`நஸ்லானின் தீர்ப்பைக் கண்ணியமான விவரிக்க வேண்டும்` – ஷாஃபியிக்கு நீதிபதி…

மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலியின் தீர்ப்பை விவரிக்கும் வாதங்களை முன்வைக்கும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப் ரசாக்கின் தலைமை வழக்குரைஞர், முஹம்மது ஷாஃபி அப்துல்லாவிடம் இன்று கேட்டுக்கொண்டது. "அவர் (மொஹமட் நஸ்லான்) எங்குத் தவறு செய்தார் என்பதைக் காட்ட தயவுசெய்து கண்ணியமான சொற்களைப்…

`புதிய இடத்தைத் தேடுவதில் அவசரம் வேண்டாம்` – ம.இ.கா.வுக்கும் மசீசவுக்கும்…

தேசிய முன்னணியின் (பி.என்.) நிலைமை நிச்சயமற்றதாகவும் குழப்பமானதாகவும் இருக்கும் இந்நேரத்தில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். மொஹமட் புவாட் சர்காஷி, உண்மை நிலைமையை உணராமல் சார்ந்திருக்க ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் ம.இ.கா.வும்…

அதிக ஆபத்துக்களைத் தவிர்க்க, ஆசிரியர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுங்கள்

நாட்டின் முனைமுகப் பணியாளர்கள் வரிசையின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டிய ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று, இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியது. கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உள்ள குழுவினர் என்பதால், தடுப்பூசி ஆசிரியர்களுக்கு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு…

வழக்குரைஞர் : நஜிப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கைக் கையாள அனுபவமிக்க நீதிபதி…

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் ஊழல் வழக்கு ஒரு "நூற்றாண்டின் வழக்கு" என்று நஜிப் ரசாக்கின் வழக்குரைஞர் குழு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், குற்ற வழக்குகளில் அனுபவம் குறைந்த உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என அச்சட்டக் குழுவின் தலைவர் முஹம்மது ஷஃபி அப்துல்லா…

‘உறுப்புக் கட்சிகள் சில அறிவிப்பைப் பெறாததால், பி.என். கூட்டம் இரத்தானது’

இன்று இரவு நடைபெறவிருந்த கூட்டம் குறித்து, தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என்று தேசிய முன்னணி (பிஎன்) உறுப்புக் கட்சிகள் கூறியதை அடுத்து, பிஎன் உச்சமன்றக் கூட்டத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது என்று அம்னோ வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. "கூட்ட அறிவிப்பு கிடைக்கவில்லை என்று பிஎன் உறுப்புக் கட்சிகள் கூறியதால்…

‘புதிய கட்டுமானத்தைத் தொடங்கும் நில உரிமையாளர்கள் ஆலயப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க…

கோலாலம்பூர் மாநகர் மன்ற (டி.பி.கே.எல்.) ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர், கோலாலம்பூர் பகுதியில் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக, நிலம் மற்றும் கனிமங்கள் அலுவலகத்தில் (பி.தி.ஜி) காணப்படும் 'நிலச் சுமை' நிலைமைகளை ஒத்திசைக்க தனது தரப்பு செயல்படும் என்று கூறினார். எஸ் ராஜாவின் கூற்றுப்படி, டி.பி.கே.எல்.-இல் இந்த…

அறிக்கை : பிஎன் கூட்டம் இரத்து செய்யப்பட்டது, ஆனால் விளக்கம்…

தேசிய முன்னணி (பி.என்.) கூட்டணியின் உச்சமன்றக் கூட்டம் விளக்கம் இல்லாமல் இரத்து செய்யப்பட்டதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இன்று இரவு நடைபெறவிருந்த அக்கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக, பி.என். தகவல் தொடர்பு பிரிவில் இருந்து, புலனச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது. இருப்பினும், இரத்து செய்யப்பட்டதற்கான எந்த…

