சீ- விளையாட்டு பூபந்து போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் பெற்று தினா-தான் சாதனை, தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னணி ஜோடியான பேர்லி தான்-தினா முரளிதரன் 86 நிமிட விருவிருப்பான கடிமையான போட்டியின் இறுதியில், இன்று SEA Games தாய்லாந்து 2025…
கிளாந்தான், கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதிக்குப் பி.எஸ்.எம். குறிவைத்துள்ளது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர்கள் கிளாந்தானிலும் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. துரதிஸ்டவசமாக, டிஏபி-ஐப் போலவே, கோத்தா லாமா சட்டமன்ற தொகுதியையே பி.எஸ்.எம். கட்சியும் குறிவைத்திருக்கிறது. கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் 3 சட்டமன்றங்களில் கோத்தா லாமாவும் ஒன்றாகும். எதிர்வரும் அக்டோபர் 14-ல், பி.எஸ்.எம்.…
சார்ல்ஸ் சந்தியாகோ : நாட்டின் கல்வி முறை, இந்திய மாணவர்களைப்…
கல்வி மக்களின் அடிப்படை உரிமையாகும், இன அடிப்படையில் அதனை அரசியலாக்கக் கூடாது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். உயர்க்கல்வி கூடங்களில் (ஐபிடிஏ), இந்திய மாணவர்களுக்கு 700 இடங்களை ஒதுக்க வேண்டுமென்ற, பிரதமரின் அறிவிப்பு குறித்து சந்தியாகோ கருத்துரைத்தார். நாட்டின் தற்போதையக் கல்விமுறை, ஒரு சாராருக்குச்…
‘கமுக்கமாக’ கோட்டா முறையைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன, தேசியக்…
ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைக் (கோட்டா) ‘கமுக்கமாக’ பயன்படுத்தும் பொது உயர்க்கல்வி கூடங்கள் (ஐபிடிஏ), நாட்டில் இருக்கவே செய்கின்றன என்று முன்னாள் தேசியக் கல்வி ஆலோசகர் கூறுகின்றார். இருப்பினும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது அதிக அளவில் இல்லை எனவும் பேராசிரியர் தியோ கொக்…
மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பி.எஸ்.எம். ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்க, பக்காத்தான் ஹராப்பானுடன் ‘தேர்தல் கூட்டணி’ வைக்க மலேசிய சோசலிசக் கட்சி விரும்புகிறது. பி.எஸ்.எம். 15 சட்டமன்றங்களிலும் 5 நாடாளுமன்றங்களிலும் போட்டியிடும் எண்ணம் கொண்டுள்ளதால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இது உதவும் என, பி.எஸ்.எம்.…
சிவநேசன் : பி.எஸ்.எம்.-உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது
பேராக் மாநில டிஏபி உதவித் தலைவர் எ.சிவநேசன், பி.எஸ்.எம்.-உடன் ஒத்துழைப்பதால் டிஏபி-க்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதால், அக்கட்சியை ஹராப்பானுடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரித்தார். "அவர்கள் எங்களுக்கு விரோதமாக செயல்பட்டாலும் சரி, உண்மையாக ஒத்துழைக்க நினைத்தாலும் சரி, பக்காத்தான் ஹராப்பானுக்கு அதனால் இழப்பு எதுவும் இல்லை," என்று…
டாக்டர் பூ : பி.எஸ்.எம்.-ஐ ஹராப்பான் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்
டிஏபி-ஐ சேர்ந்த ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் பூ செங் ஹாவ் மலேசிய சோசலிசக் கட்சியைப் பக்காத்தான் ஹராப்பானின் 5-வது உறுப்புக் கட்சியாக இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பி.எஸ்.எம். இணைவதால் எதிர்க்கட்சி கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்பதை, ஹராப்பான் தலைமைத்துவம் உணர்ந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஹராப்பான் கூட்டணியில்…
பி.எஸ்.எம். : தேர்தல் இருக்கை விவாதத்தில் அஸ்மின் உண்மையாக இல்லை
14-வது பொது தேர்தல் தொகுதி விவாதத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உண்மையாக இல்லை என்பதால், அவரின் அழைப்பை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினரான எஸ் அருட்செல்வன், அஸ்மின் கட்சிக்குக் கொடுத்த பழைய வாக்குறுதிகளையே ‘மறுசுழற்சி செய்வதாக’ கூறினார்.…
