நேற்றிரவு லாஹாட் டத்து, லெம்பா மக்சினாவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தைத் தொடர்ந்து மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் மூவரைக் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 25 மற்றும் 58 வயதுடையவர்கள், மலையேற்றத்திற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்த 17 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
அஸ்ரிக்கும் இராமசாமிக்குமிடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் முஜாஹிட்
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்டிடிஇ) தொடர்பாக பல வாரங்கள் வசவுகளைப் பரிமாறிக்கொண்ட பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடினும் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமியும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர். அவர்கள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய பிரதமர்துறை அமைச்சர் முஜாஹிட் …
சலாஹுடின்: ‘சோம்பேறி’ எம்பி-க்களின் எலவன்ஸ்-ஐ வெட்ட ஒப்புக்கொள்கிறேன், ஆனால்…
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயுப், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காத "சோம்பேறி" நாடாளுமன்ற உறுப்பினர்களின் எலவன்ஸ்-ஐ வெட்ட வேண்டும் எனும் முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம்மின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்நடவடிக்கை…
சேவை மையத்தைத் தந்தையார் ‘ஆக்கிரமிக்கிறார்’ – பத்து எம்பி மறுப்பு
தனது சேவை மையத்தை, தன் தந்தை ஆக்கிரமிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியை, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் மறுத்துள்ளார். பிரபாகரன், 22, ஒரு தொழிலதிபரான அவரது தந்தை, ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாகவே சேவை மையத்தை ஒருங்கிணைக்க உதவுகிறார் என்று விளக்கம் தந்துள்ளார். “தற்போது, என்…
1மலேசியா கிளினிக்குகளை மூட, சுகாதார அமைச்சு அறிவுருத்தவில்லை
1மலேசியா கிளினிக்குகளை மூட, சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் குற்றச்சாட்டை அவ்வமைச்சு மறுத்துள்ளது. எனினும், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சில சமூகக் கிளினிக்குகளை மூடுவதற்கான திட்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். "இதுவரை அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சமூகக் கிளினிக் அல்லது 1மலேசியா…
விடுதலைப் புலிகள் பற்றி இராமசாமியிடம் டிஎபி விளக்கம் கோருகிறது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் 2 ஆதரவு அளிக்கிறார் என்று அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு டிஎபி அவரிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது. இராமசாமியால் சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியோவ் நம்பிக்கை கொண்டுள்ளார். "அவரிடமிருந்து விளக்கம் பெற…
ஸாகிர் வாயைக் கட்டுப்படுத்தவேண்டும்
- கி.சீலதாஸ், ஜூலை 24, 2018. டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் பிரதமரான காலத்திலிருந்து சிறுபான்மையினர் மீதான மதிப்பு பாதிப்புற்ற நிலையை அடைந்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சிறுபான்மையினரின் சமய நம்பிக்கைகூட ஏளனத்திற்கும், இழி நிலைக்கும் உட்படுத்தப்பட்டது மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் கொடுமையான நிலையை …
ஸக்கீரைத் திருப்பி அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டுக்கொள்ளவில்லை- புக்கிட் அமான்