குலா : ‘பட்டதாரிகள் நன்றியுடன் இருக்க வேண்டும்’, முஸ்தபாவின் அழைப்பு…

பட்டதாரிகளைத் திறமையற்ற அல்லது திறமை குறைந்த வேலைகளை, குறைந்த ஊதியத்திற்குச் செய்ய ஊக்குவிப்பது பொருத்தமானதல்ல, ஏனெனில் இது நீண்ட கால விளைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கூறினார். இந்நிலைமையைச் சரிசெய்யாவிட்டால், நாட்டில் வேலையின்மை விகிதம் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்…

டிஏபி, மசீச : மகாதீர் குற்றம் சாட்டியதைப் போல் தீவிரப்போக்கு…

இரு கட்சிகளும் சில சமயங்களில் "தீவிரப் போக்குடன்" செயல்படுகின்றன என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் குற்றச்சாட்டுகளை டிஏபியும் மசீசவும் மறுத்துள்ளன. மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இருவரும் தனித்தனி அறிக்கைகளில், தங்கள்…

டாக்டர் எம் : டிஏபி உடனான ஒத்துழைப்பை அம்னோ முடிவு…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது, டி.ஏ.பி-யுடன் அம்னோ உறவுகளை உருவாக்க முடியும் என்பதனை நிராகரிக்கவில்லை, கட்சி இவ்வளவு காலமாக ம.சீ.ச். உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தேசிய முன்னணியில் அம்னோவுடன் இருக்கும் ம.சீ.ச.-வும் கடந்த காலங்களில் "தீவிரமானதாக" காணப்பட்டதாக அவர் கூறினார். “இது அம்னோவைப் பொறுத்தது. "அம்னோ,…

அமைச்சர் : மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற அரசாங்கம்…

கடந்த மாதப் பிற்பகுதியில், அமெரிக்காவில் இருந்து நெகிழிக் கழிவு பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் நாட்டில் நுழைந்ததைத் தொடர்ந்து, விதிகளைப் பின்பற்றாத மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட, குப்பைகளின் வடிவத்தில் கழிவுகள் நாட்டுக்குள் நுழைவதில் அரசாங்கம் சமரசம் ஆகாது என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு (காசா) வலியுறுத்தியுள்ளது. மலேசியாவை…

சேவியரிடமிருந்து பி.கே.ஆர். RM10 மில்லியனைக் கோரும்

கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கடந்த மாதம் கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, RM10 மில்லியனை அவர் செலுத்த வேண்டும் எனக் கோரி பி.கே.ஆர். கடிதம் அனுப்பவுள்ளது. இந்தக் கடிதத்தைக் கட்சியின் வழக்கறிஞர் சேவியரிடம் நாளை ஒப்படைப்பார் என்றும், அதனைச் செலுத்த அந்த முன்னாள்…

பெர்சத்து : வாக்கு18-ஐ இ.சி. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்

18 வயதில் வாக்களிக்கும் தகுதி தொடர்பான அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2019-இன் திருத்தங்களை, விரைவாக செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்குப் (இ.சி.) பெர்சத்து அழைப்பு விடுத்தது. அரசியலில் இளைஞர்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அங்கீகரிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று, பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுட்டின் கூறியதாக பெர்னாமா…

கோயில் நிலப் பிரச்சனை : ம.இ.கா. தலைவரின் அறிக்கையை இராமசாமி…

ம.இ.கா. 74-வது பொது மாநாட்டில் அதன் தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், இந்து கோயில் கட்டுவது தொடர்பாக வெளியிட்ட நினைவூட்டலைப் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி,  கண்டித்துப் பேசியுள்ளார். விக்னேஸ்வரன் தனது கொள்கை உரையில், நில நிலை தகராறு காரணமாக கோயில்கள் இடிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க,…

“அம்னோ பாஸ்-உடன் ஒத்துழைக்கும் போது, ம.இ.கா. ஏன் பெர்சத்துவுடன் ஒத்துழைக்கக்…

இந்திய சமூகத்தின் நலனுக்காக, அரசியல் ஒத்துழைப்பு குறித்து தனது சொந்த முடிவுகளை எடுக்க கட்சிக்கு உரிமை உண்டு என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று வலியுறுத்தினார். தேசிய முன்னணி உச்சமன்றத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்குத்…

ம.இ.கா. : ஜி.இ15-இல் அம்னோ இடங்களைத் தியாகம் செய்தால் என்ன…

அடுத்தப் பொதுத் தேர்தலில், பாரிசான் நெசனல் கூட்டணியின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க, அம்னோ குறைந்த பட்சம் 10 விழுக்காடு இடங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று, மஇகா 74-ஆவது ஆண்டு மாநாட்டில், தனது கொள்கை உரையில், அடுத்த…

இப்போதைக்கு, ம.இ.கா.வின் ஆதரவு முஹைதீனுக்கும் பெர்சத்துவுக்கும்

பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, தேசிய முன்னணி உச்சமன்றத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாக ம.இ.கா. இன்று அறிவித்தது. இன்று, கிள்ளானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் 74-ஆவது ஆண்டு…

எம்.பி. : வாக்கு18-ஐ அரசாங்கம் நிராகரிக்கக்கூடாது

வாக்களிக்கும் வயது வரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரீம் கூறினார். "வாக்கு18 பிரச்சினையை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் தேர்தல் ஆணையத்திடம் (இசி) வீசுகிறது, பி.என். அரசாங்கம் மற்ற தரப்பினரிடம் அதனை தள்ளிவிட…

பெரும்பாலான ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டால் பள்ளிகள் மூடப்படும் – ராட்ஸி

கோவிட்-19 தொற்றுகளைப் புகாரளிக்கும் பள்ளிகள், பள்ளி நடவடிக்கைகளின் செயல்திறனைப் பாதிக்கும் வகையில் பெரும்பாலான ஆசிரியர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். பள்ளி மூடல் முடிவு, மாவட்டச் சுகாதார அலுவலகம் (பி.கே.டி) நடத்தும் இடர் மதிப்பீட்டையும் கணக்கில்…

ம.இ.கா. இளைஞர் : கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கை…

தகுதியான இந்திய மாணவர்களைக், குறிப்பாக பி40 குழுவினரைப் பொது பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்ஸ், தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், முழு விடுதிப் பள்ளிகள் மற்றும் மாரா அறிவியல் கல்லூரி போன்றவற்றில் அதிகமாக சேரச் செய்வது, ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் 33-வது பொது மாநாட்டின் நான்கு தீர்மானங்களில் ஒன்றாகும்.…

வாக்கு18 ஒத்திவைப்பு, 18 இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு பதிவு

18 முதல் 20 வயதிற்குட்பட்ட மொத்தம் 18 இளைஞர்கள், வாக்களிக்கும் வயதை 18-ஆக (வாக்கு18) மாற்றும் அமலாக்கத்தைத் தாமதப்படுத்தியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர விரும்புகிறார்கள். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், பிரதமர், மலேசிய அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் (இ.சி.) ஆகியோருக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு செய்யப்போவதாக இளம் வாக்காளர்…

பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு : ம.இ.கா. இன்னும் முடிவு செய்யவில்லை –…

ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரலாமா அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாமா என்பது பற்றி கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். இருப்பினும், அம்னோவைப் பின்பற்றி, பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்க ம.இ.கா. முடிவு செய்தால், அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ)…

‘பாலியல் துன்புறுத்தல் மசோதாவைத் துரிதப்படுத்துங்கள்’ – மகளிர் தன்னார்வத் தொண்டு…

பெண்கள் உரிமைக் குழுவான, அனைத்து மகளிர் நடவடிக்கை குழு (ஆவாம்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மசோதாவை (ஆர்.யு.யு.) உடனடியாக முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. முன்னதாக, இந்த மசோதா கடந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எதிர்பார்த்தது, ஆனால் இதுவரை அதன்…