வாழ்க்கை

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

கூடு விட்டு போகும் உயிர் 
வீடு விட்டு போகும் உடல் 
lifeகாடு வரை வரும் பேச்சு 
நாடு நாளை மறந்தே போகும் 
தேடும் செல்வம் தொடர்வதில்லை 
மாடு போன்ற உழைப்பு முற்றும். 

ஓடுகின்ற வாழ்க்கைதனில் 
பாடும் என்னை நாட வைத்து 
ஆடெனச் சொல்லி அலைய விட்டு 
கேடுகள் சூழ்ந்த பிறவி தந்த 
ஈடு இல்லா இறைவனைக் கேட்டேன்…. 

வாடும் பயிரோ உழவனின் நோக்கம்?

-செந்ஜென்

TAGS: