடமிருந்து கைப்பற்றியது அவர் செய்த பெரிய தவறு என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். என் பி ஆர் வானோலியிடம் பேசும் ஒபாமா   என் பி ஆர் என்ற வானோலி சேவைக்கு பேட்டியளித்த…

10 வயதுச் சிறுமிகளை பணத்துக்காக 70 வயது மாப்பிளைகளுக்கு கட்டி…

பத்து வயதுச் சிறுமிகளை அவர்களின் தந்தைமார்கள் பணத்துக்காக எழுபது வயது “மாப்பிள்ளைக்கு” திருமணம் செய்வது அதிகரித்து வருவதால் பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அண்மைக்காலங்களாக இது தொடர்பாக கடும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதைக்…

போக்கோ ஹராம் மீது கேமரூன் வான்படைகள் தாக்குதல்

நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தயார் நிலையில் கேமரூனின் படைகள்   கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின்…

ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கட்டுப்படுத்தும் தமது 13 வருடகால இராணுவ நடவடிக்கையை நேட்டோ படைகள் பூர்த்தி செய்துள்ளன. ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும்   இந்த நடவடிக்கைகளை முறைப்படி முடித்து வைப்பதற்கான நிகழ்வு ஒன்று காபூலில் நடத்தப்பட்டது. இனிமேல் அங்கு பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக, ஆப்கான் படைகளுக்கு…

பாக்: அஹ்மதியா பிரிவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கொலை

பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் தொடந்து கொல்லப்படுகிறார்கள்   பாகிஸ்தானின் கிழக்குப்பிரதேசத்தில் அந்நாட்டின் சிறுபான்மையினமான அஹ்மதியா இஸ்லாமிய மதப்பிரிவைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார். குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்த நபரை அந்த துப்பாக்கிதாரி தலையில் சுட்டுக்கொன்றதாக அஹ்மதியா மதப்பிரிவின் சார்பில்…

சட்டவிரோதமாக படகில் பயணித்த 1,300 அகதிகள்: சுற்றிவளைத்த கடற்படை

ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக குடியேற சென்ற 1300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எனவே அங்குள்ள மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக படகு மூலம் செல்கின்றனர். அப்படி செல்லும் அவர்கள் இத்தாலி கடற்பகுதியை தாண்டிதான் செல்ல வேண்டும். படகுகளில் அனுமதிக்கப்பட்ட…

அல்ஷபாப் மூத்த உறுப்பினர் பிடிபட்டார்

சொமாலியாவில் கென்யாவுடனான எல்லையருகிலுள்ள ஒரு ஊரில் இஸ்லாமியவாத ஆயுதக் குழுவான அல்ஷபாப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரைப் பிடித்துள்ளதாக சொமாலிய அதிகாரிகள் கூறுகின்றனர். சொமாலியாவில் அல்ஷபாப் ஆயுதக் குழுவினர்   துப்பு தகவல் ஒன்று கிடைத்ததை வைத்து சொமாலியப் படைகள் தேடியதில் ஸகாரியா இஸ்மாயில் அகமது ஹெர்சி என்பவர் ஒரு…

லிபியாவில் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்: 19 வீரர்கள் பலி

லிபியாவில், எண்ணெய் கிடங்கு ஒன்றைக் கைப்பற்றும் முயற்சியில் போட்டி ஆயுதக் குழுவினர் வியாழக்கிழமை நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில், ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். எனினும், எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றும் ஆயுதக் குழுவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அல்-சிட்ரா துறைமுகத்திலுள்ள எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றுவதற்காக, ஃபஜர்…

பெஷாவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்புகள் உள்ளன.   இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள்…

ஈராக் ‘டிவி’யில் ‘ரியாலிட்டிஷோ’: மனம் திறக்கும் பயங்கரவாதிகள்

பாக்தாத்: ஈராக்கில், தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பயங்கரவாதத்தால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே பரப்ப, ஈராக் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஈராக் அரசின் 'அல்…