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஸக்கீர் நாயக்கைத் திருப்பி அனுப்பச் சொல்லி இந்திய அரசாங்கம் மனுச் செய்துக்கொள்ளவில்லை என புக்கிட் அமான் போலீஸ் கடிதமொன்று கூறுகிறது. கூட்டரசு போலீசின் சட்டப் பிரிவு ஜூலை 13 தேதியிட்டு அனுப்பிய அக்கடிதத்தை ஸக்கீரின் வழக்குரைஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசீஸ் அவரது …
சிஇபி குறித்துக் கவலை கொள்கிறார் கைரி; அது ஆலோசகர் அமைப்பு…
அரசாங்கத்தின் ஆலோசனை மன்றம் அளவுமீறிய செல்வாக்குடன் விளங்குவதாக கவலைகொள்ளும் கைரி ஜமாலுடின்(பிஎன் -ரெம்பாவ்) அது “தேர்ந்தெடுக்கப்படாத, யாருக்கும் காரணம்கூற வேண்டிய அவசியமில்லாத” ஓர் அமைப்பு என்று வருணித்தார். இன்று காலை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கைரி, சிஇபி தலைவர் டயிம் சைனுடின், நாட்டின் உயர் நீதிபதிகளைக் கூப்பிட்டு …
லொக்மான்: நான் இனவாதி அல்ல; என்னைப் போன்றவர்களே அமைதியைக் கட்டிக்காக்கிறோம்
சுங்கை கண்டீஸ் பிஎன் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடம், தாம் ஒரு இனவாதி அல்ல என்றும் மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்புப்படியான விவகாரங்கள் மீறப்படாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஒரு கண்காணிப்பாளர் என்றும் கூறினார். சமூகக் கலவரங்களைத் தவிர்க்க மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம் …
சைம் டர்பி தலைவராக ஸெட்டி நியமிக்கப்பட்டார்
சைம் டர்பி புரோப்பர்டி பெர்ஹாட், முன்னாள் மத்திய வங்கியின் கவர்னர் டாக்டர் ஸெட்டி அக்தர் அஜீசை இன்று புதியத் தலைவராக நியமித்தது. தற்போது, பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட்-இன் (பி.என்.பி.) தலைவரான ஸெட்டி, கடந்த ஜூன் 30-இல் ஓய்வு பெற்ற அப்துல் வாஹிட் ஒமார்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். சைம் டர்பி…
இந்தியாவில் ஆனந்தாவின் ஊழல், மெக்சிஸ் கருத்துரைக்க இயலாது
ஏர்செல்-மெக்சிஸ் வழக்கு தொடர்பில் கருத்துரைக்க இயலாது என்று மெக்சிஸ் பெர்ஹாட் இன்று தெரிவித்தது. புர்சா மலேசியாவிடம் தாக்கல் செய்த ஆவணத்தில், அந்நிறுவனத்திடமிருந்து எந்தவொரு உத்தியோகப்பூர்வ ஆவணங்களையும் பெறவில்லை என்றும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தெரியாது என்றும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான மெக்சிஸ் மோபைல் தெரிவித்துள்ளது. இந்த…
ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 18 உயர்மட்ட அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர்,…
ஹரப்பான் அரசாங்கத்தை அமைத்ததிலிருந்து 18 உயர்மட்ட அரசு அதிகாரிகளை அவர்களின் பதவியிலிருந்து நீக்கியுள்ளது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார். நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலிருந்து நீக்கப்பட்ட 18 அதிகாரிகள் ஒருவர் பிரதமர் துறையைச் சேர்ந்தவர்.. "பொது நலம்" கருதி…
மகாதிர்: முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை…
பிரதமர் மகாதிர் தம்மால் முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை செய்வேன் இன்று கூறினார். "முடிந்த அளவுக்கு எனது வேலை நேரத்தை நான் விரிவுப்படுத்துகிறேன். நான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வேலை செய்கிறேன். "கூடுதலான நேரத்தை ஒரு நாளுக்கு, ஒரு…
அஸ்மின் அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவாரா?
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எதையும் எளிதில் வெளியில் சொல்ல மாட்டார். கட்சித் தேர்தல் விசயத்திலும் அவர் அப்படித்தான். இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் பொருளாதார விவகார அமைச்சர் என்ற முறையில் அளவுமீறி வேலை இருப்பதாகக் …
உங்கள் கருத்து: முன்பு பிஎன் நாடாளுமன்றம் வருவதில்லை, இப்போது ஹரப்பானா?
‘காலி இருக்கைகள், அமைச்சர்கள் எங்கே?’ கேகேஎஸ்எஸ்எஸ்: நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் இருக்க முடியாது. தயை செய்து நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அது எம்பிகள் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் இடமாகும். மற்ற கூட்டங்களை நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு அப்பாற்பட்ட நேரங்களில் …
மகாதிர்: அரசாங்கத்தையே கெடுத்து விட்டார் நஜிப்; அதைச் சரிசெய்ய நாளாகும்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அரசாங்க இயந்திரத்தையே “கெடுத்துச் சுட்டிச்சுவராக்கி” விட்டார் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றஞ்சாட்டியுள்ளார். அதனால்தான் பல அரசாங்க அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாகவும் எல்லாவற்றையும் சரிசெய்து அரசாங்கம் பழைய நிலைக்குத் திரும்ப நாளாகும் என்றும் …
அடுத்தத் திங்கள்கிழமை ஜிஎஸ்டியை அகற்ற அரசாங்கம் திட்டமிடுகிறது
ஜிஎஸ்டியை அகற்றுவதற்கான முன்மொழிதலை அடுத்தத் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று கூறினார். ஜிஎஸ்டிக்கு மாற்றாக செயல்படுத்தப்படவிருக்கும் விற்பனை மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) மசோதாவும் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். பேரரசரின் உரை மீதான…
பலாகோங் இடைத் தேர்தல்: பாஸ் ஒதுங்கிக் கொள்ளும், மசீச அதன்…
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது போல சிலாங்கூரின் இன்னொரு இடைத் தேர்தலும் பாஸ் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம். அந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்படு வந்த போதிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இடைத் தேர்தலிலும் பங்கேற்காமல் இருப்பதை விரும்புகின்றனர் என்று பாஸின் உதவித் தலைவர் முகமட் அமர்…
ஹரப்பான் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாஸ் சுங்கை கண்டீசில் போட்டியிடவில்லையாம்
பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் களமிறங்கி வாக்குகளைச் சிதறடிக்க விரும்பவில்லை என அக்கட்சி தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். சிலாங்கூர் சட்டமன்ற இருக்கைக்காக நடக்கும் இடைத் தேர்தலில் மக்கள் ஹரப்பானைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நஸ்ருடின் இன்று முகநூலில் பதவிட்டிருந்தார். “அத்தோல்வி தேர்தல் வாக்குறுதிகளை …
நஜிப் பிறந்த நாள் கொண்டாடினார்: எம்எச் 17-ஐ நினைவுகூர்ந்தார்
ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள் மறுபுறம் கூட்டரசு அமலாக்கப் பிரிவுகளின் விரிவான விசாரணைகள் இவற்றுக்கிடையிலும் நேரத்தை ஒதுக்கி முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு தம் 65வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதில் அவரின் குடும்பத்தாரும் 2014-இல் எம்எச்17 விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பத்தார் சிலரும் கலந்து …
யுஇசி சான்றிதழை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை சான்றிதழை (யுசிசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா மேற்கொண்டுள்ள திட்டத்திற்கு கோலாலம்பூரில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். முகநூலில் காமிஸ் (காபுங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் செ-மலேசியா) பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ ஆர்ப்பாட்டக்காரர்கள் "ஹிடுப் ராக்யாட்" மற்றும் "பண்தா யுஇசி" என்று கூச்சலிடுவது…
சுங்கை கண்டிஸ்-ஐ கைப்பற்ற புத்ரா எம்.ஐ.சி. லொக்மான் அடாமிற்கு உதவும்
சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வெற்றியை உறுதிசெய்ய, சிலாங்கூர் ம.இ.கா. புத்ரா பிரிவு இந்திய இளைஞர்களை அணுகும். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 4-ம் தேதி வாக்களிக்க, இளம் வாக்காளர்கள் ஊர் திரும்பவும் தாங்கள் ஆவன செய்யவுள்ளதாக புத்ரா பிரிவின் தலைவர் சசி முனியாண்டி கூறியுள்ளார். “சுங்கை கண்டிஸ்…
சுங்கை கண்டீஸ் பரப்புரைகளில் மசீச பங்கேற்கவில்லையா? மறுக்கிறது பிஎன்
பாரிசான் நேசனல்(பிஎன்), அதன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மசீச சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுவதை மறுத்துள்ளது. வெளிப்பார்வைக்கு மசீச இடைத்தேர்தல் வேலைகளில் பங்கேற்காததுபோல் தெரியலாம் ஆனால், உண்மையில் மசீசவும் பங்கேற்றுள்ளது என பிஎன் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார். “பிஎன் கட்சித் …