5 மடங்கு அதிக வாக்குகளோடு, பாகான் டத்தோவைத் தக்கவைக்க ஷாஹிட்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கடந்த பொதுத் தேர்தலைவிட 5 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று, பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள துணைப் பிரதமர், ஷாஹிட் ஹமிடி இலக்குக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 13-வது பொதுத் தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியை 2,108 பெரும்பான்மை ஓட்டுகளில் அவர்…
நோ ஓமார் : சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகும் ஆசை…
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் சிலாங்கூரைக் கைப்பற்றினாலும், மந்திரி பெசார் ஆகும் ஆசை தனக்கு இல்லை என, அம்மாநிலத்தின் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஓமார் கூறியுள்ளார். இதுநாள் வரை, சிலாங்கூர் மாநில மக்களுக்குத் தானும் பாரிசானும் வழங்கிய சேவைகள் நேர்மையானவை, எந்தவொரு பிரதிபலனையும் பதவியையும்…
எம்.ஏ.சி.சி. : 2008-ல் இருந்து, உறுப்பினர்கள் அதிகரிப்புக்காகக் காத்திருக்கிறோம்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), 2008-ல் தொடங்கப்பட்ட போது உறுதியளித்தது போல், தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5,000-மாக உயர்த்த வேண்டுமென விரும்புவதாக அதன் துணை ஆணையர் கூறினார். எம்.ஏ.சி.சி.-யின் துணை ஆணையர் (தடுப்பு) ஷாம்ஷுன் பஹாரின் முகமட் ஜமில், தற்போது உள்ள 2,800 பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக…
‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடனான நிகழ்வு – கல்வி…
பினாங்கு மாநிலக் கல்வி இலாகா, ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருள் கொண்ட நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் ஓர் ஆரம்பப்பள்ளியில் ‘அம்னோ & சுதந்திரம்’ எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பால் ஈர்க்கப்பட்ட, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக்…
‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடன் நிகழ்வு நடத்த குழு…
பினாங்கு மாநிலத்தில், ஜனநாயகச் செயற்கட்சியின் (டிஏபி) 10-ஆம் ஆண்டு ஆட்சி நிறைவையொட்டி, அடுத்த ஆண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருளுடன் ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டு, டிஏபி தலைவர் ஒருவர் கல்வி இலாகாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தன்னோடு…
ஷாஹிட் : பள்ளியில் நடந்த ‘அரசியல்’ நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை,…
அண்மையில், புத்ரா ஜெயாவில் ஒரு தேசியப்பள்ளியில், ‘அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு’ என்ற கருப்பொருளில் நடந்த மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டி குறித்து கருத்துரைக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி மறுத்துவிட்டார். இன்று, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், இது போன்ற…
பீர் போத்தல்களை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக ஜமால் கைது செய்யப்பட்டார்
நேற்று ஷா ஆலாம், சிலாங்கூர் செயலகக் கட்டிடத்திற்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கியக் குற்றத்திற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர், ஜமால் யூனுஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். “செகிஞ்சாங்கில், அம்னோ தொகுதி கூட்டம் நிறைவடைந்த பிறகு, நான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மூர்க்கமான…
எம்.ஏ.சி.சி. ‘வாரிசான்’ உதவித் தலைவரைத் தடுத்து வைத்தது
பார்ட்டி வாரிசான் சபா (வாரிசான்) உதவித் தலைவர் பீட்டர் அந்தோணி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைக்கப்பட்டார். நேற்று மாலை, கோத்தா கினாபாலு எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு, விசாரணைக்கு வந்த அவர் தடுத்து வைக்கப்பட்டதை எம்.ஏ.சி.சி. உறுதிபடுத்தியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி கூறியது. நாளை காலை,…
பி.எஸ்.எம். : வீடுடைப்பு விவகாரம், அஸ்மின் அலியின் நிலைபாடு என்ன?
