இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
அமெரிக்க பிரேரணை தொடர்பில் இந்தியா விசேட அறிக்கை!– ஆய்வு செய்ய…
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமெரிக்காவின் பிரேரணையையும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை சூழ்நிலைகள்,…
குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரேரணை குறித்தும் கவலை இல்லை!– ராஜபக்ச
அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் அது குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடிய செவ்வி ஒன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும்…
நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர்: இலங்கை ஆவேசம்
இலங்கை தொடர்பில் ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர் என இலங்கை அரசாங்கம் அவரை கடிந்து கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் இன்று பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இவ்வாறு சாடியுள்ளார். சில நாடுகளிடம் இருந்து…
இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா…
இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர். பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் ஜெனீவா நோக்கிப் பயணம் செய்ய உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச…
இலங்கை குறித்து விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம்?
இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளன. இந்த தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்த…
அமெரிக்கா யோசனையின் தீரத்தை குறைக்க வேண்டாம்: இந்தியாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள யோசனையின் தீரத்தை குறைக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு நீதியான தீர்வுக்காணப்பட வேண்டும். எனவே அமெரிக்கா யோசனையின் தீரத்தை குறைக்காமல்…
“கொழும்பு பேச்சுக்கு முன் தமிழக மீனவர் விடுதலை சாத்தியமில்லை”
இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யப் போவதில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், நன்னீர் மீன்பிடிதொழிலில்…
அமெரிக்க தீர்மானம் குறித்து, பல நாடுகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் நகல் வடிவம் மிகவும் வலுவானதாக இறுதி வடிவம் பெற சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணையில் தமிழர்…
வெள்ளைக் கொடிகளுடன் வந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொலை…
விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த மாதம் விடுத்திருந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான…
சர்வதேச விசாரணை: தமிழர்களுக்கு ஏமாற்றம், அரசுக்கு ஆத்திரம்
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை முன்வரைவு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்திவரும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர். பாரதூரமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை…
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுக!– மன்மோகன் சிங் மகிந்தவுக்கு வலியுறுத்தல்!
வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார். மியன்மாரில் இன்று அவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் த ஹிந்து…
இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறை, காணாமற்போதல், படுகொலை சித்திரவதைகள்!- ஐ.நாவில்…
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சமந்தா பவர் விபரிப்பார் என்று நேற்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவ்வுரை இடம்பெறவில்லை என்பதுடன் சமந்தா பவரும் வருகை தரவில்லை. உக்ரேன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து ஆராய, நியுயோர்க்கில் நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்புச்சபை விசேட கூட்டத்தில் பங்கேற்றதால், சமந்தா…
ஐநா தீர்மான வரைவில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை
ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நில நாடுகள் கொண்டுவரவிருக்கும் முன்வரைவின் நகல்கள் கசிந்திருக்கின்றன. இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரும்…
அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயார் என இலங்கை அறிவிப்பு
ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் அமெரிக்க கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவு…
மீளமைப்பு விடயங்களில் இலங்கை தோல்வி அடைந்திருக்கிறது!– சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்போம்!-…
மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக, கனடாவின் இராஜாங்க (வெளிவிவகாரம்) அமைச்சர் லின்னெ யலீச் தெரிவித்துள்ளார். 25வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு இலங்கை சரியான…
இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியா அழைப்பு
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச நடவடிக்கை வேண்டும் என்று பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. இன்று ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் 25வது மாநாட்டிலே பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. இம்மாநாட்டில் உரையாற்றிய பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரு…
மன்னார் ஆயர் உட்பட 204 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நாவிற்கு கடிதம்
இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.…
நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பான் கீ மூன் பாராட்டு
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 25 வது கூட்டத் தொடரில் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின்…
பிரேணைக்கு ஆதரவளிக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கும்? ஆய்வாளர்கள்…
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு, இந்தியா ஆதரவு வழங்காத பட்சத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை மட்டுப்படுத்தி பொருளாதார தடையை ஏற்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டு பிரேரணைகளை முன்வைத்திருந்தது. இந்த இரண்டு பிரேரணைகளிலும் இலங்கை அரசாங்கத்துக்கு…
பிரிட்டன், அமெரிக்க தூதுவர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளனர்!
பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீனும், அமெரிகத் தூதுவர் மிச்செல் சிசனும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்காக ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் இவ்வாறு ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் உயர்ஸ்தானிக ரான்கீன், புதுடெல்லிக்கு விஜயம் செய்து இவ்வாறு ஆதரவு திரட்டியுள்ளார். இலங்கையில் தூதரகம் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…
இலங்கை அரசின் பதிலறிக்கையின் படி நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் திருத்தங்கள்!- ஆங்கில…
இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கையின் படி, நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னர் வெளியிடப்பட்ட வரைபில் இருந்த பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின்…
அனைத்துலக விசாரணை கோரும் தபால் அட்டைகள்: அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ…
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரி வெளியிடப்பட்டுள்ள தபால் அட்டைகளை, மக்கள் தளத்திற்கு கொண்டு செல்ல, பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்கான போராட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளது. ஐ.நாவினை மையப்படுத்திய செயல்முனைப்பில், மக்களையும்…
இந்தியாவை முறித்து சீனாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும்! தேசப்பற்றுள்ள தேசிய…
இந்தியாவுடனான உறவை உடனடியாக முறித்துக்கொண்டு, சீனாவுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேரத்திற்கு ஏற்ப தாளம் போடும் இந்தியாவே எமது முதல் எதிரி. எனவே, சம்பூரில் இருந்து உடனடியாக இந்தியாவை விரட்டியடித்து, சம்பூர் அனல்மின் திட்டத்தினை உருவாக்கும்…