எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா! சீனா இராணுவம் தொடர்ந்து குவிப்பு

டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப் போவதில்லை என கூறியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் இராணுவத்தை அதிக அளவுக்கு குவித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹிம் சிங்கிற்கு 10 வருடம்…

டெல்லி: 'தேரா சச்சா சவுதா' என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு…

தாஜ்மகால் சிவன் கோயிலா? கல்லறையா? முதன்முறையாக மத்திய அரசு தகவல்

உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் ஒரு கோயில் அல்ல என்றும் அது ஒரு கல்லறை என்றும் ஆக்ரா நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு முதன்முறையாக தெரிவித்துள்ளது. “12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்தி தேவ் என்பவரால் தஜோ மஹாலாயா (சிவன்) கோயில் கட்டப்பட்டது. பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான் சிங்…

குண்டர் கும்பலின் தலைவன் சாமியார் ராம் ரஹீமை சுதந்திரமாக நடமாட…

சண்டிகர்: 36 பேரை படுகொலை செய்த ஒரு வன்முறை கும்பலின் தலைவனாகிய சாமியார் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப், ஹரியானா அரசுகள் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், ஹரியானா அரசுகளை மிரட்டும் வகையில் தேரா சச்சா சவுதா என்கிற ஆன்மீக அமைப்பை நடத்தியவர் ராம்…

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.16 கோடி(RM 1.07 கோடி) செம்மரக் கட்டைகள்…

சென்னையிலிருந்து கடல் மார்க்கமாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சுமார் 40 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. துணிகள், தரைவிரிப்புகள் இருப்பதாக கூறப்பட்ட…

காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர் உள்பட 7…

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஐந்து இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மூன்று காவல் துறையினர், இரண்டு துணை ராணுவப் படையினர்…

ராம் ரஹிமின் 1000 ஏக்கர் ஆசிரமத்திற்குள் 1 லட்சம் ஆதரவாளர்கள்..…

சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது. சிர்சா மாவட்டத்தில் ராம் ரஹிமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். ஆண்,…

யார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்?

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சாமியார்.   தனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று சண்டீகர் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  …

அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்! கலவரத்தில் 30 பேர் பலி!

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமியார் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் கலவரம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30…

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சர்ச்சைகளின் உச்சம்தான் தேரா…

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் தேரா சச்சா ராம் ரஹீம் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளின் உச்சமாக இருப்பவர். தேரா சச்சா சவுதா என்பது சீக்கிய ஆன்மீக இயக்கம். இதற்கு சீக்கிய மத தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு…

நீதிமன்ற தீர்ப்பையடுத்து கைதானார் ராம் ரஹிம்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ராணுவம்

சண்டீகர்: பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் ராம் ரஹிம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், கோர்ட்டுக்கு உள்ளே வைத்து ராம் ரஹிமுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, ராணுவ கட்டுப்பாட்டில் ராம் ரஹிம் கொண்டுவரப்பட்டு கைது…

இயற்கை முறையில் சதுர்த்தி விழா…தமிழகத்தில் களை கட்டும் விதை விநாயகர்…

சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இளைஞர்களின் முயற்சியில் பசுமை விநாயகர், கிரீன் விநாயகர் என்ற பெயரில் விதை விநாயகர் சிலைகள் வலம் வரத் தொடங்கியுள்ளன. இயற்கையை பகைத்துக் கொண்டால், பகைத்தவர்களுக்குத் தான் நஷ்டம் என்பதை பருவநிலை மாற்றங்கள் உணர்த்தியுள்ளன. உணவு, சமையல் முறை, இயற்கையை…

சிறையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய பேரறிவாளன்…

சென்னை: ஒருமாத காலம் பரோல் அளிக்கப்பட்டதை அடுத்து பேரறிவாளன் வேலூர் சிறையில் விடுதலை செய்யப்பட்டார். 26 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டைக்கு வந்துள்ளார். வீடு திரும்பிய பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் ஆரத்தி எடுத்து வரவேற்றார். ராஜீவ்காந்தி சிறை வழக்கில் 26 ஆண்டு காலம்…

ஐரோப்பியர்களுக்கும் சாமரம் வீசிய தமிழன்!

“மக்களின் நலனுக்காக செயல்பட ஒருவர் கூட இல்லை!. மக்கள் துன்பத்தை அமைதியாக சகித்துக் கொண்டார்கள். தாங்கள் அனுபவிக்கும் கடும் துன்பம் பற்றி, அவர்கள் ஒரு பதிவு கூட  செய்யவில்லை” 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக சமூகத்தின் நிலையைப் பற்றி, ஆங்கில அதிகாரி சார்லஸ் ஸ்டூவர்ட் குரோல் என்பவர் 1688ம்…

நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!

"எனது குடும்பம் உடைந்து சிதறியதால் ஏற்பட்ட வலி என்னை பாதித்தது. என்னைப்போல மேலும் பெண்கள் இத்தகைய வலியை அனுபவிக்கக்கூடாது என்று நினைத்தேன். இது இஸ்லாமிய பெண்களுக்கு மிக முக்கியமான நாள்" மும்முறை தலாக் சொல்லி உடனடியாக பெண்ணை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை முகமலர்ச்சியுடன்…

இது எப்படி சாத்தியமானது..? இந்திய பணக்காரர்களில் நான்கில் ஒரு பங்கு…

மார்வாடி மக்கள் இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த மார்வார் மக்கள் ஆவர். வறண்ட பாலைவனப் பகுதியைச் சேர்ந்த மார்வாடிகள் வணிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், வளங்களைச் சிக்கனமாகச் சேமித்து வாழத் தெரிந்தவர்கள். இதனால் தான் மார்வாடிகளால் வணிக உலகில் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்திய…

மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை

மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, பருவம் தவறிய மழையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.34 ஆயிரம் கோடி பயிர் கடனை அறிவித்தார். எனினும் அதன்பிறகும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து…

டோக்லாம் மோதல் விவகாரம்; ராஜ்நாத் சிங் நம்பிக்கையை சீனா நிராகரித்தது

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லியில் நேற்று மத்திய உள்துறை…

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க… பிரதமர், ஜனாதிபதிக்கு தமிழக…

டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு மனு எழுதி வைத்துள்ளனர். காவிரி மேலாண் வாரியம்…

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  முருகன், கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனைக் கைதிகள் பொதுவாக 14…

ஈழ உணர்வாளர்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்! திடுக்கிடும் ஆதாரம்..

நாளுக்கு நாள் தமிழக அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் தமிழகத்தின் எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகின்றது? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈழ உணர்வாளர்களுக்குள் உட்புகுந்து விட்டதா? போன்ற வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள், இன அழிப்புகள் என்பன தினமும்…

சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையையும் நடைபெற்று…

உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக…

உசிலம்பட்டி: கனடாவில் நடைபெற்ற சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கணேஷுக்கு உசிலம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கனடாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப்…