சுபாங் விமான நிலையப் பள்ளிவாசல் பணியாளர்களின் வீடு மற்றும் கடையை இடித்துத் தள்ளிய விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்னவென்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விளக்க வேண்டுமென்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. சுபாங் விமான நிலைய மசூதி கட்டப்பட்ட போது, அதன் வளாகத்தைச் சுற்றி…
பி.எஸ்.எம். : மலேசிய ஏர்லைன்ஸ்-சின் முன்னாள் ஊழியர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்தில்…
மலேசிய ஏர்லைன்ஸ் சிஸ்டம் பெர்ஹாட்டின் (மாஸ்) ஊழியர்கள், கடந்த 2 ஆண்டுகளாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் அவர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, ஆலோசனை பெறாமல் இருக்கும் மனித வள அமைச்சர் , ரிச்சர்ட் ரியோட்டின் போக்கை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சாடியுள்ளது. கடந்த 2015-ல்,…
காஜாங் மருத்துவமனையின், முன்னாள் ஊழியர்களின் 6 வீடுகள் தீபாவளிக்குப் பிறகு உடைக்கப்படும்
காஜாங் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்கள் சிலர், தங்கள் வீடுகளிலிருந்து அக்டோபர் 22-ல் வெளியேற ஒப்புக் கொண்டதால், அவர்கள் குடியிருந்த 6 வீடுகள் உடைபடுவதிலிருந்து தப்பின. இன்று காலை, உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் மற்றும் காவல்துறையினரின் அமலாக்கப் பிரிவினர் சுங்கை ஜெலோக், காஜாங், சிலாங்கூரில் அமைந்துள்ள முன்னாள்…
14-வது பொதுத் தேர்தல் : ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார் யார்?
ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டதாக அறிவித்தது, கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது. சில பிரதான ஊடகங்களின் அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகையில், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பார், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மலேசிய…
ஹிஷாமுடின் : கடற்படை வீரர்கள் இறப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு…
சுங்கை வாங்கி, சித்தியவான் தடுப்புக்காவல் முகாமில் இருந்த அரச மலேசிய கடற்படை (ஆர்எம்என்) வீரர்கள் இருவரின் இறப்பு குறித்த விசாரணையில், எந்தவொரு தகவலும் மறைக்கப்படாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி கொடுத்துள்ளார். மேலும், விசாரணை மேற்கொள்ள அரச மலேசிய போலிஸ் படைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச …
எம்.எ.சி.சி: ஆய்வு வேட்பாளருக்கு மட்டும்தான், குடும்பத்தாருக்கு இல்லை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.எ.சி.சி.), 14-வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மீதான ஆய்வு, போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே, அவர்களின் குடும்பத்தார் அதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அதன் கமிஷனர் சுல்கிஃப்லி அஹ்மத் கூறினார். "அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே செயல்முறை தேவையில்லை ... இது ஒரு சாதாரண…
நஜிப்நொமிக்ஸ் தோல்வியுற்றது – ஆனால், மக்கள் ஏளனம் செய்யப்படுகின்றனர்
சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி ‘நஜிப்நொமிக்ஸ்’ கவலைப்படுவதில்லை என்பதை, அரசாங்கத்தின் சில அணுகுமுறைகள் காட்டுகின்றன என்று, குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங், இன்று வெளியிட்ட ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார். “பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் திமிராகவும் அக்கறையற்றதாகவும் தெரிகிறது. சாதாரண…
14-வது பொதுத் தேர்தல் : சிலாங்கூரில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. சிலாங்கூரில் சுபாங், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய நாடாளுமன்ற இடங்களில், பக்காத்தான் ஹராப்பானுடன் மும்முனை போட்டி ஏற்பட்டாலும், தாங்கள் போட்டியிடப்போவது உறுதி எனப் பி.எஸ்.எம்.…

















