மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மலேசியாகினி வெற்றி!

மலேசியாகினி நாளிதழ் வெளியிடுவதற்கான உரிமம் வழங்குமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மலேசிய உள்துறை அமைச்சுக்கு விடுத்திருந்த உதரவுக்கு எதிராக மலேசிய அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது. "நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்", என்று மேல்முறையீட்டு நீதிமன்ற மூவர்…

‘அல்லாஹ்’ விவகாரம் மீது பக்காத்தான் பணிந்து போகவுமில்லை, பலவீனத்தை வெளிப்படுத்தவுமில்லை

பக்காத்தான் ரக்யாட் ‘அல்லாஹ்’விவகாரம்மீதான அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை நாளை அதன் தேசிய அளவிலான கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கும். பக்காத்தானின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையை பாஸ் கட்சி தயாரிக்கும் என பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் கூறினார். “நாங்கள் பணிந்து போகிறோம். பலவீனத்தைக் காண்பிக்கிறோம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால்,…

முக்ரிஸ்: மசீசவும் கெராக்கானும் டிஏபி-யைக் காட்டிலும் ‘இனவாதம் மிகுந்தவையாக’ தெரிகின்றன

சீன வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வேட்கையில் மசீசவும் கெராக்கானும்  ‘இனவாதம்’ பேசுவதில் டிஏபி-யையும் மிஞ்சி விட்டன என்று முக்ரிஸ் மகாதிர் சாடியுள்ளார். “அவற்றின் பேச்சு பிஎன்னை வலுப்படுத்துவதற்கு உதவுமா என்பதை அவை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஏபி இனவாதம் மிக்கது என்பது தெரிந்ததே. “ஆனால், மசீசவும் கெராக்கானும்…

இழுத்து மூடிவிடுவேன்: ஊடகங்களை மிரட்டினார் ஜாஹிட்

உள்துறை அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி,  ஊடகங்களை எச்சரிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களைத் தொடங்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அவர், காணாமல்போன போலீஸ் துப்பாக்கிகள் பற்றிக் கேள்விகேட்ட மலேசியாகினி செய்தியாளரை நோக்கி, “இனி, அதைப் பற்றிப் பேசவே கூடாது” என்று எச்சரித்தார். அதற்கடுத்த நாள், மலாக்கா,…

பெர்சே மக்கள் நீதிமன்ற விசாரணை: ஏஜியை சாடினார் குர்தயாள்

பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட மக்கள் நீதிமன்ற விசாரணையை ஒரு விளம்பர பகட்டு வித்தை என்று நேற்று கூறிய மலேசிய சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டெய்லை அந்நீதிமன்ற விசாரணையை வழிநடத்திய பேராசிரியர் குர்தயாள் சிங் நிஜார் கடுமையாகச் சாடினார். "மக்கள் நீதிமன்றம் ஒரு…

ஆலய சச்சரவில் அதிகாரிகளின் நடத்தை மிகைப்படியான ஒன்று- மஇகா

ஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் ஆலயத்தில் அமலாக்க அதிகாரிகள் நடந்துகொண்ட முறை அத்துமீறிய ஒன்று என்கிறார் மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். ஞாயிற்றுக்கிழமை அந்த ஆலயத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றிக் கருத்துரைத்த அவர், அமலாக்க அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்றார்.   “சில…

‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’

பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள்  மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய  சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார  விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல்  வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…